Tuesday, March 8, 2011

எல்லாம் மக்களுக்குத் தெரியும்!!!

          தமிழகத்தில் இல்லாத கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் கெஞ்சி அவர்களுக்கு 63 தொகுதிகளை கொடுத்துள்ளது திமுக. பாமகவிற்கு தேவையே இல்லாத 30. கேட்டால் கருணாநிதி ஒரு ராஜாதந்திரி என்கிறார்கள் இதை என்னவென்று சொல்வது? முட்டாள்களை எல்லாம் கூட்டணியில் வைத்துக்கொண்டிருக்கும் முட்டாள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

         மக்கள் வருந்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் அரசாங்கம் எடுத்த பொழுதெல்லாம் வாய் மூடியிருந்த கருணாநிதி, தொகுதிப்பங்கீட்டில் காங்கிரஸ் சிறிது அதிகமாக கேட்கவே உறவை முறிக்கும் நாடகம் நடத்தி அதில் தோல்வியும் அடைந்துவிட்டார்.

          கருணாநிதியின் ஜால்ராக்கள் (கி.வீரமணி, திருமாவளவன்) இப்பொழுது என்ன சொல்வார்கள்? காங்கிரஸ்ஐ கூட்டணியில் சேர்த்ததற்காக கருணாநிதியை புகழ்வர்களா? அனைத்தையும் பொறுமையுடன் கவனித்துக்கொண்டுள்ள மக்கள் இந்த தேர்தலில் இந்த மானங்கெட்ட கூட்டணிக்கு தக்க பதிலளிப்பார்கள்.

1 comment:

  1. //? அனைத்தையும் பொறுமையுடன் கவனித்துக்கொண்டுள்ள மக்கள் இந்த தேர்தலில் இந்த மானங்கெட்ட கூட்டணிக்கு தக்க பதிலளிப்பார்கள்.//

    appadiththaan thonrukirathu...

    ReplyDelete