Wednesday, October 26, 2011

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

          நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள.

Thursday, September 15, 2011

சபாஷ் முதல்வர்கள் மோடி மற்றும் நிதிஷ்

          வாஷிங்டன்: நாட்டின் பொருளாதாரத்திற்காக பல்வேறு துறைகளில் உள்கட்ட‌மைப்புப்பணிகளுக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்பதில் சிறந்த நிர்வாகத்திறமை உள்ளவர் என இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு அ‌மெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதியன்று அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸில் , சி.ஆர்.எஸ் என்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆய்வுக்குழு 94 பக்க அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது. இதில் இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியின் நிர்வாகத்திறமையினையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில்துறையின் வளர்ச்சிக்கும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த அரசு நிர்வாகம் நடத்துகிறார் நரேந்திரமோடி என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவரைத்தொடர்ந்து பீகார் முதல்வர் நிதீஷகுமாரின் நிர்வாகத்திறமையினையும் அக்குழு பாராட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

                                                                                       நன்றி தினமலர்

Wednesday, September 14, 2011

அமெரிக்காவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

           நியூயார்க்: அமெரி்க்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீ்ழ் வசித்து வருவதாக அந்நாட்டு மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டு்ள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2009-ம் ஆண்டு 43.6மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு (2010-ம் ஆண்டு) 46.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 14.3 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் வாங்கும் சக்தி அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவில் ஆண்டு வருமானம் 11,139 டாலர் ரூ. 5லட்சம் உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எனவும், ஆண்டு வருமானம் 22,314 டாலர்( ரூ. 10 லட்சம்) மேல் என அமெரிக்கர்களின் ஆண்டு வருமானம் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் செல்லும் நிலைமை 6.4 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் இன்றி கடந்த ஆண்டு (2009) 49. மில்லியன் மக்களும், 2010-ம் ஆண்டு 49.09 மில்லியன் மக்களும் உள்ளனர். இது 16.03 சதவீதம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

                                                                    நன்றி தினமலர் 

Thursday, August 18, 2011

எண்ணும் எழுத்தும் "கண்'ணெனத் தகும்!

          சென்னை: பல்லாவரம் அரசு பள்ளியில் கண் பார்வையற்ற ஆசிரியர் ஒருவர், தாம் எடுக்கும் பாடத்தில், மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சி அடைய வைத்து சாதனை செய்து வருகிறார். பல்லாவரம் மறைமலையடிகளார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த பத்தாண்டுகளாக சமூக அறிவியல் ஆசிரியராகப் பணி யாற்றி வருபவர் கோவில் பிள்ளை, 52. கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவரிடம் பயிலும் 9,10 ஆம் வகுப்பு மாணவர்கள், இதுவரை தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி அடைந்து வருகின்றனர். இவரிடம் அன்பாகவும் நடந்து கொள்கின்றனர். குறைபாடற்ற ஆசிரியர்களை யே கிண்டலடித்து, கீழ்படியாமல் போகும் மாணவர்கள் மத்தியில் இது எப்படி சாத்தியமானது? திருநெல்வேலி யாக்கோபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கோவில்பிள்ளை. பார்வையற்ற பிள்ளை என்பதால், அனைவரிடமும் செல்லம் அதிகம். எட்டாம் வகுப்பு வரை மற்ற பிள்ளைகளைப் போலவே பள்ளி சென்று, அங்கு "வாய்மொழி' கல்வி மட்டும் கற்றிருக்கிறார். "படித்து என்ன செய்யப் போகிறோம், வீட்டில் தான் நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்களே' என்கிற எண்ணம் வர படிப்புக்கு, "குட்பை' சொல்லிவிட்டு, பாய் முடையவும், பிளாஸ்டிக் ஒயர்களில் நாற்காலிகள் பின்னவும் கற்றுக்கொண்டிருக்கிறார். சில வருடங்கள் கழித்து படிப்பு தான் முக்கி
யம் எனப்பட, மார்த்தாண்டம் அருகில் ஐரேனிபுரத்திலுள்ள பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில், ஏழாம் வகுப்பு சேர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட பள்ளிப் படிப்பு முடிக்கவேண்டிய வயதில், கோவில்பிள்ளையின் கல்வி பயணம் மறுபடியும் தொடர்ந்தது. அதற்கடுத்து கல்வியின் ருசி பிடித்துப்போய் விட, ஒன்பதாம் வகுப்பை பூந்தமல்லியிலும், கல்லூரிப்படிப்பை மாநிலக் கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவரது தற்போதைய கல்வித்
தகுதி எம்.ஏ.,எம்.எட்., ராமேசுவரத்தில் தன் ஆசிரியப் பணியை துவக்கிய கோவில்பிள்ளை, அதன் பின் கல்பாக்கம் கூவத்தூரிலும் தற்போது பல்லாவரத்திலுமாக 17 வருடங்களாகப் பணியாற்றிவருகிறார். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு முன், தன் கதையை முதல் பாடமாக எடுத்து வைக்கிறார். "ஏழைக்குடும்பத்தில், பார்வையில்லாமல் பிறந்து, முறையற்ற வயதில் கல்வி கற்ற நானே ஆசிரியராக, உயர முடியுமென்றால், எந்த அங்கஹீனமும் இல்லாமல், தன் பிள்ளையை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணும் பெற்றோருக்கு குழந்தையாய்ப் பிறந்து, சரியான வயதில் கல்வி கற்கும் உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும்?' எனக் கேட்டவுடன், ஒவ்வொருமாணவ இதயமும் முறுக்கேறிக் கொள்கிறது. இத்தோடு, ஆதரவற்ற குழந்தைகளுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார் கோயில் பிள்ளை. இதற்கான தேவைகளை நன்கொடைகள் மூலமாக சமாளிக்கின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகளும், பெற்றோரை இழந்த குழந்தைகளுமாக 15 பேர் உள்ளனர். இதை நிர்வகித்து வருபவர் கோவில்பிள்ளையின் மனைவி
நவமணி. இவர் எம்.ஏ.,பி.எட்., பட்டதாரியும் கூட. கோயில்பிள்ளையின் மாணவியாயிருந்து, பின் அவர்பால் ஈர்க்க ப்பட்டு, குடும்பத்தை எதிர்த்து அவரது மனைவியானவர். இத்தம்பதிக்கு பிளஸிங், 10, பிளஸி ஜெபராணி, 7, என இரண்டு குழந்தைகள் உள்ளனர். "எல்லா மாணவர்களுக்கும் அரசு புத்தகம் கொடுக்கும் போது, கண் பார்வையற்ற மாணவர்களுக்கும் "பிரெய்லி' புத்தகங்களை வழங்கினால், அவர்களாகவே, படித்துக் கொள்வார்கள்தானே?' என்று எதார்த்தமாக கேட்ட கோயில்பிள்ளையின் வார்த்தைகளில் ஆதங்கம் எதிரொலித்தது.



எப்படி பாடம் நடத்துகிறார்? : கோயில் பிள்ளையின் மனைவி நவமணி அவருக்கு மனைவியாக மட்டும் சேவை செய்யவில்லை. ஒரு தாயாகவும், வழிகாட்டியாகவும், பாடங்களை படித்துக்காட்டும் ஆசிரியராகவும் விளங்குகின்றார். நவமணி ஒருமுறை பாடங்களைப் படித்துக் காட்ட அவற்றை மனனம் செய்து விட்டு, பின் மாணவர்களுக்கு நடத்துகிறார். தின, "டெஸ்டுகளை' நன்றாகப் படிக்கும் மாணவியர் திருத்திவிட, மற்ற தேர்வுத்தாள்களை திருத்துவது நவமணியே. சமச்சீர்க் கல்வி புத்தகத்தை படித்துக் காட்டிய போது, "நல்லா இருக்கில்ல... ஆனா, "கொஸ்டின் ஸ்டைல்' தான் மாறல' என்று அலுத்துக் கொண்டார் என்கிறார் நவமணி. 
                                                                                                  நன்றி தினமலர் 

Friday, July 1, 2011

என் அருமை 25 பைசாவே!!!

          இன்று முதல் 25 பைசாக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பார்த்தவுடன் ஏனோ என் இளமை கால நினைவுகள் என் கண்முன்னே நிழலாடியது. 1985 வாக்கில் 25 பைசாவை கடைக்கு கொண்டுசென்றால் வத்தல், முறுக்கு, காரம், மாங்காய் போன்ற தின்பண்டங்களை கை நிறைய வாங்கி சாப்பிடலாம். நான் என் தம்பி மற்றும் என் தங்கை இவற்றை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தோம். என் தந்தை, பாட்டி, வாத்தியார் தாத்தா இவர்கள் எங்களுக்கு 25 பைசாவே கைசெலவிற்கு கொடுப்பார்கள் 
           மேலும் ஒரு இட்லி, ஒரு முட்டை, 5 வடைகள் 25 பைசாவிற்கே கிடைக்கும். தற்பொழுது என் தங்கை மகன், என் தங்கையிடம் அம்மா நான் பள்ளிக்கு செல்லவேண்டும் எனக்கு 10 ரூபாய் கைசெலவிற்கு கொடுக்கவும் என்று கேட்கிறான். இவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.


Thursday, June 23, 2011

மீண்டும் உயருது பெட்ரோல், டீசல் வாழ்க காங்கிரஸ் அரசாங்கம்!!!

          இப்பொழுது எந்த நாளேடை திருப்பினாலும் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருகிறது என்று எழுதுகிறார்கள். படிக்கும்பொழுதே தலை சுற்றுகிறது. நானும் இனி மோட்டார் சைக்கிள் தவிர்த்து சிறு வேலைகளுக்கு சைக்கிள் ஓட்டிப்பழக வேண்டும் என்று என் மனதில் கூறிக்கொண்டே இருந்தேன், நேற்று சைக்கிளை எடுத்துக்கொண்டு மார்கெட் வரையில் சென்று காய்கறிகள் வாங்கி வந்தேன். என் சட்டை முழுவதும் வேர்வையில் நனைத்து, நான் என்னவோ கொத்தனார் வேலையில் இருந்து வந்தது போல் காட்சியளித்தேன். என் கால்கள் இயங்க மறுத்தன, பிறகு மெத்தையில் விழுந்து ACயின் நனைந்ததும் தான் பழைய நிலைக்கு வந்தேன். இப்பொழுது தான் தெரிகிறது சைக்கிள் ஒட்டுவது எவ்வளவு கஷ்டம் மேலும் ஏன் இந்த மோட்டார் சைக்கிள்கள் இவ்வளவு அதிகமாக விற்பனை ஆகின்றன என்றும் தெரிந்தது.

          தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டிய மக்கள். மக்களின் நலனில் அக்கறையே இல்லாத மத்திய காங்கிரஸ் அரசிற்கும் முடிவு கட்டுவார்களா என்று எதிர்ப்பார்க்கிறேன். அதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் உள்ளது. அதுவரை விதியை நொந்தப்படி நான்.

Saturday, June 4, 2011

தயாநிதிக்கும் களி தின்ன ஆசை!!!

          கனிமொழியை தொடர்ந்து தயாநிதிமாறனுக்கு திகார் ஜெயில் களி தின்பதற்கு ஆசை வந்துவிட்டது, விரைவில் அவரது ஆசை நிறைவேறும் என்று நம்புவோமாக. கருணாநிதி கூடா நட்பு கேடு என்று மீண்டும் தனது பழைய பஞ்சாங்க பேச்சை பேச தொடங்கிவிட்டார். ஊழல் செய்யும் தனது குடும்பத்தை தடுக்க யோகியதை இல்லாத முதுகெலும்பில்லாத கிழவர் என்பதை மீண்டும் நிருபித்துவிட்டார். தனது குடும்பத்திற்கு அளித்த முக்கியத்துவம் தான் கடந்த தேர்தலில் தான் பெற்ற படுதோல்விக்கு காரணம் என்று தெரிந்து வைத்துக்கொண்டே காங்கிரஸ் கட்சியை குறை சொல்லிக்கொண்டுள்ளார். அவரது மகன் அஞ்சாநெஞ்சன் அழகிரி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, ஆனால் தேர்தல் முடிவுக்கு முன் என்ன வாய்சவடால் பேச்சை பேசிக்கொண்டிருந்தார் இந்த மனிதர். அனைத்திற்கும் தமிழக மக்கள் பதில் சொல்லிவிட்டார்கள். இன்னும் எங்கள் கட்சியை சேர்ந்த எவரும் தவறு செய்யவில்லை என்று கூரிக்கொண்டுள்ளது மிகவும் நகைப்பிற்குரியது.

Saturday, May 21, 2011

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் தேர் திருவிழா!!!

          இன்று காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் படத்தை நீங்களும் கண்டுகளியுங்கள்.



Friday, May 20, 2011

நிஜ ஹீரோக்கள் ஷைனி மற்றும் பூஷன்!!!

          எதிர்ப்பார்த்தது போலவே கவிஞர் கனிமொழி களி தின்பதற்கு திகார் சிறைக்கு சென்றுவிட்டார். இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டுள்ள நீதிபதிகளான ஷைனி மற்றும் பூஷன் இவர்களையே அனைத்து பெருமைகளும் சாரும், மேலும் இவர்களின் கடமை தொடரவும் என் வாழ்த்துக்கள். இனி ஊழல் மற்றும் முறைகேடு செய்பவர்கள் எவரையும் நீதியின் முன் நிறுத்தவும் மற்றும் நீதியை நிலைநாட்டவும் இந்த வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு முன்னுதாரணமாகவும் தவறு செய்பவர்கள் எவராயினும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கடுமையான தண்டனை கிடைக்க செய்யும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு அமையவேண்டும்.

          மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தங்களுக்கு SPECTRUM கிடைப்பதற்காக லாபி செய்த அனைவரும் கைதுசெய்வது மட்டுமின்றி அவ்வாறு கிடைக்கப்பெற்ற SPECTRUM LICENCE ரத்து செய்யப்படவேண்டும். இந்த நீதிபதிகள் தற்பொழுது பாதி கிணற்றை தாண்டிவிட்டனர் என்றே தெரிகிறது, இவர்கள் தொடர்ந்து இந்தவழக்கில் அக்கறை எடுத்து நல்ல முறையில் வழக்கை முடிக்கவேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

Saturday, May 14, 2011

மீண்டும் அம்மா ஆட்சி!!

          எதிர்பார்த்தது போலவே ஆதிமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் வீண் வாய்சவடால் செய்துகொண்டிருந்த திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைசிறுத்தை போன்றக் கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.


          இந்தத் தேர்தலில் ஜெயலலிதா மகிழ்ச்சி அடைகிறாரோ இல்லையோ, கேப்டன் விஜயகாந்த் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கருணாநிதி & சன்ஸ் மற்றும் கருணாநிதி & கோ போன்றவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருந்தாகவேண்டும்.

Friday, April 22, 2011

வெள்ளி- தங்கம் ஏற்றம் தொடருமா?

          கடந்த சில வருடங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன. அனைத்து தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும் இவற்றின் விலைகளை தினமும் அறிவித்து மக்களை மிரளவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி கடந்த 10 வருடங்களாக வாங்குபவர்களுக்கு லாபத்தையே கொடுத்துக்கொண்டுள்ளது, அதாவது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதற்கு காரணமாக உற்பத்தி குறைவு தேவைப்பாடு அதிகம் இன்று சொல்லப்படுவதே ஆகும். கடந்த ஒருவருடத்தில் வெள்ளி 150%, தங்கம் 35% உயர்ந்துள்ளன.

          வெள்ளியை பொறுத்தவரை தற்பொழுது பல்வேறு துறை சார்ந்த தொழிற்சாலைகளில் தேவைப்பாடு அதிகமாகியுள்ளதால் ஏற்றத்தின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. ONLINE துறையில் சம்மந்தமுடைய என் நண்பரை விசாரித்ததில் வெள்ளி தீபாவளிக்குள் 75000 (பார் வெள்ளி) வரை செல்ல வாய்ப்புள்ளது மேலும் இருவருடங்களில் 100000 வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் தங்கம் தீபாவளிக்குள் ஒரு கிராம் 2500 (24 காரட்) செல்லவும் இருவருடங்களில் 4000 செல்லவும் வாய்ப்புள்ளதாக சொன்னார். மேலும் ONLINE வர்த்தகம் மூலம் மட்டும் இவற்றின் விலை ஏறவில்லை என்று கூறினார் அதற்கு காரணமாக ONLINE வர்த்தகம் இல்லாத 30 வருடங்களுக்கு முன் தங்கம் மற்றும் வெள்ளி திபீரென்று பலமடங்கு அதிகரித்ததை சுட்டிக்காட்டினார், மேலும் ONLINE வர்த்தகத்திலிருந்து வெள்ளி மற்றும் தங்கத்தை நீக்கமுடியாது என்றும் நீக்க அவசியம் இல்லை என்றும் கூறினார். கடந்த ஒருஆண்டில் இவற்றின் விலையேற்றத்தை கீழ் மட்டும் மேலே CHARTல் காணலாம்.

மின் வெட்டு!!!

           கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மின் வாரியம் விடுத்த அறிக்கையில் தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழகம் முழுவதும் மூன்று மணிநேரமும் சென்னையில் ஒருமணிநேரமும் மின்தடையை அறிவித்துள்ளது.
           தற்பொழுது தமிழகம் மட்டும்மல்ல இந்தியா முழுவதும் (குஜராத் மாநிலம் மட்டும் இதற்கு விதிவிலக்கு) மின் தடை அதிகமாக உள்ளது. அதற்கு மூன்று காரணங்கள் உள்ளதாக தெரிகிறது ஒன்று உற்பத்தி குறைவு இரண்டு இந்தியா முழுவதும் இலவசங்களாக கொடுக்கப்படும் விவசாயிகளின் மின்சாரத்தை மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துதல் மூன்று மின்சாரம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் உரிய பணத்தை கொடுப்பதில்லை.


          மேற்சொன்ன அனைத்து காரணங்களும் நமது மாநிலத்திலும் உண்டு என்றாலும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக பதவியிலிருந்த திமுக அரசு மின் உற்பத்திக்கு எந்த புதிய திட்டங்களை செய்யவில்லை, மேலும் வசூலாகும் வரிகள் அனைத்தையும் இலவசங்களுக்கு செலவழிக்கவே சரியாக இருக்கிறது. 
            கருணாநிதி கடந்த ஐந்து ஆண்டுகளாக பாராட்டு விழாக்களில் செலவழித்த நேரங்களை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் போன்றவற்றில் செலவழித்திருந்தால் தமிழகம் மின் உபரி மாநிலமாக நிச்சயம் மாறிஇருக்கும். மாறாக தற்பொழுது இரண்டு மணிநேரம் மின்தடை மூன்று மணிநேரமானது தான் மிச்சம். என் ஒரே ஆறுதல் அடுத்த ஐந்து ஆண்டுகாலம் தமிழக மக்கள் கருணாநிதியை அவரது வீட்டிலேயே ஓய்வெடுக்க விட்டுவிடுவர் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன்.

Sunday, April 17, 2011

வருடத்திற்கு ஒரு முறை!!!

          எங்கள் வீட்டில் எத்தனையோ மரங்கள் செடிகள் மற்றும் கொடிகள் இருந்தாலும், இந்த செடிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்போம். உண்மையில் எங்களுக்கு அந்த செடியின் பெயர் கூட தெரியாது. அதன் சிறப்பு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கள் பூத்துக்குலுங்கும்.
           உங்கள் எவருக்கேனும் இந்த செடியின் பெயர் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும். மிகவும் உபயோகமாக இருக்கும்.

Saturday, April 16, 2011

வனங்களை அழிப்போம் நாடு வளம்பெறும்!!!

          கடந்த வாரம் என் நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்து ஏப்ரல் 10 ஞாயிற்றுக்கிழமை HINDU நியூஸ்பேப்பரில் 22ம் பக்கத்திலுள்ள செய்தியை படிக்கச்சொன்னார். அதைப்பற்றி,

          மகாராஷ்டிரா மாநிலம் KHED மற்றும் MAVALதாலுக்காவை சுற்றியுள்ள மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள 194.66 HECTARES பரப்பளவு கொண்ட வனப்பகுதியில், இங்கிருந்து 3.5கிமி தொலைவில் பீமாஷங்கர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இதன் அருகில் ANDHRA LAKE WIND POWER PROJECT என்ற திட்டம் வரையறுக்கப்பட்டு INDO-GERMAN ENTERPRISE ENERCON INDIA என்ற நிறுவனத்திடம் அந்த பணிகளை செய்ய அனுமதியை வழங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு. மேலும் இந்த PROJECT நடைபெறும் இடம் அடர்ந்த (RESERVE) காடுகள் ஆதலால், இந்த PROJECT இடத்திற்கு செல்ல வழி அமைக்க 26615 தேர்ந்தெடுத்த மரங்களை வெட்டி சாலை அமைக்க ENERCON INDIA நிறுவனத்திற்கு கோர்ட் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் மரங்களை வெட்டியுள்ளது ENERCON INDIA நிறுவனம். இதை அறிந்த சமூக ஆர்வலர்களான KALE மற்றும் VISHWAMBAR CHOUDHARI BOMBAY HIGH COURTல் DEC 2010ல் வழக்கு தொடர்ந்தனர். மேலும் மார்ச் 31ல் COURT உத்திரவின் பேரில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய சென்றபொழுது அங்கு மரம் வெட்டுதலும், வெடி வைத்துத்தகர்தலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது. ENERCON INDIA நிறுவனத்திற்கு வெடிவைக்க அனுமதி இல்லை என்பது புனே COLLECTOR கொடுத்த கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று KALE தெரிவித்துள்ளார். KALE மேலும் தெரிவிக்கையில் அரசு விதிப்படி தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதியை சுற்றி 10 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த திட்டமும் தொடங்க மத்திய மற்றும் மாநில அரசாங்கம் NOC கொடுக்கவேண்டும், அதை எவ்வாறு ஆய்வு செய்யாமல் கொடுத்துள்ளார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


           மேற்சொன்ன காட்டில் இந்தியன் ஜெயின்ட் அணில்கள் (SHEKRUஇனம், படத்திற்கு மேலே பாருங்கள்), மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதிக மரங்களை வெட்டுவதாலும் மற்றும் வெடி வைப்பதாலும் இந்த அணில்கள் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வகை அணில்கள் அடர்ந்த மரங்களுடன் கூடிய காட்டுப்பகுதியில் மட்டுமே வசிக்கும். இது குறித்து எந்த மகாராஷ்டிரா அரசியல் கட்சியும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது ஆச்சரியத்திற்கு உரியது. கேள்வி எழுப்பிய ஒரே சிவசேனா MPயான SHIVAJI ADHALRAO PATILலும்,  ENERCON INDIA இவருக்கு எழுதிய கடிதத்தில் காடுகளை அழிக்காமல் இந்தத் திட்டத்தை சரியாக முடிப்போம் என்று கூறியதைத் தொடர்ந்து வாய்மூடிக்கொண்டுவிட்டார். மத்திய அரசும் வாங்கவேண்டியத்தை வாங்கிக் கொண்டு அனுமதி அளித்துவிட்டனர்.


          சமீபகாலமாக செய்திகள் மற்றும் நாட்டில் நடக்கும் விஷயங்கள் என் தூக்கத்தை கெடுத்துக்கொண்டுள்ளன மற்றும் என் ரத்தஅழுத்தத்தை அதிகரித்துக்கொண்டும் உள்ளன. இவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டால் என் மனம் சிறிது சாந்தமடையும் என்று திடமாக நம்புகிறேன்.  

          BHISMASHANKAR WILDLIFE SANCTUARY படங்களைப் பார்க்க கீழே உள்ள LINKஐ CLICK செய்யவும்.

Wednesday, April 13, 2011

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

          என் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.


Tuesday, April 12, 2011

இன்று வாக்குப்பதிவு நாள்!!!

          இன்று வாக்குப்பதிவு நாள், எனவே ஓட்டளிக்க மறக்கவேண்டாம்.

Saturday, April 9, 2011

தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே!!!

          கடந்த சில நாட்களாக என் மனதை உறுத்திக்கொண்டுள்ள விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நான் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் என் நண்பர்கள் அனைவரும் என்னை முதலில் கேட்கும் கேள்வி இந்த தேர்தலில் திமுக நம் தொகுதியில் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறது என்று உனக்கு தெரியுமா? ஒரு ஓட்டுக்கு 1000 கொடுக்கப்போகிறார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா? உனக்கு இதைப்பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா? என்றே என்னை கேட்கிறார்கள்.

          தேர்தல் பிரசாரத்தில் திமுக கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றோர் மக்களை இலவசங்கள் மூலம் மட்டும் சந்திக்கவில்லை. அவர்கள் மிகவும் அதிகமாக நம்பியுள்ளது ஓட்டுக்குப் பணம் மட்டுமே. மற்ற கட்சிகள் பணம் கொடுத்து ஒட்டு வாங்க நினைத்தாலும் இதில் முதலில் உள்ளது திமுக மட்டுமே. திமுக போன்ற மட்டமான கட்சிகளால் மக்களின் மனநிலையே மாறிவிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எந்த அடிப்படைவசதிகளையும் செய்யாமலே இலவசங்கள் மற்றும் ஓட்டுக்குப் பணம் இவை இரண்டை வைத்தே மக்களை கவரநினைக்கிறார் இந்த கருணாநிதி & சன்ஸ் நிறுவனம். மக்களும் பணத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்கின்றனர். 

          இதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பது இந்த மக்களுக்கு தெரியவில்லையே என்று மிகவும் கஷ்டமாக உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் தமிழகம் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்தது. இந்த மானங்கெட்ட மக்கள் அவரை தோற்கடித்தனர் விளைவு? இதோ இன்று வரை நாம் அனுபவித்துக்கொண்டுள்ளோம். இப்பொழுது முதல் மாநிலமாக குஜராத் உள்ளது. கருணாநிதியை முதல்வராக்கினால் இனி எப்பொழுதும் எந்தத்துறைகளிலும் தமிழகம் தன்னிறைவு அடையாது என்பது உண்மை. இதையெல்லாம் நினைக்கும் பொழுது ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.

                    தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே.  

          தவறான தலைவன் என்று தெரிந்தும் கருணாநிதியை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈனமே இல்லாமல் கருணாநிதி & சன்ஸ் மக்களிடம் ஒட்டுக்கேட்கின்றனர். மானமில்லாத தமிழகமக்களும் அவர்களை வரவேற்கின்றனர். இதை என்ன என்று சொல்ல? இப்படிக்கு 

                                   இந்த தேர்தல் முடிவுகளை நினைத்து பயப்படும் நான்    

Friday, April 8, 2011

முட்டாள் மக்களுக்கு!!!

          நம் மக்கள் தேர்தலைப்பற்றியும் முடிந்துப்போன உலகக்கோப்பையை பற்றியும் இன்னும் வீண்பேச்சு பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் நமக்காக ஒருவர் ஊழலை ஒழிக்க சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். அவர் தான் ANNA HAZARE. இவரைப் பற்றி எவரேனும் பேசுகின்றனரா? அல்லது நினைக்கின்றனரா? அவர் என்ன அவரின் கோரிக்கைகள் நிறைவேரவா உண்ணாவிரதம் இருக்கிறார்? அவருக்கு ஏதேனும் பதவிகள் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறாரா?



          சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான், அனுபம்கேர், அமீர்கான் இன்னும் பெரிய சமூக ஆர்வலர்கள் இந்தப் பெரியவரையும் அவரது கோரிக்கைகளையும் பெரிதும் மதிக்கின்றனர் மற்றும் ஆதரிக்கின்றனர். உழலை எதிர்க்கும் மற்றும் கடுமையாக தண்டிக்கும் LOKPAL BILLஐ உடனடியாக சட்டமாக வலியுறுத்தி இந்தப் பெரியவர் செய்யும் தியாகத்திற்கு நாமும் ஆதரவு அளிப்போம். 

Tuesday, April 5, 2011

திருமாவளவன்- நீங்க நல்லவரா கெட்டவரா?

          தமிழக அரசியலில் ஆவேச பேச்சாகட்டும், கதறி அழுவதாகட்டும் அல்லது முக்கிய இலங்கை தமிழர்களுக்கு உதவுவதாக நடிப்பதாகட்டும் இவருக்கு இணை இவரே. இவரைப்பற்றி எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வரை நல்ல அபிப்ராயமே இருந்தது. ஆனால் நேற்று எனக்குக் கிடைத்த உண்மை தகவலைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன், அந்த தகவலை பின்புப்பார்போம்.

          தலித்இனத்தை காக்க வந்த தலைவன் நான்தான் என்று கூறிக்கொள்ளும் திருமா, இன்று வரை அவர்களுக்கு என்ன நன்மைகள் செய்துள்ளார்? இவர் இவரின் இலக்கிலிருந்து வழுக்கி கருணாநிதிக்கு துதிப்பாடுவதே தொழிலாக செய்துக்கொண்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.

          தலித்துகளின் நீண்ட நாள் பிரச்சனைகளான இரட்டை குவளை முறை இன்னும் சில இடங்களில் நடைமுறையில் இருக்கிறது. இவர்களின் இடஒதிக்கீட்டில் உள்ள குளறுபடிகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. தலித்துகள் கல்வியில் முன்னேற்றம் அடைய செய்ய மிகப்பெரிய நடவடிக்கைகள் அல்லது சலுகைகள் எதுவும் தரப்படவில்லை. தலித்துகள் செய்யும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறித்து விழிப்புணர்வு பிரசாரமோ அல்லது இதை தடுக்க மிகப்பெரிய நடவடிக்கைகளோ உங்களிடம் இல்லையே? உங்கள் இனத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது இதை தீர்க்க யோகியதை உங்களுக்கில்லை, இலங்கை தமிழர்களைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை ஆனால் தீவிரவாதிகளான விடுதலைப்புலிகளைப்பற்றி மிகவும் கவலைப்படுகிறீர்கள்.

          கடைசியாக நீங்கள் பெற்ற 10 சட்டசபை தொகுதிகளில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பார்வேந்தன் என்ற ரவுடி வக்கீல். அவரின் தொழிலே கட்டப்பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிப்பதே ஆகும். இவரைப்போய் செய்யூர் வேட்பாளராக ஆக்கியுள்ளீர்களே ஏன்? உங்கள் கட்சியில் மிகவும் நல்லவர் குறைவோ? இதற்கு அவரிடமிருந்து மூன்றுகோடிகளை பெற்றுள்ளீர்களே இது ஞாயமா? மேலும் விசாரித்தப்போது உங்களின் அனைத்து வேட்பாளர்களிடமும் தலா மூன்று கோடி ரூபாய்களை பெற்றீர்கள் என்ற உண்மை செய்தி என்நெஞ்சை ஈட்டி என குத்திக் கிழித்தது.

          இதற்கு மேல் உங்களை உங்கள் ஜாதிக்காரர்களோ அல்லது தமிழர்களோ நம்பினால் அவர்கள் முட்டாள்.

Monday, April 4, 2011

இந்த தேர்தலில் எந்த கூட்டணி வெற்றிபெறும்!!

          இந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்? ஆனால் என்னால் சரியாக கணிக்கமுடியவில்லை காரணம், திமுக மற்றும் அதிமுக இந்த இரு கூட்டணிகளுமே சமபலம் கொண்டதாகவே தெரிகின்றன. மேலும் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் எதிர்ப்பு அலையோ அல்லது எந்த கட்சிக்கும் ஆதரவு அலையோ பெரியதாக இருப்பதாக இதுவரை தெரியவில்லை. 

          2G SPECTRUM மற்றும் திமுகவின் மற்ற ஊழல்களை எடுத்துக்கொண்டாலும், மக்கள் ஊழலை ஒரு அளவுகோலாக இதுவரை பார்த்து ஓட்டளிக்கவில்லை என்பது கடந்த காலங்களை உற்றுப்பார்த்தால் நன்கு தெரியும். பிறகு இலவசங்களை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொண்டாலும் இரு கட்சிகளுமே சம அளவுகளிலேயே இலவசங்களை அறிவித்துள்ளன. முதல்வர் வேட்பாளர் என்ற முறையில் பார்த்தாலும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் சம அளவிலேயே ஆதரவு உள்ளதாக தெரிகிறது. குடும்ப அரசியல் என்பதை பார்த்தால் திமுகவின் பலம் சற்று குறைகிறது. எனினும் இது எந்த அளவிற்கு இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்று தெரியவில்லை?

          விலைவாசி உயர்வு மக்களிடையே நன்கு பிரதிபலித்தாலும், அரசாங்க ஊழியர்களின் ஓட்டு அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் திமுக அணிக்கே செல்லும் என்பதில் எந்த மாற்றம் இல்லை. இதுபோல் ஒவ்வொரு கூட்டணிக்கும் ஒவ்வொரு பலம் மற்றும் பலவீனம் உள்ளன. மொத்தத்தில் இன்னும் மக்கள் எவருக்கு ஓட்டளிக்கவேண்டும் என்பதை முடிவுசெய்யவில்லை என்றே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் இந்தத் தேர்தலில் போட்டி மிகவும் கடுமையாகவே இருக்கும் என்று தெரிகிறது.

          இந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டளிக்கவே நான் விரும்புகிறேன்.  என்னிடம் கேட்பவர்களுக்கும் அதிமுகவிற்கே ஓட்டளிக்க சொல்கிறேன், பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்று பார்போம்.

தயவுசெய்து இந்த குறும்படத்தை பாருங்கள்!!!

Sunday, April 3, 2011

இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்றது இந்தியா!

          எதிர்ப்பார்த்தது போலவே ஸ்ரீலங்காவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுவிட்டது இந்தியா. பரபரப்பான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. டோனி மற்றும் காம்பிர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். இந்த உலகக்கோப்பையில் இந்திய சார்பில் அதிகபட்சமாக சச்சின் 482 ரன்கள் குவித்ததும், ஜாகிர்கான் 21 விக்கெட் வீழ்த்தியதும், யுவராஜ் 377 ரன்களும் 15 விக்கெட் வீழ்த்தியதும் இந்தியா கோப்பையை கைப்பற்ற பெரிதும் உதவியுள்ளது. 


Saturday, April 2, 2011

இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி!!!

          இன்று அனைவராலும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. சமபலம் கொண்ட இந்தியாவும் இலங்கையும் மோதஉள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றியடையும் அணி உலகக்கோப்பையையும் உலக சாம்பியன் பட்டதையும் வெல்லும். இந்தப்போட்டியை காண இலங்கையின் அதிபர் ராஜபக்சே மற்றும் இந்திய ஜனாதிபதி பிரதிபா படீல் போன்றோர் வருகை தர உள்ளனர். இதைமுன்னிட்டு 8 அடுக்கு பாதுகாப்பு தரப்படுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள்.
         மும்பை வாங்கடே மைதான PITCH முதல் ஆடுபவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் 280க்கு மேல் சேர்க்கும் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் TOSS ஒரு முக்கிய பங்குவகிக்கும்.

Friday, April 1, 2011

கருணாநிதி அரசின் சாதனைகள்!!!

          இந்த தேர்தலில் கருணாநிதி அவர்கள் மிக அதிகமாக இலவசங்களை அறிவித்துள்ளார் தமிழகமக்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று திமுக கூட்டணிக்கட்சிகள் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் மக்களிடம் பிரசாரம் செய்கின்றனர் அவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் திமுக அமைச்சர்கள் அவர்களின் துறைகளில் என்ன சாதனைகள் செய்துள்ளனர்? அதை ஏன் இந்தப் பிரசாரத்தில் எவரும் சொல்லவில்லை? அதை நாம் கீழே பார்ப்போம்.
வீரப்பாண்டியார் (விவசாயத்துறை)
          கடந்த ஐந்து வருடங்களில் விவசாயிகள் பட்ட துன்பத்தைப் போல் வேறு எப்பொழுதும் அவர்கள் அடையவில்லை. தேவையான மின்சாரம் கிடைக்காமை, விளைநிலங்கள் விலைநிலங்கலானது, விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்க இந்தத் துறையிலிருந்து எந்த ஆகப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, விவசாயிகளுக்கு உரிய விலைக்கிடைக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அற்காடு வீராசாமி (மின்சாரத்துறை)
          நான் பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன், அங்கெல்லாம் மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், நம் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ மேல் என்று சொல்லி மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்தார் வீராசாமியின் மனைவி. இந்த ஆட்சியில் தான் மின்வெட்டை ஒருநாளுக்கு இரண்டு மணிமுதல் மூன்று மணிவரை என்று தைரியமாக அறிவித்தார்கள். இந்தத்துறையின் சாதனை இதுவே. ஒரு மின்சாரத்தை தடையில்லாமல் வழங்க இயலவில்லை ஆனால் வரும் தேர்தலிலும் ஓட்டளியுங்கள் என்று மானமே இல்லாமல் கேட்கிறார்கள், இவர்களை என்ன சொல்ல?
வேலு (உணவுத்துறை)

          இந்தத்துறையில் ஒரு ரூபாய் அரிசி கொடுக்கப்பட்டதை சாதனையாக சொல்கிறார்கள். உண்மையில் கடந்த ஆட்சியில் 3.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுது விலை தான் இறங்கியுள்ளதே தவிர தரம் மிகவும் மட்டமாக உள்ளது. அதுமட்டுமா வெளிமாநிலங்களுக்கு அதிகமாக கடத்தப்படுகிறது மற்றும் இந்தத்துறை ஊழலை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இவைகளே இந்தத்துறை சாதனைகள்.

நேரு (போக்குவரத்துத்துறை)

           இந்தத்துறையில் புது பேருந்துகளே மிகவும் குறைவு, மற்றும் பழைய பேருந்துகள் பழுதுபார்க்கப்படுவதில்லை காரணம் மிகவும் நஷ்டத்தில் ஓடுகிறது. பேருந்துகளுக்கு டிசல் வாங்கக்கூட பணமில்லாமல் ஊழலில் கொழுதுக்கொண்டுள்ளது இந்தத் துறை. நேருவோ இன்ஜினியரிங் காலேஜ்கள் திறந்துக்கொண்டே உள்ளார்.

அன்பழகன் (நிதித்துறை)

          கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து தரப்பினர்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி தமிழகஅரசின் கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டியது என்பது. நிர்வாகத்திரனே இல்லாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இதற்குக்  காரணம். இதை இந்தத் தேர்தலில் சொல்லி ஓட்டுக்கேட்பார்களா?

துரைமுருகன் (சட்டத்துறை) 

          இந்த ஆட்சியில்தான் முதல் முதலில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார்கள், திமுகவினர்களால் மிக அதிகமுறையில் சட்டங்கள் மீரப்பபட்டன. இவைகளே இந்த துரையின் சாதனை.

M.R.K.பன்னிர்செல்வம் (சுகாதாரத்துறை)

          போலி மருந்துகள் உட்கொள்வதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படாது!! என்று தமிழக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார். ஆனால் திமுக கட்சியை சேர்ந்த பல புள்ளிகளுக்கு இதில் தொடர்புள்ளது என்ற செய்தி அப்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் தரம்கெட்டுப் போனது இந்த ஆட்சியில்தான்.

          இன்னும் நிறைய துறைகள் இருந்தாலும் முக்கியமான துறைகளில் நடந்த ஊழல் மற்றும் அத்துமீறல்களை மேலே சொல்லியுள்ளேன். கருணாநிதி உண்மையிலேயே தமிழகமக்களின் மீது பற்றுக்கொண்டுள்ளார் என்பதற்கு மேல் சொல்லியுள்ளவைகளே ஆதாரம் மேலும் இவைகளையெல்லாம் மறைக்கவே இலவசங்களை அள்ளி விடுகிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம். 
                            மிகவும் கவனத்துடன் வாக்களியுங்கள்

Tuesday, March 29, 2011

நாடகக் கூட்டணி!!!!

          திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் என்ன சொல்லி ஒட்டு கேட்பதென்று தெரியவில்லை. கலைஞர் கடந்த 5 வருடங்களும் செய்த செயல்கள் காலத்தின் கட்டாயம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதையே சாதனைகளாக சொல்லி ஒட்டு கேட்பது மிகவும் நகைப்புக்குரியது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மேடையிலும் திமுக கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் இருப்பது போல ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டும் உள்ளதை மக்கள் நம்புகிறார்கள் என்றும் நினைக்கின்றனர். சிறிது தினங்களுக்கு முன்பு வரை இந்த பச்சோந்தி ராமதாஸ் என்னென்ன வசை பாடினார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இப்பொழுது அதை மறந்து ஒரே மேடையில் அமர்ந்து ஆறாவது முறையாக கருணாநிதியை முதல்வராக்குவோம் என்று முழங்குகிறார் இல்லை இல்லை தன் மகன் மேல் சபை MP பதவிக்காக நடிக்கிறார். ஆனால் எதிர் கட்சிகள் ஒன்றாக இல்லை என்று கிண்டல் செய்கின்றனர் ராமதாஸ் மற்றும் திருமாவும்.

          மேற்கண்ட கூட்டணிக்கட்சிகளைப் போல் ஜெயலலிதாவிற்கு நடிக்கத்தெரியாது, ஒரே மேடையில் நின்று ஒருவரின் கைகளைப்பிடித்துக்கொண்டு நாடகமாடத் தெரியாது, எப்பொழுதும் போல் எதார்த்தமாகவே அதிமுக கூட்டணி வாக்கு கேட்டுக்கொண்டுள்ளனர். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் எண்ணம் இவர்களுக்கில்லை. நாங்கள் இப்படிதான் என்று உண்மை முகத்துடன் தனித்தனியே ஒட்டுக்கேட்கின்றனர் இவற்றையும் மக்கள் நன்கு அறிவர். இது இந்தத் தேர்தல் முடிவுகளில் தெரியும்.

Saturday, March 26, 2011

மு.கருணாநிதி - அரசியல் ஆக்டோபஸ்

          கட்சித் தலைவராக கருணாநிதியை தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்! ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?

          திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன், அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

          கருணாநிதியின் தலைமையில் திமுக வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருது. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் மதிய புலனாய்வு துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம் என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது.


          42 ஆண்டுகளாக திமுகவின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. தலைமை நாற்காலியை பெரியாருக்காக காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி திமுகவில் இருக்கும் என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை. அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா? கருணாநிதியா என்ற சண்டை வந்தப்பொழுது, பொதுசெயலாளராக நெடுஞ்செழியனும், தலைவராக கருணாநிதியும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.

          1980ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்றப பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்தப் பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்திற்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால், அன்பகம் ஸ்டாலினுக்கு. இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாலர்களாகவே வளம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுசெயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

          கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலிமாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமண்ட்ராத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராகப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துகணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்து கணிப்பு குறைத்து மதிபிட்டிருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோரும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார். தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியை கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தப்பொழுது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
           இன்றைய நிலையில் திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்.

அதிகார மையங்கள் 

          குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தாழ் எடுத்து வளம் வருகிறார்கள். ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ .டி காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் பர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை. ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்தாக தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினேட்டுக்குள் நுழைந்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராசாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும். கனிமொழிக்கு தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்ல்வியை சினம் கொள்ள வைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார். கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியை கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மையாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, திமுகவின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கியமான அதிகார மையம்!

கோடம்பாக்கமே கோபாலபுரம் 

          இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை! திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிச்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டிவி கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்றப புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே கலைஞர் டிவி. என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன்-கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.

          அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயின்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துறை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும் தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் வெளியே சொல்ல முடியவில்லை.

          பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜயின் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக திமுககாரராக அறிமுகமான அவரது அப்பா ஜெயலலிதாவைப் போய் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

          தமிழரசுவின் மகன் அருள்நிதி, வம்சம் படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்காள் மகன் அமிர்தம் கலைஞர் டிவியைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.

          கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் முக முது, அவரது மகன் அறிவுநிதி, சினிமாவில் பாடுகிறார். சென்னையில் திடீர்ரென அவரது கட்டவுடுகள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உருப்பிரனரே கிழித்துவிட்டார், நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்கவேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று.

இன்னல்மிகு இல்லத்தரசிகள் 

          கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியதில்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் இவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை. உடல் நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டிவிக்கான பங்குகளில் 60% அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், SPECTRUM விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டிவி. 214 கோடிகளை வாய்ந்கியது என்பதை CBI தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். இதனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று CBI அடம்பிடிக்க தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதோடு CBI விடுகிறதா என்பது தெரியவில்லை. முழு கிளைமாக்ஸ் மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

          இவருக்கு நேர் மாறானவர் ராசாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது SPECTRUM தரகர் நீரா ராடியாவுடன் ராசாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்தினமும் பேசியதும், வோல்டாஸ் கட்டிடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராசாத்தியின் உதவியாளர் சரவணன் சம்மந்தப்பட்டதும் முற்றும்ப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

இனி இவர்கள் கையில்!

          அடுத்து புதிய வாரிசுகள் மெல்ல உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்ம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது. ஸ்டாலினின் மருமகள் கிர்த்திகா, ஒரு பத்திரிகையாளராக வளம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் விஷன் என்றப பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அடிக்கடி சர்ச்சைகளில் அடிப்படும். தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாகவேண்டும். சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

                                                              நன்றி ஆனந்த விகடன்        

Tuesday, March 22, 2011

ராமதாஸ், திருமா, வைகோ- ஒற்றுமைகள்!!!

          அதிமுக கூட்டணியில் 8 முதல் 12 தொகுதிகள் கொடுப்பதாக சொல்லியும் தேர்தலை புறக்கணிப்பதாகவும், ஜெயலலிதா பேய் பிசாசு, திமிர் பிடித்தவர் என்று தற்பொழுது குலைக்கும் வைகோ சிறிதேனும் யோசிக்கவேண்டும். அவரின் மதிமுகவிற்கு ஓட்டு வங்கி என்று ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த நிலையில் மேற்சொன்ன தொகுதிகளே அதிகம். நாஞ்சில் சம்பத் எமது தலைவர் வைகோ சிறந்த பேச்சாளர் அவர் இல்லாமல் எந்த கூட்டணியும் வெற்றிபெறாது என்று காமெடி செய்துள்ளது நடிகர் வடிவேல் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியதை விட காமெடி. 

          வைகோ, ராமதாஸ், திருமா இவர்கள் மூன்று கட்சிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு, எவருக்கும் தமிழகத்தில் ஓட்டு வங்கி என்பதே கிடையாது, மாறாக வாய்சவடால் வீரர்கள். ஒவ்வொரு முறையும் இதை வைத்தே கூட்டணி தொகுதிகளை பெற்றுவருகின்றனர் இவர்கள். இவர்களின் மிரட்டலுக்கு எப்பொழுதுமே பயப்படுபவர் கருணாநிதி மட்டுமே. அதை தெரிந்தே அங்கு சென்று ராமதாஸ் மற்றும் திருமா ஒட்டிக்கொண்டனர். வைகோ வழக்கம் போல் ஏமாந்துவிட்டார்.

          திருமாவளவன் மேடைகளில் ஏறினால் அவர் மிகவும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு இலங்கை தமிழர்களைப் பற்றியும் அவர்கள் துயரத்தையும் பேசுவது வாடிக்கை. ஆனால் உண்மையில் இவரும் சக MPக்களும் இலங்கைக்கு சென்றிருந்தப்பொழுது இலங்கை அரசை எதிர்த்து பேச நல்ல வாய்ப்பிருந்தும் அதை வேண்டுமென்றே தவிர்த்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் வாய்ப்பேச்சை தொடங்கிவிட்டார். இவர் தலித்துகளும் ஒன்றும் செய்யவில்லை செய்யப்போவதும் இல்லை, இலங்கை தமிழர்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. தற்பொழுது ஒரு MLA SEAT இரண்டு கோடி முதல் ஐந்து கோடி வரை விற்றுக்கொண்டுள்ளார். இதை என்ன என்று சொல்வது??


          அடுத்து ராமதாஸ் இவரைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. மூளை என்று ஒன்றில்லாமல் முன்னுக்குப்பின் முரணாக பேசுவதே இவரின் கொள்கை. இவருக்கும் கடந்த பலவருடங்களாக ஓட்டு வங்கி தேய்ந்துக்கொண்டே வந்துள்ளது எனினும் இதை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் அவர்களை ஜெயாடிவியா? தினமலரா? என்றெல்லாம் வசைப்பாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். முக்கியமாக கடந்த சில வருடங்களாக இவர் உள்ள கூட்டணி தோல்வியையே கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் செயல்பாடுகளை இந்தத் தேர்தல்களில் பொறுத்திருந்து பார்போம்.

Sunday, March 20, 2011

நாய்க்கு எலும்புத்துண்டு மக்களுக்கு இலவசம்!!!

          வரும் தேர்தலில் எப்படியேனும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து, தனது குடும்பம் செழிக்கவேண்டும் என்று கருணாநிதி உறுதி பூண்டுவிட்டார். நாய்களுக்கு எலும்புத்துண்டுகளைப் போட்டால் அவைகள் நம்மைப்பார்த்து வாலாட்டும் நமக்கு உண்மையாக இருக்கும். அதேப்போல் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசங்களை அள்ளி கொடுத்தால் அவர்கள் நமக்கே ஓட்டளிப்பர் என்று நினைத்துக்கொண்டுள்ளார் கருணாநிதி. இந்தத் தேர்தலில் அது நடக்கப்போவதில்லை, மாறாக மக்கள் அவர் மற்றும் அவரின் அறிக்கையை தூக்கி எரியப்போவது உறுதி. 


          தமிழக மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் இலவசங்களின் மூலம் ஒரு நாட்டையோ அல்லது ஏழைகளையோ உயர்த்த முடியவே முடியாது, மாறாக அவர்களின் வாழ்க்கைத்தரம் மேலும் குறைந்துவிடும் என்பதே உண்மை. கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஓட்டளித்து இலவசங்களைப்பெற்றிருந்தாலும், உண்மையில் விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு, தமிழ்நாட்டின் கடன் சுமை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது இவையே தமிழ்நாட்டின் இன்றைய உண்மை நிலைமை. இதை ஒவ்வொரு தமிழககுடிமகனும் நன்கு உணர்ந்து வரும் தேர்தலில் வாக்களிக்கவேண்டும்.

           ஏற்கனவே தமிழக குடிமக்களாகிய நாம் காமராஜர் என்ற அற்புத தெய்வத்தை தோற்கடித்து இந்த கருணாநிதி என்றப்பேயை தமிழ்நாட்டில் உலவவிட்டுவிட்டோம். எம்ஜிஆர் இருந்த வரை இந்த பேய் வாலை சுருட்டிக்கொண்டிருந்தது. அதற்குப்பிறகு இந்தப்பேயின் கொட்டத்தை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. இந்தப் பேயின் கொட்டத்தை அடக்க நமக்கு தற்பொழுதுள்ள ஒரே வாய்ப்பு அதிமுக தான். எனவே இந்தத் தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பீர்!! நலம் பெறுவீர்!!!

Saturday, March 19, 2011

கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் மனைவி மற்றும் நண்பிகளும்!!!

          கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் மனைவி மற்றும் நண்பிகள் படத்தை காண கீழே உள்ள LINKஐ CLICK செய்யவும்.

தேர்தல் கமிஷனின் அராஜகம்!!!

          கடந்த சில நாட்களாக என் ரத்தத்தை அரசியல் கட்சிகள் மட்டுமே  கொதிப்படைய செய்துவந்தன, தற்பொழுது அந்த வேலையை தேர்தல் கமிஷன் செய்கிறது. எவ்வளவுதான் அதிகாரம் இருந்தாலும் அப்பாவி பொதுமக்களின் அன்றாட வியாபார விஷயங்களில் தலையிட்டு அவர்களுக்கு தொல்லைக்கொடுப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும். சிறு வியாபாரிகள் கொண்டுசெல்லும் வியாபார பொருட்கள், பணம் போன்றவற்றை வேண்டுமென்றே சோதனை என்றப்பெயரில் அவர்களுக்கு இம்சை செய்தும், அரசியல்வாதிகள் கொண்டுசெல்லும் பணத்தை கோடைவிட்டு அவர்களுக்கு உதவுவதும் மிகவும் கண்டனத்திற்கு உரியது. இதை அவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும், தைரியம் இருந்தால் அண்ணா அறிவாலயம் மற்றும் அதிமுக தலைமைகழகம் போன்றவற்றில் சோதனை செய்துகொள்ளவும். திருடர்கள் அங்கிருக்க யாரை திருப்திபடுத்த இந்த சோதனை? 

          அனைத்து அரசியல் கட்சிகளின் தொலைக்காட்சிகளும் சாதாரண மக்களிடம் சோதனை செய்வதை மற்றும் பிடிபடுவதை தங்கள் எதிர்க்கட்சிகள் செய்த தவறைப்போல சித்தரிப்பது மிகவும் கொடுமை. அரசியல் கட்சிகள் பிணங்கள் கொண்டுசெல்லும் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணத்தை கடத்துகின்றனர் என்று தெரிகிறது. இதுவரை இது போன்ற எத்தனை வாகனங்களை சோதனை செய்துள்ளனர்? இதை யாரிடம் கேட்பது? கடவுளே பொதுமக்களை காப்பாற்று!!!!

Wednesday, March 16, 2011

வெற்றியிலிருந்து தோல்வியை நோக்கி ஜெயலலிதா!!!

          கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை எந்தக்கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றிபெறும் என்று கேட்டிருந்தால் அதிமுக என்று தாராளமாக சொல்லியிருக்கலாம். ஆனால் தற்பொழுது கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமலும் மதிமுகவை மதிக்காமலும் தனிச்சையாக ஜெயலலிதா அவர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அவர் தோல்வியை நோக்கி செல்வதை காட்டுகிறது. விஜயகாந்த் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக இவர்கள் இப்பொழுது மூன்றாம் அணியை அமைக்கவிருப்பது கருணாநிதிக்கு வெற்றியை எளிமையாகுகிறது. இதை ஜெயலலிதா அறியாமலா இருப்பார்? கருணாநிதியின் வெற்றிக்கு ஜெயலலிதாவே காரணம், அடுத்த 5 வருடமும் NO 81-போயஸ் கார்டன் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க முடிவு செய்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள்.

Friday, March 11, 2011

SPECTRUM FRIENDS!!!

          தற்பொழுது தமிழ்நாட்டில் SPECTRUM FRIENDS யார் என்று ஒரு சிறு குழந்தையை கேட்டாலும் திமுக, காங்கிரஸ் என்று நொடிப்பொழுதில் சொல்லிவிடும். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் இந்த ஈனப்பிறவிகள் அரசியலை தேர்ந்தெடுத்துள்ளன.

          நம் தமிழ்நாடு மக்களும் சூடு சொரணை இல்லாதவர்களாகவே உள்ளனர், இல்லையென்றால் இந்த கேவலமான ஊழல் கூட்டணியை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடையவைத்திருக்கமாட்டார்கள். எனக்கு தற்பொழுதும் இதே போல் நடந்துவிடுமோ என்று மிகவும் வருந்துகிறேன். அவ்வாறு நடந்தால் தமிழகமக்களே உங்களை நிச்சயம் எவராலும் காப்பாற்ற இயலாது. இவர்களின் கொட்டம் மீண்டும் தொடங்கிவிடும்.

          அடிப்படை வசதி கூட செய்துதர இயலாத இந்த கூட்டணி அரசாங்கம் மீண்டும் தேவையா? தமிழ்நாட்டில் தற்பொழுது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒரு சட்டமோ அல்லது தீர்விற்கு ஒரு சிந்தனையோ இல்லாத இந்த அரசாங்கம் தேவையா? தமிழக அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் என்ற இந்த நிலைக்கு காரணமான இந்த நிர்வாகதிறமை இல்லாத கருணாநிதி தேவையா? தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு கொலை மற்றும் கொள்ளை நடைபெறுகிறது இதை தடுக்கமுடியாத கையாலாகாத அரசு தேவையா? மகன், மகள்,பேரன், பேத்தி, மனைவி, துணைவி என்று அனைவரின் வளங்கள் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் ஒரு குடும்பத்தலைவரின் ஆட்சி தேவையா? தண்ணீர் முதல் பெட்ரோல் வரை மக்களுக்கு தினம் ஒரு விலையில் கிடைக்க செய்த மோசமான தலைவரின் ஆட்சி தேவையா? தயவுசெய்து சிறிது சிந்தித்து ஓட்டளிக்கவும்

Thursday, March 10, 2011

கருணாநிதி இந்த தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு கேட்பார்?

          கருணாநிதி இந்த தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு கேட்பார்? அவருக்கு சில யோசனைகள்,

ஈழத்தில் அப்பாவித்தமிழர்களை படுகொலை செய்தது நான்தான் எனவே ஓட்டு போடுங்கள்.

அதிக பாராட்டு விழா நடந்தது இந்த ஆட்சியில் தான், ரஜினி, வைரமுத்து, ராமநாராயணன், கமலை வேண்டுமானால் கேட்டுக்கொள்ளுங்கள்.

இந்தியாவிலேயே மின்வெட்டை முறையாக இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரையறை செய்தது திமுக அரசுதான், அறிவிக்கப்படாத மின்வெட்டு என்றும் இருந்தது இல்லை.

இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே என் குடும்ப உறுப்பினர்களாலேயே மட்டும் நடத்தப்படும் ஒரே கட்சி திமுக தான்.

ஒரு ரூபாய் அரிசியின் மூலம் இந்தியாவிலேயே கால்நடை மற்றும் பறவை இனங்களுக்கு வாழ்வளிதுள்ள ஒரே கட்சி திமுக.

என் குடும்ப உறுப்பினர்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில்களிலும் கால்பதித்து REALESTATE முதல் சினிமா வரை தொழில் துறையினருக்கு பலத்த போட்டியை உருவாக்கியுள்ளேன்.

தொழில் துறையில் மிகப்பெரும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க செய்து முறையாக கமிஷன் பெற்று எனது குடும்பத்திற்கு ஒப்படைத்த ஒரே கட்சி திமுக.

பொதுமக்களை முக்கியமாக பெண்கள் நகையுடன் வெளியே செல்ல எப்பொழுதும் எங்கள் கட்சி அனுமதித்ததில்லை, அதே போல் ரவுடிகள் அனைவரும் எங்கள் கட்டுப்பாட்டில் மகிழ்ச்சியாக வைத்துள்ளதும் ஒரு சாதனையே.

இந்த தள்ளாத வயதிலும் நிதானம் தவறாமல் குடும்பத்தை காப்பாற்றும் எந்த அரசியல் தலைவரையாவது இந்த தேசம் பார்த்துள்ளதா? இவற்றையெல்லாம் மனதில் வைத்து இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Tuesday, March 8, 2011

எல்லாம் மக்களுக்குத் தெரியும்!!!

          தமிழகத்தில் இல்லாத கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் கெஞ்சி அவர்களுக்கு 63 தொகுதிகளை கொடுத்துள்ளது திமுக. பாமகவிற்கு தேவையே இல்லாத 30. கேட்டால் கருணாநிதி ஒரு ராஜாதந்திரி என்கிறார்கள் இதை என்னவென்று சொல்வது? முட்டாள்களை எல்லாம் கூட்டணியில் வைத்துக்கொண்டிருக்கும் முட்டாள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

         மக்கள் வருந்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் அரசாங்கம் எடுத்த பொழுதெல்லாம் வாய் மூடியிருந்த கருணாநிதி, தொகுதிப்பங்கீட்டில் காங்கிரஸ் சிறிது அதிகமாக கேட்கவே உறவை முறிக்கும் நாடகம் நடத்தி அதில் தோல்வியும் அடைந்துவிட்டார்.

          கருணாநிதியின் ஜால்ராக்கள் (கி.வீரமணி, திருமாவளவன்) இப்பொழுது என்ன சொல்வார்கள்? காங்கிரஸ்ஐ கூட்டணியில் சேர்த்ததற்காக கருணாநிதியை புகழ்வர்களா? அனைத்தையும் பொறுமையுடன் கவனித்துக்கொண்டுள்ள மக்கள் இந்த தேர்தலில் இந்த மானங்கெட்ட கூட்டணிக்கு தக்க பதிலளிப்பார்கள்.

Sunday, March 6, 2011

காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒரு கடிதம்!!!

          இன்று (7/3/2011) ஒரு முக்கியமான நாளாகும், இன்று CRUDE OIL புதிய இரண்டுவருட உச்சத்தை தொட்டுள்ளது (4822) மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. தங்கம் அதன் புது உச்சத்தையும், வெள்ளி அதன் புது உச்சத்தையும் இன்று அடைந்துள்ளன. மேலும் இந்த விலை உயர்வுகள் தொடரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

          காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டு முதல் மூன்று ரூபாய் அதிகரிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் என்னைப் போல் நடுத்தர வர்கத்தினர் மற்றும் ஏழைகள் சைக்கிள் பயணத்தை தொடர்வதை தவிர வேறு வழி இல்லை. அதைப் பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. CRUDE ஆயில் 6000 என்ற விலையில் இருந்தபொழுதே பெட்ரோல் மற்றும் டீசல் தற்பொழுதை விட குறைவாகவே இருந்தன. அப்பொழுது அந்தந்த பெட்ரோலிய கம்பெனிகள் சம்பாதிக்காத நஷ்டத்தை தற்பொழுது சம்பாதிக்கின்றனவா? இவற்றை விளக்க எவரும் இல்லை. தற்பொழுது நஷ்டம் ஏற்படுகின்றதென்றால் CRUDE 6000 விற்றபொழுது எவ்வாறு குறைவாக விலையை நிர்ணயிக்க முடிந்தது?

          மக்கள் அனைவரும் இங்கு வருந்தும்பொழுது யாரை திருப்பதிப்படுத்த இந்த தொடர் விலையேற்றம்? இவ்வளவு நாள் நீங்கள் கொள்ளையடித்தது போதாதா? மக்களின் நலனில் தற்பொழுதாவது சிறிது அக்கறை எடுத்தால் என்ன? திமுகவிடம் தொகுதிகள் வாங்குவதில் காட்டிய கண்டிப்பை நாட்டின் மிகமுக்கிய பிரச்னையான இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வில் காட்ட தயங்குவதேன்?

          இந்த விலை உயர்வால் மீண்டும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் அதிகமாக உயருமே? விவசாய உற்பத்தியும் மிகவும் குறைந்துள்ள தற்போதய நிலையில் மக்கள் எவ்வாறு இந்த உயர்வை தாங்குவர்? இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?
                                                                                                                 வருத்ததுடன் நான்    

பயம் என்றால் என்ன? கருணாநிதியை கேளுங்கள்

          தமிழ்நாட்டில் ஒட்டு வங்கியே இல்லாத காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்டதற்கே கருணாநிதிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. நேற்று அவரை சந்தித்த திருமாவளவன் இந்தக்கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று அறிவித்துள்ளார், மேலும் கோழை பாமாக கட்சி இன்று இந்தக்கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று அறிவித்துள்ளது, மேலும் கருணாநிதியின் ஜால்ரா கீ.வீரமணி மானமுள்ள தமிழன் காங்கிரஸ் கட்சி வெளியேறியதை வரவேற்பான் என்றெல்லாம் சொல்லி கருணாநிதிக்கு பயத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளனர், கருணாநிதி 2001ல் உதிரிக்கட்சிகளை கொண்டு அமைத்த கூட்டணிபோலவே இந்த முறையும் அமைத்துள்ளார். கருணாநிதி குடும்பம் கடந்த ஐந்து ஆண்டுகள் செய்த அட்டுழியங்களை மக்கள் நிச்சயம் இந்தத்தேர்தலில் மறக்கமாட்டார்கள்.

                கீழே உள்ளது அனைத்தும் உண்மையே கற்பனை அல்ல 

அழகிரி(சாதனை) - இரண்டு அல்லது மூன்று கொலைகள், ETC

கனிமொழி(சாதனை) -உலக மகா SPECTRUM ஊழல், ETC 

உதயநிதி ஸ்டாலின் (சாதனை) - பலக்கோடி கருப்புப்பணத்தை FLAP படங்கள் மூலம் வெள்ளையாக் மாற்றிக்கொண்டது.

தயாநிதி அழகிரி (சாதனை) - மேர்கண்டவரைப்பார்த்து அதைக்கூட சரியாக காப்பியடிக்கத் தெரியாதவர்.(அப்பாவைப் போலவே வெத்துவேட்டு)

ஸ்டாலின் (சாதனை) - இவர்கள் அனைவரும் செய்யும் சேஷ்டைகளை முதல்வர் பதவிக்காக பொருத்துக்கொண்டது.

கருணாநிதி(சாதனை) - ஜால்ராக்களை வைத்துக்கொண்டு காமெடி ஆட்சி நடத்தியது.

Saturday, March 5, 2011

கூட்டணி முறிவு அடுத்து கனிமொழி கைது!!!

