Tuesday, February 22, 2011

அனைத்து சீமான்களுக்கும் ஒரு வேண்டுகோள்!!!

          தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி எவரும் பேசுவதில்லை மற்றும் சிந்திப்பதில்லை, மாறாக இலங்கையில் ஏதேனும் சிறு குண்டூசி கீழே விழுந்துவிட்டாலும் அதைப்பற்றியும் இலங்கை அரசைப் பற்றியும் பேசி எழுதி பணம் பார்க்க நினைப்பவர்களே அதிகமாக உள்ளனர். உதாரணமாக மாவீரர் சீமான் அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றியோ அல்லது தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களைப்பற்றியோ அக்கறை இல்லை, மக்களும் இவர் பேசுவதை ஒரு வேடிக்கையாகவும், தமாஷாகவும் மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர் என்பதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலே சாட்சி. சீமான் காங்கிரஸ் மற்றும் திமுகவை எதிர்த்து மிகவும் ஆவேசமாக பிரசாரம் செய்தும் அந்த கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்தனர். அதன் பிறகும் தற்பொழுது வரை சீமான் தமிழ்நாட்டு மக்கள்களின் மின் வசதி, விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட இவர் மூச்சு கூட விடவில்லை. இலங்கையில் ஏதேனும் சிறிய விஷயமென்றால் உடனே தனது ரவுடிகள் (நாம் தமிழர்) கட்சியுடன் சேர்ந்து ஆவேசமாக பேசுவதை எந்த தமிழனும் விரும்பவில்லை என்பதை இங்கு சொல்ல விரும்புகிறேன்.

          இறுதியாக வன்முறையை கையிலெடுத்த எந்த நபரும் ஹிட்லரில் இருந்து பிரபாகரன் வரையில் வென்றதாக சரித்திரம் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த இம்சைகளை விட விடுதலைப்புலிகள் கொடுத்த இம்சைகளே அதிகம். அது இப்பொழுது ஒய்ந்துவிட்டது, இனியாவது அவர்களை நிம்மதியாக வாழவிடுமாறு அனைத்து தமிழ்நாட்டு சீமான்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment