Tuesday, April 5, 2011

திருமாவளவன்- நீங்க நல்லவரா கெட்டவரா?

          தமிழக அரசியலில் ஆவேச பேச்சாகட்டும், கதறி அழுவதாகட்டும் அல்லது முக்கிய இலங்கை தமிழர்களுக்கு உதவுவதாக நடிப்பதாகட்டும் இவருக்கு இணை இவரே. இவரைப்பற்றி எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வரை நல்ல அபிப்ராயமே இருந்தது. ஆனால் நேற்று எனக்குக் கிடைத்த உண்மை தகவலைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன், அந்த தகவலை பின்புப்பார்போம்.

          தலித்இனத்தை காக்க வந்த தலைவன் நான்தான் என்று கூறிக்கொள்ளும் திருமா, இன்று வரை அவர்களுக்கு என்ன நன்மைகள் செய்துள்ளார்? இவர் இவரின் இலக்கிலிருந்து வழுக்கி கருணாநிதிக்கு துதிப்பாடுவதே தொழிலாக செய்துக்கொண்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.

          தலித்துகளின் நீண்ட நாள் பிரச்சனைகளான இரட்டை குவளை முறை இன்னும் சில இடங்களில் நடைமுறையில் இருக்கிறது. இவர்களின் இடஒதிக்கீட்டில் உள்ள குளறுபடிகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. தலித்துகள் கல்வியில் முன்னேற்றம் அடைய செய்ய மிகப்பெரிய நடவடிக்கைகள் அல்லது சலுகைகள் எதுவும் தரப்படவில்லை. தலித்துகள் செய்யும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறித்து விழிப்புணர்வு பிரசாரமோ அல்லது இதை தடுக்க மிகப்பெரிய நடவடிக்கைகளோ உங்களிடம் இல்லையே? உங்கள் இனத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது இதை தீர்க்க யோகியதை உங்களுக்கில்லை, இலங்கை தமிழர்களைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை ஆனால் தீவிரவாதிகளான விடுதலைப்புலிகளைப்பற்றி மிகவும் கவலைப்படுகிறீர்கள்.

          கடைசியாக நீங்கள் பெற்ற 10 சட்டசபை தொகுதிகளில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பார்வேந்தன் என்ற ரவுடி வக்கீல். அவரின் தொழிலே கட்டப்பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிப்பதே ஆகும். இவரைப்போய் செய்யூர் வேட்பாளராக ஆக்கியுள்ளீர்களே ஏன்? உங்கள் கட்சியில் மிகவும் நல்லவர் குறைவோ? இதற்கு அவரிடமிருந்து மூன்றுகோடிகளை பெற்றுள்ளீர்களே இது ஞாயமா? மேலும் விசாரித்தப்போது உங்களின் அனைத்து வேட்பாளர்களிடமும் தலா மூன்று கோடி ரூபாய்களை பெற்றீர்கள் என்ற உண்மை செய்தி என்நெஞ்சை ஈட்டி என குத்திக் கிழித்தது.

          இதற்கு மேல் உங்களை உங்கள் ஜாதிக்காரர்களோ அல்லது தமிழர்களோ நம்பினால் அவர்கள் முட்டாள்.

No comments:

Post a Comment