          திமுக மற்றும் காங்கிரஸ் உறவு முறிந்ததற்கு கலைஞர் தனது அறிக்கையில் 57 தொகுதிகள் கேட்டார்கள் பிறகு 60 கேட்டார்கள் நாங்கள் அதற்கும் ஒத்துக்கொண்டோம் பிறகு இப்பொழுது 63 தொகுதிகள் வேண்டும் அதையும் நாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்வோம் என்று கூறினார்கள் என்று கூறுகிறார், இது சுத்தப் பொய்.
           உண்மை -- SPECTRUM ஊழலில் கனிமொழி கைதாவதை முடிந்தவரையில் தடுக்கப்பார்த்து முடியவில்லை என்றவுடன் கூட்டணியை கருணாநிதி முரித்துக்கொண்டுள்ளார் என்பதே உண்மை. விரைவில் கனிமொழி கைதாவதை நாம் காணலாம். இன்னும் இரு மாதங்களில் அழகிரி, தயாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி போன்ற கருணாநிதி & COயின் அக்கிரமங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று தாராளமாக நம்பலாம்.

Friday, February 25, 2011

உத்தமரின் வாழ்க்கை வரலாறு


சபாஷ் சரியான போட்டி!!!

          அதிமுக  கூட்டணியில் தேமுதிக வந்ததை அடுத்து வரும் சட்டசபை தேர்தல் மிகவும் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிச்சயம்.

Tuesday, February 22, 2011

அனைத்து சீமான்களுக்கும் ஒரு வேண்டுகோள்!!!

          தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி எவரும் பேசுவதில்லை மற்றும் சிந்திப்பதில்லை, மாறாக இலங்கையில் ஏதேனும் சிறு குண்டூசி கீழே விழுந்துவிட்டாலும் அதைப்பற்றியும் இலங்கை அரசைப் பற்றியும் பேசி எழுதி பணம் பார்க்க நினைப்பவர்களே அதிகமாக உள்ளனர். உதாரணமாக மாவீரர் சீமான் அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றியோ அல்லது தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களைப்பற்றியோ அக்கறை இல்லை, மக்களும் இவர் பேசுவதை ஒரு வேடிக்கையாகவும், தமாஷாகவும் மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர் என்பதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலே சாட்சி. சீமான் காங்கிரஸ் மற்றும் திமுகவை எதிர்த்து மிகவும் ஆவேசமாக பிரசாரம் செய்தும் அந்த கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்தனர். அதன் பிறகும் தற்பொழுது வரை சீமான் தமிழ்நாட்டு மக்கள்களின் மின் வசதி, விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட இவர் மூச்சு கூட விடவில்லை. இலங்கையில் ஏதேனும் சிறிய விஷயமென்றால் உடனே தனது ரவுடிகள் (நாம் தமிழர்) கட்சியுடன் சேர்ந்து ஆவேசமாக பேசுவதை எந்த தமிழனும் விரும்பவில்லை என்பதை இங்கு சொல்ல விரும்புகிறேன்.

          இறுதியாக வன்முறையை கையிலெடுத்த எந்த நபரும் ஹிட்லரில் இருந்து பிரபாகரன் வரையில் வென்றதாக சரித்திரம் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த இம்சைகளை விட விடுதலைப்புலிகள் கொடுத்த இம்சைகளே அதிகம். அது இப்பொழுது ஒய்ந்துவிட்டது, இனியாவது அவர்களை நிம்மதியாக வாழவிடுமாறு அனைத்து தமிழ்நாட்டு சீமான்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

நடுநிசி நாய்கள்

          இந்தப் படத்தை விமர்சனம் செய்யவே முடியாது. தயவுசெய்து இந்தப் படத்தை பார்க்க நினைப்பவர்கள் ஒரு BLUE FILM காசெட் வாங்கிப் பார்க்கலாம், படம் அவ்வளவு மோசம். வக்கிர புத்தியுடைய கவுதம் வாசுதேவ் மேனனின் மிக மோசமான படம் இது, மற்றும் அவரின் மனதை படம் பிடிப்பதாகவே இந்தப் படம் உள்ளது.



Monday, February 21, 2011

இந்தியருக்கு தெரியாததெல்லாம் அமெரிக்கர்களுக்கு தெரிகிறது!!!

          ரொனால்ட் ரீகனின் நூற்றாண்டு விழாவையொட்டி அமெரிக்காவின் TIME பத்திரிகை, உலகம் முழுவதிலிருந்து 25 சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் நமது நாட்டின் தந்தை மகாத்மா காந்தி.  வன்முறையற்ற பாதையின் மூலம் சாதனை புரிய முடியும் என்று இந்த உலகிற்கு உணர்த்தியதால் தான் இந்த முதலிடம் கிடைத்திருக்கிறது காந்திக்கு. அமெரிக்காவில் சிவில் உரிமைகளுக்காக இயங்கும் இயக்கங்களுக்கு உந்துதலாக காந்தியக் கொள்கைகள் இருக்கின்றன என்றும் TIME பத்திரிகை பாராட்டுகிறது.

          முதல் 25 இடங்களுக்குள் இந்தியாவிலிருந்து இடம் பிடித்த மற்றொருவர், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த மொஹலாய பேரரசர் அக்பர். பன்முகத்தன்மை கொண்ட பல சிற்றரசுகளை கட்டிக்காத்து பேரரசராக ஆட்சி செய்து, இன்றைய இந்தியா என்கிற நாட்டின் உருவாக்கத்தின் முன்மாதிரியாக மொஹலாயப் பேரரசை 40 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததை பெருமையுடன் நினைவுகூர்கிறது TIME பத்திரிகை.

          தலாய்லாமா, நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன், ஹிட்லர், முசோலினி, கிளியோபாட்ரா, ஆகியோரும் இப்பட்டியலில் அணிவகுக்கிறார்கள்.

Friday, February 18, 2011

உலககோப்பையில் இந்தியாவின் போட்டிகள்

          உலககோப்பையில் இந்தியாவின் போட்டிகள் மற்றும் தேதிகளை காணலாம்.

19/02/2011  வங்கதேசத்துடன் டாக்கா           பிற்பகல் 2 மணி 
27/02/2011  இங்கிலாந்துடன்   பெங்களூர்   பிற்பகல் 2.30 மணி 

06/03/2011  அயர்லாந்துடன்    பெங்களூர்    பிற்பகல் 2.30 மணி 

09/03/2011  நெதர்லாந்து            டெல்லி         பிற்பகல் 2.30 மணி
12/03/2011  தென்னாப்ரிக்கா     நாக்பூர்          பிற்பகல் 2.30 மணி 

20/03/2011 வெஸ்ட்இண்டீஸ்  சென்னை    பிற்பகல் 2.30 மணி

Saturday, February 12, 2011

DR ரங்காசாரி (1882--1934) THE FLYING DOCTOR

          கானாடுகாத்தான் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்படிருந்தார் அந்தப் பெண்மணி. வசதிஏதும் இல்லாதவர் குழந்தை பிறந்துவிட்டாலும் பரவாயில்லை. இயற்க்கை பிரசவம் நடைபெற வழியில்லாமல், வயிற்ரை கிழித்து குழந்தையை எடுக்கவேண்டும். அதற்கு சரியான மருத்துவர் வேண்டும். கானாடுகாத்தான் லேடி பேன்ட்லாண்ட் ஆஸ்பத்திரியிலிருந்து செய்தி அனுப்பப்படுகிறது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம், சில மணிநேரங்களில் பக்கத்தில் ஒரு வயலில் இறங்குகிறது. அடுத்த சில மணிநேரங்களில், தாயும் சேயும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, நலமாக மூச்சுவிடுகிறார்கள். தனக்கு எவ்வளவு FEES தருவார்கள் என்பதைப் பற்றிய நினைப்பே இல்லாமல், சென்னையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு என்ன சிகிச்சை கொடுக்கவேண்டும் என்பதைப் பற்றிய நினைப்போடு புறப்பட்டுப் போகிறார் அந்த டாக்டர். தொழில்நுட்பம் பெருகிவிட்ட 21ம் நூற்றாண்டோ, குறைந்த விலை விமான நிறுவனங்கள் படர்ந்துவிட்ட நவீன யுகமோ இல்லை. சென்னையிலிருந்து காரைக்குடி சுமார் 400 கி.மீ, அங்கிருந்து கானாடுகாத்தான் சுமார் 16 கி.மீ. அந்த ஊர் என்று மட்டுமில்லாமல், இன்னும் பற்பல ஊர்களுக்கும் இடங்களுக்கும், தன் சொந்தத விமானத்தில் பறந்து, தெரிந்தவர் தெரியாதவர், ஏழை பணக்காரர் என்று எந்தவித பேதமும் பார்க்காமல் மருத்துவம் செய்த மருத்துவப் பண்பாளர் DR ரங்காச்சாரி. 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தார். அந்தக்காலத்தில் ரங்காச்சாரி FLYING டாக்டர் என்றும் அழைக்கப்பட்டார். 

          தன்னை நம்பி வந்த நோயாளிக்காக, எமதர்மனை எத்தனையோ முறை ரங்காச்சாரி எட்டி உதைத்தார் என்பது தமிழகத்தின் மருத்துவ வரலாறு. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், DR ரங்காசாரியால் மிகப்பெரிய புரட்சிகளே ஏற்பட்டன எனலாம். மகப்பேறு காலங்களிலும், தங்களுடைய நோயை வெளியே சொல்லமுடியாத நாணத்தாலும் பற்பல பெண்கள் உயிரிழந்தனர். தாயுன் சேயும் தனித்தனி உயிர்களாக முடியும் என்பதை, மக்களென்ன, இயற்கையே நம்பாத காலம். மருத்துவப் படிப்பு முடிந்து, பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றிய சில ஆண்டுகளில், எண்ணற்ற தாய்மார்களை எமனுடைய பிடியிலிருந்து கைப்பற்றினார் ரங்காச்சாரி.

          தொடர்ந்து ஹைதராபாத்திலும் பணி. கோஷாவுக்குள் பெண்கள், மதம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு, பிற மனிதர்கள் கையால் மருந்தா என்று முகம் சுளித்த மக்கள். 1909ஆம் ஆண்டு -- கறுப்புக் காலனாக ப்ளேக் நோய், அந்தப் பிரதேசத்தையே உள்ளுக்கியப்பொழுது ரங்காச்சாரியின் சிகிச்சை, நோய் கொடுமையிலிருந்து மட்டுமில்லாமல், வேண்டாத மூடப் பழக்கவழக்கங்களில் இருந்தும் மக்களை மீட்டது.

          மாயவரம் மருத்துவமனை, தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவப்பள்ளியின் தலைமை ஆசான், பின்னர் நாகப்பட்டினத்தில் சிவில் சர்ஜனாக உயர்வு, அடுத்து கும்பகோணம்... இப்படியாக ரங்காச்சாரியின் பணி தொடர, ஆரம்பகாலங்களில் சைக்கிள், அடுத்து குதிரைவண்டி, பின்பு மோட்டார் சைக்கிள் என்று ஓடி ஓடி, நோயாளிகளின் இடம் தேடித் தேடி, துன்பம் தீர்த்த டாக்டர், இப்போது கார் வாங்கிவிட்டார், சொகுசாகப் பயணம் செய்ய அல்ல! சோர்ந்து வாடித் தவித்த ஏழைக்கும் பாழைக்கும் பட்டிக்காட்டானுக்கும் பட்டினதானுக்கும் பெரியவர்க்கும் சிறியவர்க்கும் வைத்தியம் செய்வதற்கு அந்தக் கறுப்பு நிற ஸ்டாண்டர்ட் கார் சீறிப் பாயும்.

