Sunday, March 20, 2011

நாய்க்கு எலும்புத்துண்டு மக்களுக்கு இலவசம்!!!

          வரும் தேர்தலில் எப்படியேனும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து, தனது குடும்பம் செழிக்கவேண்டும் என்று கருணாநிதி உறுதி பூண்டுவிட்டார். நாய்களுக்கு எலும்புத்துண்டுகளைப் போட்டால் அவைகள் நம்மைப்பார்த்து வாலாட்டும் நமக்கு உண்மையாக இருக்கும். அதேப்போல் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசங்களை அள்ளி கொடுத்தால் அவர்கள் நமக்கே ஓட்டளிப்பர் என்று நினைத்துக்கொண்டுள்ளார் கருணாநிதி. இந்தத் தேர்தலில் அது நடக்கப்போவதில்லை, மாறாக மக்கள் அவர் மற்றும் அவரின் அறிக்கையை தூக்கி எரியப்போவது உறுதி. 


          தமிழக மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் இலவசங்களின் மூலம் ஒரு நாட்டையோ அல்லது ஏழைகளையோ உயர்த்த முடியவே முடியாது, மாறாக அவர்களின் வாழ்க்கைத்தரம் மேலும் குறைந்துவிடும் என்பதே உண்மை. கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஓட்டளித்து இலவசங்களைப்பெற்றிருந்தாலும், உண்மையில் விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு, தமிழ்நாட்டின் கடன் சுமை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது இவையே தமிழ்நாட்டின் இன்றைய உண்மை நிலைமை. இதை ஒவ்வொரு தமிழககுடிமகனும் நன்கு உணர்ந்து வரும் தேர்தலில் வாக்களிக்கவேண்டும்.

           ஏற்கனவே தமிழக குடிமக்களாகிய நாம் காமராஜர் என்ற அற்புத தெய்வத்தை தோற்கடித்து இந்த கருணாநிதி என்றப்பேயை தமிழ்நாட்டில் உலவவிட்டுவிட்டோம். எம்ஜிஆர் இருந்த வரை இந்த பேய் வாலை சுருட்டிக்கொண்டிருந்தது. அதற்குப்பிறகு இந்தப்பேயின் கொட்டத்தை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. இந்தப் பேயின் கொட்டத்தை அடக்க நமக்கு தற்பொழுதுள்ள ஒரே வாய்ப்பு அதிமுக தான். எனவே இந்தத் தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பீர்!! நலம் பெறுவீர்!!!

1 comment: