Friday, February 25, 2011

உத்தமரின் வாழ்க்கை வரலாறு


சபாஷ் சரியான போட்டி!!!

          அதிமுக  கூட்டணியில் தேமுதிக வந்ததை அடுத்து வரும் சட்டசபை தேர்தல் மிகவும் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிச்சயம்.

Tuesday, February 22, 2011

அனைத்து சீமான்களுக்கும் ஒரு வேண்டுகோள்!!!

          தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி எவரும் பேசுவதில்லை மற்றும் சிந்திப்பதில்லை, மாறாக இலங்கையில் ஏதேனும் சிறு குண்டூசி கீழே விழுந்துவிட்டாலும் அதைப்பற்றியும் இலங்கை அரசைப் பற்றியும் பேசி எழுதி பணம் பார்க்க நினைப்பவர்களே அதிகமாக உள்ளனர். உதாரணமாக மாவீரர் சீமான் அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றியோ அல்லது தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களைப்பற்றியோ அக்கறை இல்லை, மக்களும் இவர் பேசுவதை ஒரு வேடிக்கையாகவும், தமாஷாகவும் மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர் என்பதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலே சாட்சி. சீமான் காங்கிரஸ் மற்றும் திமுகவை எதிர்த்து மிகவும் ஆவேசமாக பிரசாரம் செய்தும் அந்த கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்தனர். அதன் பிறகும் தற்பொழுது வரை சீமான் தமிழ்நாட்டு மக்கள்களின் மின் வசதி, விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட இவர் மூச்சு கூட விடவில்லை. இலங்கையில் ஏதேனும் சிறிய விஷயமென்றால் உடனே தனது ரவுடிகள் (நாம் தமிழர்) கட்சியுடன் சேர்ந்து ஆவேசமாக பேசுவதை எந்த தமிழனும் விரும்பவில்லை என்பதை இங்கு சொல்ல விரும்புகிறேன்.

          இறுதியாக வன்முறையை கையிலெடுத்த எந்த நபரும் ஹிட்லரில் இருந்து பிரபாகரன் வரையில் வென்றதாக சரித்திரம் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த இம்சைகளை விட விடுதலைப்புலிகள் கொடுத்த இம்சைகளே அதிகம். அது இப்பொழுது ஒய்ந்துவிட்டது, இனியாவது அவர்களை நிம்மதியாக வாழவிடுமாறு அனைத்து தமிழ்நாட்டு சீமான்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

நடுநிசி நாய்கள்

          இந்தப் படத்தை விமர்சனம் செய்யவே முடியாது. தயவுசெய்து இந்தப் படத்தை பார்க்க நினைப்பவர்கள் ஒரு BLUE FILM காசெட் வாங்கிப் பார்க்கலாம், படம் அவ்வளவு மோசம். வக்கிர புத்தியுடைய கவுதம் வாசுதேவ் மேனனின் மிக மோசமான படம் இது, மற்றும் அவரின் மனதை படம் பிடிப்பதாகவே இந்தப் படம் உள்ளது.



Monday, February 21, 2011

இந்தியருக்கு தெரியாததெல்லாம் அமெரிக்கர்களுக்கு தெரிகிறது!!!

          ரொனால்ட் ரீகனின் நூற்றாண்டு விழாவையொட்டி அமெரிக்காவின் TIME பத்திரிகை, உலகம் முழுவதிலிருந்து 25 சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் நமது நாட்டின் தந்தை மகாத்மா காந்தி.  வன்முறையற்ற பாதையின் மூலம் சாதனை புரிய முடியும் என்று இந்த உலகிற்கு உணர்த்தியதால் தான் இந்த முதலிடம் கிடைத்திருக்கிறது காந்திக்கு. அமெரிக்காவில் சிவில் உரிமைகளுக்காக இயங்கும் இயக்கங்களுக்கு உந்துதலாக காந்தியக் கொள்கைகள் இருக்கின்றன என்றும் TIME பத்திரிகை பாராட்டுகிறது.

          முதல் 25 இடங்களுக்குள் இந்தியாவிலிருந்து இடம் பிடித்த மற்றொருவர், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த மொஹலாய பேரரசர் அக்பர். பன்முகத்தன்மை கொண்ட பல சிற்றரசுகளை கட்டிக்காத்து பேரரசராக ஆட்சி செய்து, இன்றைய இந்தியா என்கிற நாட்டின் உருவாக்கத்தின் முன்மாதிரியாக மொஹலாயப் பேரரசை 40 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததை பெருமையுடன் நினைவுகூர்கிறது TIME பத்திரிகை.

          தலாய்லாமா, நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன், ஹிட்லர், முசோலினி, கிளியோபாட்ரா, ஆகியோரும் இப்பட்டியலில் அணிவகுக்கிறார்கள்.

Friday, February 18, 2011

உலககோப்பையில் இந்தியாவின் போட்டிகள்

          உலககோப்பையில் இந்தியாவின் போட்டிகள் மற்றும் தேதிகளை காணலாம்.

19/02/2011  வங்கதேசத்துடன் டாக்கா           பிற்பகல் 2 மணி 
27/02/2011  இங்கிலாந்துடன்   பெங்களூர்   பிற்பகல் 2.30 மணி 

06/03/2011  அயர்லாந்துடன்    பெங்களூர்    பிற்பகல் 2.30 மணி 

09/03/2011  நெதர்லாந்து            டெல்லி         பிற்பகல் 2.30 மணி
12/03/2011  தென்னாப்ரிக்கா     நாக்பூர்          பிற்பகல் 2.30 மணி 

20/03/2011 வெஸ்ட்இண்டீஸ்  சென்னை    பிற்பகல் 2.30 மணி

Saturday, February 12, 2011

DR ரங்காசாரி (1882--1934) THE FLYING DOCTOR

          கானாடுகாத்தான் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்படிருந்தார் அந்தப் பெண்மணி. வசதிஏதும் இல்லாதவர் குழந்தை பிறந்துவிட்டாலும் பரவாயில்லை. இயற்க்கை பிரசவம் நடைபெற வழியில்லாமல், வயிற்ரை கிழித்து குழந்தையை எடுக்கவேண்டும். அதற்கு சரியான மருத்துவர் வேண்டும். கானாடுகாத்தான் லேடி பேன்ட்லாண்ட் ஆஸ்பத்திரியிலிருந்து செய்தி அனுப்பப்படுகிறது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம், சில மணிநேரங்களில் பக்கத்தில் ஒரு வயலில் இறங்குகிறது. அடுத்த சில மணிநேரங்களில், தாயும் சேயும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, நலமாக மூச்சுவிடுகிறார்கள். தனக்கு எவ்வளவு FEES தருவார்கள் என்பதைப் பற்றிய நினைப்பே இல்லாமல், சென்னையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு என்ன சிகிச்சை கொடுக்கவேண்டும் என்பதைப் பற்றிய நினைப்போடு புறப்பட்டுப் போகிறார் அந்த டாக்டர். தொழில்நுட்பம் பெருகிவிட்ட 21ம் நூற்றாண்டோ, குறைந்த விலை விமான நிறுவனங்கள் படர்ந்துவிட்ட நவீன யுகமோ இல்லை. சென்னையிலிருந்து காரைக்குடி சுமார் 400 கி.மீ, அங்கிருந்து கானாடுகாத்தான் சுமார் 16 கி.மீ. அந்த ஊர் என்று மட்டுமில்லாமல், இன்னும் பற்பல ஊர்களுக்கும் இடங்களுக்கும், தன் சொந்தத விமானத்தில் பறந்து, தெரிந்தவர் தெரியாதவர், ஏழை பணக்காரர் என்று எந்தவித பேதமும் பார்க்காமல் மருத்துவம் செய்த மருத்துவப் பண்பாளர் DR ரங்காச்சாரி. 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தார். அந்தக்காலத்தில் ரங்காச்சாரி FLYING டாக்டர் என்றும் அழைக்கப்பட்டார். 