          DR ரங்காச்சாரி எந்தத் துறையில் SPECIALIST? இந்த வினோத வினாவிற்கு சரியான விடை தர முடியாது. காரணம், அவர் பார்க்காத வைத்தியம் இல்லை, தீர்க்காத வியாதி இல்லை. மிகவும் கடினமான பிரசவம், அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் பிளவை கட்டி, கீழே விழுந்ததால் காயம், பட்டுப் புரையோடிப் போன எலும்பு ரணம், உள்ளுறுப்புகளில் தோன்றும் பெயர் தெரியாத பெரிய பெரிய நோய்கள்-- எதுவாக இருந்தாலும் ரங்காசாரியிடம் தீர்வு உண்டு. அப்படியானால், அவர் கொடுத்த மருந்துகளும் மிக உயர்ந்தவையாக இருக்குமோ? அதுதான் இல்லை. சாதாரணமானவை! அவ்வளவுகூட இல்லை-- மருந்து என்றே சொல்ல முடியாத இயற்கையான காற்று, சூர்ய வெளிச்சம், சின்னச்சின்ன உணவுப் பழக்கங்கள், காய்கறிகளும் கீரையும் பலன்களும் சாப்பிடுவதை பரிந்துரைத்தார் அந்த வித்தியாச டாக்டர். மருந்து சீட்டில் மிக நீளமான பட்டியல் இருக்காது. ஒற்றை வரியில் ஏதேனும் எளிமையான மருந்து, பல நேரங்களில், அந்த மருந்தையும் அவரே கலக்கிக் கொடுத்துவிடுவார். எல்லாத்தையும் விட அவருடைய பீஸ்? அவராக கேட்கமாட்டார், வசதியுள்ளவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்வார். எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று கணக்குபார்க்கமாட்டார். அப்படியே வாங்கி, கால்சட்டை பையில் திணித்துக்கொள்வார். அந்தப்பணமும் கூட இல்லாதவர்களுக்கு பயன்படவே செலவழியும். மாயவரத்தில் பணியாற்றியபோது, மருத்துவமனையில் பொருள்கள் தீர்ந்து போன நிலையில், புதிதாக தோன்றிய யுக்தி, இப்படிப்பயன்பட்டது-- டாக்டரின் மேசையில் உண்டியல், விருப்பமுள்ளவர்கள் அதில் காசு போடலாம், சேர்கின்ற காசைக் கொண்டு, மருத்துவமனைக்குச் கூடுதலாகத் தேவைப்பட்ட சிகிச்சைப் பொருள்களை வாங்கினார்கள். சிகிச்சை பெற்றவர்கள் கொடுப்பதை (அது சில்லறையோ, நாணயமோ, நோட்டோ) என்ன ஏதென்று கணக்குப் பார்க்காமலேயே, கால்சராய் பையில் திணித்துக்கொள்வார். வீடிற்கு வந்தவுடன், அதற்கென்று வைத்திருக்கும் பெட்டியில் அதை கொட்டுவார். ஒவ்வொரு நாள் வெளியில் கிளம்பும்போதும், தேவையானவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காக, அந்தப் பெட்டியிலிருந்து அள்ளியெடுத்து சராய் பையில் நிரப்பிக்கொள்வார்.

          ரங்காச்சாரியின் தொழில் வல்லமை, பற்பல புதுமைகளையும் செய்தது. அந்த நாட்களில், யாரும் நினைத்துப்பார்க்க முடியாதவற்றைஎல்லாம் அவர் சாத்தியமாக்கினார். பெண்கள் இரண்டாம் தரமானவர்கள் என்னும் எண்ணம் ஓங்கிய அக்காலத்தில், இளம் பெண் டாக்டரை உதவியாளராக ஏற்பதற்கு ரங்காச்சாரி தயங்கியதில்லை, அதேப்போன்று, தம் உதவியாளர்கள், முறையான பயிற்சி பெற, அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதிலும் வல்லவர்.



          பர்காம்பூரில் இருக்கும்போது நடைபெற்ற சம்பவம் இது. நிறைமாததை நெருங்குகிற கர்ப்பிணி ஒருத்தி, தெருவில் நடந்துகொண்டிருந்தாள். மாடுகளை ஓட்டிக்கொண்டு போனான் சிறுவன் ஒருவன். எப்படியோ அது நடந்துவிட்டது. சிறுவன் கையிலிருந்த குச்சி, கர்ப்பிணி தாயின் வயிற்றில் குத்திக் கிழித்து வயிற்றில் உள்ள பிள்ளையின் பிஞ்சு விரல், ஓட்டை வழியே எட்டிப்பார்த்தது. தவறான பழக்கவழக்கங்களை என்றைக்குமே ஒத்துக்கொள்ளாத ரங்காச்சாரி, சற்று தூரத்தில் உதவி டாக்டர், சிகரட் குடிப்பதை பார்த்துவிட்டார். கோபத்தை அடக்கிக்கொண்டு, அந்த சிகரெட்டை பிடுங்கிக்கொண்டு ஓடிவந்தார். சிகரெட்டின் சூடு பட்டவுடன், அந்த கருக்குழந்தை விரலை இழுத்துக்கொள்ள ஆபத்தான நிலையிலிருந்து அந்த ஏழைத் தாயையும் குழந்தையையும் காப்பாற்றினார். ஊட்டிக்கு விடுமுறைக்குச் சென்றிருந்த சிறுமி ஒருத்தி, காய்ச்சலால் துவள்வது குறித்து செய்தி வந்தது. சென்னையிலிருந்தபடியே, அந்தச் சிறுமி டிப்தீரியா நோய்க்கு ஆளாகியிருந்தாள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார். குறித்த சிகிச்சைக்கான தகவலைத் தந்தி வழியே அனுப்பிவிட்டு, மாலை நேரத்தில் தம் காரிலேயே புறப்பட்டார், மறுநாள் பொழுது புலரும்போது சிறுமியின் முன்னால் நின்றார். அவர் சொன்ன மருந்தை அப்போதுதான் கொடுத்திருந்தார்கள், ஆனாலும், அவளைக் காப்பாற்றமுடியவில்லை. இன்னும் வேகமாகச் செயல்பட்டிருந்தால்-- முதல் நாள் மாலையிலிருந்து இப்பொழுது வரை காலதாமதத்தைக் குறைக்கமுடிந்தால்-- எத்தனை உயிர்களை இவ்வாறு மீட்கலாம்... பணக்கணக்கு பார்க்காத அந்த உள்ளம், இப்படியொரு பாசக்கணக்கைப் போட்டது. விளைவு? விமானம் வாங்கினார், வேகமாகப் பறந்தார், பற்பல உயிர்களைப் பிழைக்கச் செய்தார்.

          1917ஆம் ஆண்டு, பர்காம்பூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தார். எழும்பூர் பெண்கள் மருத்துவமனையின் உதவி சுபரின்டென்டெண்ட் பதவியேற்றார். அப்போது சர்ஜன் ஜெனரலாக இருந்த கர்னல் கிப்போர்ட், இந்தப் பதவி உயர்வுக்குக் காரணமானவர். முதலிலிருந்தே ரங்காச்சாரியை சரியாக அடையாளம் கண்டவர் அவர். 1919ல், ஜெனரல் ஆஸ்பத்திரியில் இரண்டாம் சர்ஜனாகவும் துறைமுக மருத்துவராகவும் பணி செய்யும் உயர்வு கிட்டியது. அப்பொழுது, மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியராகவும் பொறுப்பு வந்தது. ஆனாலும், பொறாமையும் பொசாப்பையும் அவர் சந்திக்காமல் இல்லை. இந்தியர் ஒருவர் இரண்டாம் சர்ஜனாக இருக்கலாமா? என்னும் முகச் சுளிப்புகளுக்கிடையே, மூன்றாம் சர்ஜனாக இறக்கப்பட்டார். ரங்காச்சாரிக்கு கூடிய புகழையும் பெருமையும் கண்ட பிற மருத்துவர்கள் (ஆங்கிலேயர்களும் ஒரு சில இந்தியர்களும் இதில் அடங்குவர்),  அவரின் முறைகளை விமர்சித்தார்கள் அவதூறு கிளப்பினார்கள். அந்தக் கர்மயோகியிடத்தில், எதுவும் எடுபடவில்லை, தான் கடமையென்று எண்ணியதை தொடர்ந்து செய்தார். எதிரியாக நினைத்து விமர்சித்தவர்களுக்கு சிக்கல்கள் வந்தபோது உதவியும் செய்தார்.

          சுதந்திரப் போராட்ட காலத்தில், தம்புச்செட்டி தெருவில், ரகசியமாக வைத்துக் காப்பாற்றப்பட்ட போராட்ட வீரர்களுக்கு சிகிச்சை செய்தார். வேண்டிய பொருட்களை வாங்கியும் கொடுத்தார். அரசு பதவியின் நடைமுறைகள் அவருக்கு ஒப்பாதபோது, அதிலிருந்து விலகிக்கொண்டு, சுயமாகச் செய்த சேவையை இன்னும் பெரியதாகத் தொடர்ந்தார்.

          டைபாய்டு நோய் கண்டு, சுயநினைவு நழுவிக்கொண்டிருந்த வேளையில், மருத்துவரீதியாக மதுவை அவருக்குக் கொடுப்பதற்காக பிறர் எடுத்த முயற்சியை, அந்த நிலையிலும் வீசிப்போட்ட மன உறுதி. அந்த மாமனிதரின் ஆதாரம். அவரே ஓடிய ரோல்ஸ்ராய்ஸ் கார். அவருடைய வசதி என்று சொல்லமுடியாது. உணவைக்கூட காரிலேயே முடித்துக்கொண்டு, சந்து பொந்துகளுக்கும் பட்டிதொட்டிக்கும் சென்று பிணிதீர்க்கும் பணியில் உதவியது. ஊருக்கும் உலகுக்கும் நோய் தீர்க்கப் போராடிய ரங்காச்சாரியை, டைபாய்ட் என்னும் எமன், எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் அழிந்தான். 1934, ஏப்ரல் 24ஆம் தேதி அப்பொழுதைய மவுண்ட் சாலையில் தேனாம்பேட்டையில் அந்த மருத்துவப் போராளி மண்ணுலகை நீத்தப்போது, சென்னை என்ன, தமிழகம் என்ன, இந்திய திருநாடே அழுதது.

          1939, நவம்பர் 6ம் நாள்-- நிறம், மொழி, குலம், சாதி, பணம் என்று எத்தகைய வேறுபாடும் காணாமல் சேவைபுரிந்த அந்தப் பெருமகனாரின் சிலையை, சென்னை பொது மருத்துவமனையின் வாயிலில், ஆங்கிலேய கவர்னர் எர்ஸ்கின் திறந்துவைத்தார். இன்றளவும், அங்கேயே, வருங்காலத்திற்கான வழிகாட்டியாக ரங்காச்சாரி நிற்கிறார்.