Saturday, March 19, 2011

தேர்தல் கமிஷனின் அராஜகம்!!!

          கடந்த சில நாட்களாக என் ரத்தத்தை அரசியல் கட்சிகள் மட்டுமே  கொதிப்படைய செய்துவந்தன, தற்பொழுது அந்த வேலையை தேர்தல் கமிஷன் செய்கிறது. எவ்வளவுதான் அதிகாரம் இருந்தாலும் அப்பாவி பொதுமக்களின் அன்றாட வியாபார விஷயங்களில் தலையிட்டு அவர்களுக்கு தொல்லைக்கொடுப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும். சிறு வியாபாரிகள் கொண்டுசெல்லும் வியாபார பொருட்கள், பணம் போன்றவற்றை வேண்டுமென்றே சோதனை என்றப்பெயரில் அவர்களுக்கு இம்சை செய்தும், அரசியல்வாதிகள் கொண்டுசெல்லும் பணத்தை கோடைவிட்டு அவர்களுக்கு உதவுவதும் மிகவும் கண்டனத்திற்கு உரியது. இதை அவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும், தைரியம் இருந்தால் அண்ணா அறிவாலயம் மற்றும் அதிமுக தலைமைகழகம் போன்றவற்றில் சோதனை செய்துகொள்ளவும். திருடர்கள் அங்கிருக்க யாரை திருப்திபடுத்த இந்த சோதனை? 

          அனைத்து அரசியல் கட்சிகளின் தொலைக்காட்சிகளும் சாதாரண மக்களிடம் சோதனை செய்வதை மற்றும் பிடிபடுவதை தங்கள் எதிர்க்கட்சிகள் செய்த தவறைப்போல சித்தரிப்பது மிகவும் கொடுமை. அரசியல் கட்சிகள் பிணங்கள் கொண்டுசெல்லும் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணத்தை கடத்துகின்றனர் என்று தெரிகிறது. இதுவரை இது போன்ற எத்தனை வாகனங்களை சோதனை செய்துள்ளனர்? இதை யாரிடம் கேட்பது? கடவுளே பொதுமக்களை காப்பாற்று!!!!

No comments:

Post a Comment