          தன்னை நம்பி வந்த நோயாளிக்காக, எமதர்மனை எத்தனையோ முறை ரங்காச்சாரி எட்டி உதைத்தார் என்பது தமிழகத்தின் மருத்துவ வரலாறு. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், DR ரங்காசாரியால் மிகப்பெரிய புரட்சிகளே ஏற்பட்டன எனலாம். மகப்பேறு காலங்களிலும், தங்களுடைய நோயை வெளியே சொல்லமுடியாத நாணத்தாலும் பற்பல பெண்கள் உயிரிழந்தனர். தாயுன் சேயும் தனித்தனி உயிர்களாக முடியும் என்பதை, மக்களென்ன, இயற்கையே நம்பாத காலம். மருத்துவப் படிப்பு முடிந்து, பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றிய சில ஆண்டுகளில், எண்ணற்ற தாய்மார்களை எமனுடைய பிடியிலிருந்து கைப்பற்றினார் ரங்காச்சாரி.

          தொடர்ந்து ஹைதராபாத்திலும் பணி. கோஷாவுக்குள் பெண்கள், மதம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு, பிற மனிதர்கள் கையால் மருந்தா என்று முகம் சுளித்த மக்கள். 1909ஆம் ஆண்டு -- கறுப்புக் காலனாக ப்ளேக் நோய், அந்தப் பிரதேசத்தையே உள்ளுக்கியப்பொழுது ரங்காச்சாரியின் சிகிச்சை, நோய் கொடுமையிலிருந்து மட்டுமில்லாமல், வேண்டாத மூடப் பழக்கவழக்கங்களில் இருந்தும் மக்களை மீட்டது.

          மாயவரம் மருத்துவமனை, தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவப்பள்ளியின் தலைமை ஆசான், பின்னர் நாகப்பட்டினத்தில் சிவில் சர்ஜனாக உயர்வு, அடுத்து கும்பகோணம்... இப்படியாக ரங்காச்சாரியின் பணி தொடர, ஆரம்பகாலங்களில் சைக்கிள், அடுத்து குதிரைவண்டி, பின்பு மோட்டார் சைக்கிள் என்று ஓடி ஓடி, நோயாளிகளின் இடம் தேடித் தேடி, துன்பம் தீர்த்த டாக்டர், இப்போது கார் வாங்கிவிட்டார், சொகுசாகப் பயணம் செய்ய அல்ல! சோர்ந்து வாடித் தவித்த ஏழைக்கும் பாழைக்கும் பட்டிக்காட்டானுக்கும் பட்டினதானுக்கும் பெரியவர்க்கும் சிறியவர்க்கும் வைத்தியம் செய்வதற்கு அந்தக் கறுப்பு நிற ஸ்டாண்டர்ட் கார் சீறிப் பாயும்.

          DR ரங்காச்சாரி எந்தத் துறையில் SPECIALIST? இந்த வினோத வினாவிற்கு சரியான விடை தர முடியாது. காரணம், அவர் பார்க்காத வைத்தியம் இல்லை, தீர்க்காத வியாதி இல்லை. மிகவும் கடினமான பிரசவம், அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் பிளவை கட்டி, கீழே விழுந்ததால் காயம், பட்டுப் புரையோடிப் போன எலும்பு ரணம், உள்ளுறுப்புகளில் தோன்றும் பெயர் தெரியாத பெரிய பெரிய நோய்கள்-- எதுவாக இருந்தாலும் ரங்காசாரியிடம் தீர்வு உண்டு. அப்படியானால், அவர் கொடுத்த மருந்துகளும் மிக உயர்ந்தவையாக இருக்குமோ? அதுதான் இல்லை. சாதாரணமானவை! அவ்வளவுகூட இல்லை-- மருந்து என்றே சொல்ல முடியாத இயற்கையான காற்று, சூர்ய வெளிச்சம், சின்னச்சின்ன உணவுப் பழக்கங்கள், காய்கறிகளும் கீரையும் பலன்களும் சாப்பிடுவதை பரிந்துரைத்தார் அந்த வித்தியாச டாக்டர். மருந்து சீட்டில் மிக நீளமான பட்டியல் இருக்காது. ஒற்றை வரியில் ஏதேனும் எளிமையான மருந்து, பல நேரங்களில், அந்த மருந்தையும் அவரே கலக்கிக் கொடுத்துவிடுவார். எல்லாத்தையும் விட அவருடைய பீஸ்? அவராக கேட்கமாட்டார், வசதியுள்ளவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்வார். எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று கணக்குபார்க்கமாட்டார். அப்படியே வாங்கி, கால்சட்டை பையில் திணித்துக்கொள்வார். அந்தப்பணமும் கூட இல்லாதவர்களுக்கு பயன்படவே செலவழியும். மாயவரத்தில் பணியாற்றியபோது, மருத்துவமனையில் பொருள்கள் தீர்ந்து போன நிலையில், புதிதாக தோன்றிய யுக்தி, இப்படிப்பயன்பட்டது-- டாக்டரின் மேசையில் உண்டியல், விருப்பமுள்ளவர்கள் அதில் காசு போடலாம், சேர்கின்ற காசைக் கொண்டு, மருத்துவமனைக்குச் கூடுதலாகத் தேவைப்பட்ட சிகிச்சைப் பொருள்களை வாங்கினார்கள். சிகிச்சை பெற்றவர்கள் கொடுப்பதை (அது சில்லறையோ, நாணயமோ, நோட்டோ) என்ன ஏதென்று கணக்குப் பார்க்காமலேயே, கால்சராய் பையில் திணித்துக்கொள்வார். வீடிற்கு வந்தவுடன், அதற்கென்று வைத்திருக்கும் பெட்டியில் அதை கொட்டுவார். ஒவ்வொரு நாள் வெளியில் கிளம்பும்போதும், தேவையானவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காக, அந்தப் பெட்டியிலிருந்து அள்ளியெடுத்து சராய் பையில் நிரப்பிக்கொள்வார்.

