Saturday, April 9, 2011

தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே!!!

          கடந்த சில நாட்களாக என் மனதை உறுத்திக்கொண்டுள்ள விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நான் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் என் நண்பர்கள் அனைவரும் என்னை முதலில் கேட்கும் கேள்வி இந்த தேர்தலில் திமுக நம் தொகுதியில் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறது என்று உனக்கு தெரியுமா? ஒரு ஓட்டுக்கு 1000 கொடுக்கப்போகிறார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா? உனக்கு இதைப்பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா? என்றே என்னை கேட்கிறார்கள்.

          தேர்தல் பிரசாரத்தில் திமுக கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றோர் மக்களை இலவசங்கள் மூலம் மட்டும் சந்திக்கவில்லை. அவர்கள் மிகவும் அதிகமாக நம்பியுள்ளது ஓட்டுக்குப் பணம் மட்டுமே. மற்ற கட்சிகள் பணம் கொடுத்து ஒட்டு வாங்க நினைத்தாலும் இதில் முதலில் உள்ளது திமுக மட்டுமே. திமுக போன்ற மட்டமான கட்சிகளால் மக்களின் மனநிலையே மாறிவிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எந்த அடிப்படைவசதிகளையும் செய்யாமலே இலவசங்கள் மற்றும் ஓட்டுக்குப் பணம் இவை இரண்டை வைத்தே மக்களை கவரநினைக்கிறார் இந்த கருணாநிதி & சன்ஸ் நிறுவனம். மக்களும் பணத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்கின்றனர். 

          இதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பது இந்த மக்களுக்கு தெரியவில்லையே என்று மிகவும் கஷ்டமாக உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் தமிழகம் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்தது. இந்த மானங்கெட்ட மக்கள் அவரை தோற்கடித்தனர் விளைவு? இதோ இன்று வரை நாம் அனுபவித்துக்கொண்டுள்ளோம். இப்பொழுது முதல் மாநிலமாக குஜராத் உள்ளது. கருணாநிதியை முதல்வராக்கினால் இனி எப்பொழுதும் எந்தத்துறைகளிலும் தமிழகம் தன்னிறைவு அடையாது என்பது உண்மை. இதையெல்லாம் நினைக்கும் பொழுது ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.

                    தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே.  

          தவறான தலைவன் என்று தெரிந்தும் கருணாநிதியை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈனமே இல்லாமல் கருணாநிதி & சன்ஸ் மக்களிடம் ஒட்டுக்கேட்கின்றனர். மானமில்லாத தமிழகமக்களும் அவர்களை வரவேற்கின்றனர். இதை என்ன என்று சொல்ல? இப்படிக்கு 

                                   இந்த தேர்தல் முடிவுகளை நினைத்து பயப்படும் நான்    

1 comment:

  1. ...கடந்த 5 ஆண்டுகளில் எந்த அடிப்படைவசதிகளையும் ...

    humbakk.. dmk had done lot of infrastructure developments compared to ADMK..

    1. Bridges and flyovers everywhere..
    2. Good Highway Raod
    3. Socio Eco parks
    4. Hyundai. Ford, saint gobain..
    5. IT parks - TIDEL in chennai, IT highway, IT PARK in coimbatore..

    in fact, when jaya ruled.. it was all traffic jam for 2 hours.. the traffic will be closed in guindy when she start from poes.

    singapore companies ran out of chennai when they asked for bribe..

    DMK goverment is much much much better than ADMK

    ReplyDelete