          ரங்காச்சாரியின் தொழில் வல்லமை, பற்பல புதுமைகளையும் செய்தது. அந்த நாட்களில், யாரும் நினைத்துப்பார்க்க முடியாதவற்றைஎல்லாம் அவர் சாத்தியமாக்கினார். பெண்கள் இரண்டாம் தரமானவர்கள் என்னும் எண்ணம் ஓங்கிய அக்காலத்தில், இளம் பெண் டாக்டரை உதவியாளராக ஏற்பதற்கு ரங்காச்சாரி தயங்கியதில்லை, அதேப்போன்று, தம் உதவியாளர்கள், முறையான பயிற்சி பெற, அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதிலும் வல்லவர்.



          பர்காம்பூரில் இருக்கும்போது நடைபெற்ற சம்பவம் இது. நிறைமாததை நெருங்குகிற கர்ப்பிணி ஒருத்தி, தெருவில் நடந்துகொண்டிருந்தாள். மாடுகளை ஓட்டிக்கொண்டு போனான் சிறுவன் ஒருவன். எப்படியோ அது நடந்துவிட்டது. சிறுவன் கையிலிருந்த குச்சி, கர்ப்பிணி தாயின் வயிற்றில் குத்திக் கிழித்து வயிற்றில் உள்ள பிள்ளையின் பிஞ்சு விரல், ஓட்டை வழியே எட்டிப்பார்த்தது. தவறான பழக்கவழக்கங்களை என்றைக்குமே ஒத்துக்கொள்ளாத ரங்காச்சாரி, சற்று தூரத்தில் உதவி டாக்டர், சிகரட் குடிப்பதை பார்த்துவிட்டார். கோபத்தை அடக்கிக்கொண்டு, அந்த சிகரெட்டை பிடுங்கிக்கொண்டு ஓடிவந்தார். சிகரெட்டின் சூடு பட்டவுடன், அந்த கருக்குழந்தை விரலை இழுத்துக்கொள்ள ஆபத்தான நிலையிலிருந்து அந்த ஏழைத் தாயையும் குழந்தையையும் காப்பாற்றினார். ஊட்டிக்கு விடுமுறைக்குச் சென்றிருந்த சிறுமி ஒருத்தி, காய்ச்சலால் துவள்வது குறித்து செய்தி வந்தது. சென்னையிலிருந்தபடியே, அந்தச் சிறுமி டிப்தீரியா நோய்க்கு ஆளாகியிருந்தாள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார். குறித்த சிகிச்சைக்கான தகவலைத் தந்தி வழியே அனுப்பிவிட்டு, மாலை நேரத்தில் தம் காரிலேயே புறப்பட்டார், மறுநாள் பொழுது புலரும்போது சிறுமியின் முன்னால் நின்றார். அவர் சொன்ன மருந்தை அப்போதுதான் கொடுத்திருந்தார்கள், ஆனாலும், அவளைக் காப்பாற்றமுடியவில்லை. இன்னும் வேகமாகச் செயல்பட்டிருந்தால்-- முதல் நாள் மாலையிலிருந்து இப்பொழுது வரை காலதாமதத்தைக் குறைக்கமுடிந்தால்-- எத்தனை உயிர்களை இவ்வாறு மீட்கலாம்... பணக்கணக்கு பார்க்காத அந்த உள்ளம், இப்படியொரு பாசக்கணக்கைப் போட்டது. விளைவு? விமானம் வாங்கினார், வேகமாகப் பறந்தார், பற்பல உயிர்களைப் பிழைக்கச் செய்தார்.

          1917ஆம் ஆண்டு, பர்காம்பூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தார். எழும்பூர் பெண்கள் மருத்துவமனையின் உதவி சுபரின்டென்டெண்ட் பதவியேற்றார். அப்போது சர்ஜன் ஜெனரலாக இருந்த கர்னல் கிப்போர்ட், இந்தப் பதவி உயர்வுக்குக் காரணமானவர். முதலிலிருந்தே ரங்காச்சாரியை சரியாக அடையாளம் கண்டவர் அவர். 1919ல், ஜெனரல் ஆஸ்பத்திரியில் இரண்டாம் சர்ஜனாகவும் துறைமுக மருத்துவராகவும் பணி செய்யும் உயர்வு கிட்டியது. அப்பொழுது, மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியராகவும் பொறுப்பு வந்தது. ஆனாலும், பொறாமையும் பொசாப்பையும் அவர் சந்திக்காமல் இல்லை. இந்தியர் ஒருவர் இரண்டாம் சர்ஜனாக இருக்கலாமா? என்னும் முகச் சுளிப்புகளுக்கிடையே, மூன்றாம் சர்ஜனாக இறக்கப்பட்டார். ரங்காச்சாரிக்கு கூடிய புகழையும் பெருமையும் கண்ட பிற மருத்துவர்கள் (ஆங்கிலேயர்களும் ஒரு சில இந்தியர்களும் இதில் அடங்குவர்),  அவரின் முறைகளை விமர்சித்தார்கள் அவதூறு கிளப்பினார்கள். அந்தக் கர்மயோகியிடத்தில், எதுவும் எடுபடவில்லை, தான் கடமையென்று எண்ணியதை தொடர்ந்து செய்தார். எதிரியாக நினைத்து விமர்சித்தவர்களுக்கு சிக்கல்கள் வந்தபோது உதவியும் செய்தார்.

          சுதந்திரப் போராட்ட காலத்தில், தம்புச்செட்டி தெருவில், ரகசியமாக வைத்துக் காப்பாற்றப்பட்ட போராட்ட வீரர்களுக்கு சிகிச்சை செய்தார். வேண்டிய பொருட்களை வாங்கியும் கொடுத்தார். அரசு பதவியின் நடைமுறைகள் அவருக்கு ஒப்பாதபோது, அதிலிருந்து விலகிக்கொண்டு, சுயமாகச் செய்த சேவையை இன்னும் பெரியதாகத் தொடர்ந்தார்.

          டைபாய்டு நோய் கண்டு, சுயநினைவு நழுவிக்கொண்டிருந்த வேளையில், மருத்துவரீதியாக மதுவை அவருக்குக் கொடுப்பதற்காக பிறர் எடுத்த முயற்சியை, அந்த நிலையிலும் வீசிப்போட்ட மன உறுதி. அந்த மாமனிதரின் ஆதாரம். அவரே ஓடிய ரோல்ஸ்ராய்ஸ் கார். அவருடைய வசதி என்று சொல்லமுடியாது. உணவைக்கூட காரிலேயே முடித்துக்கொண்டு, சந்து பொந்துகளுக்கும் பட்டிதொட்டிக்கும் சென்று பிணிதீர்க்கும் பணியில் உதவியது. ஊருக்கும் உலகுக்கும் நோய் தீர்க்கப் போராடிய ரங்காச்சாரியை, டைபாய்ட் என்னும் எமன், எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் அழிந்தான். 1934, ஏப்ரல் 24ஆம் தேதி அப்பொழுதைய மவுண்ட் சாலையில் தேனாம்பேட்டையில் அந்த மருத்துவப் போராளி மண்ணுலகை நீத்தப்போது, சென்னை என்ன, தமிழகம் என்ன, இந்திய திருநாடே அழுதது.

          1939, நவம்பர் 6ம் நாள்-- நிறம், மொழி, குலம், சாதி, பணம் என்று எத்தகைய வேறுபாடும் காணாமல் சேவைபுரிந்த அந்தப் பெருமகனாரின் சிலையை, சென்னை பொது மருத்துவமனையின் வாயிலில், ஆங்கிலேய கவர்னர் எர்ஸ்கின் திறந்துவைத்தார். இன்றளவும், அங்கேயே, வருங்காலத்திற்கான வழிகாட்டியாக ரங்காச்சாரி நிற்கிறார்.  

10வது உலகக்கோப்பை யாருக்கு?

          10வது உலகக்கோப்பை கிரிக்கெட் வரும் 19ம் தேதி துவங்குகிறது. எந்த அணி கோப்பையை வெல்லும் என்று நான் சில அணிகளின் பலம் மற்றும் பலவீனங்களை பட்டியலிட்டுள்ளேன்.
         முதலில் நான் கோப்பையை வெல்லும் நாடாக கணித்திருப்பது தென்னாப்ரிக்கா, இந்த அணியில் சிறந்த BATTING, BOWLING, சிறந்த ALLROUNDERS மற்றும் சிறந்த FIELDERS என்று அனைத்து தரப்பிலும் மிகவும் பலமாக உள்ளது. பலவீனம் என்று பார்த்தால் அணிக்கு முறையான WICKETKEEPER இல்லை, மற்றும் முக்கிய ஆட்டங்களில் ஒருவித பதட்டத்தை அடைவது, இவற்றை தவிர்த்தால் இந்த அணிக்கே வெற்றி நிச்சயம்.
        
          இரண்டாவது அணி நமது இந்திய அணி. உலகின் பலமான BATTING வரிசை, எந்த நேரமும் நிதானத்தை இழக்காத தலைமை(கேப்டன்), உள்ளூரிலேயே போட்டி நடப்பது என்று இவைகளே பலமாகும். பலவீனமாக ஹர்பஜன், ஜாகிர் இருவரை தவிர பந்துவீச்சில் நட்சத்திரங்கள் குறிப்பிடும்படி எவரும் இல்லை, கவலைக்குரிய FIELDING. இந்த பலவீனங்களை தவிர்த்தால் வெற்றி நிச்சயம்.

          இலங்கை. இந்திய அணியிடமுள்ள அனைத்து பலமும் இவர்களிடம் உள்ளது, மேலும் FIELDINGல் இவர்களின் பங்கு குறிப்பிடும் வகையில் உள்ளது. பலவீனம் பாதிக்கு மேல் 30 வயதிற்கு மேல் உள்ள வீரர்கள்.

           இங்கிலாந்து. T20 CHAMPIONகளின் சமீபத்திய ஆட்டம் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. உலகின் பலமான மிடில் ஆர்டர், பந்துவீச்சில் SWAN, ANDRASON, BRAD என்று பலமாகவும், சிறந்த FIELDINGம் இந்த அணிக்கு சாதகமாக உள்ளன. பலவீனமாக நட்சத்திர வீரர்கள் இல்லாமலிருப்பதும், மூத்த வீரர்களிடம் ஒற்றுமை இல்லாமை. இவைகளை திருத்தவேண்டும்.

           ஆஸ்திரேலியா. அதிக முறை உலகக்கோப்பையை வென்றுள்ள அணி. மூத்த அனுபவம் வாய்ந்த தலைமை, பந்து வீச்சில் உலகின் பலமான அணி, இவைகளே இவற்றின் முக்கிய பலம். பலவீனமாக அநாகரீக நடத்தை, தான் என்ற அகந்தை இவை இருக்கிற வரை கோப்பையை ஜெயிப்பது மிகவும் கடினம்.

Wednesday, February 9, 2011

நிர்வாக திறமையற்ற கலைஞர் கருணாநிதி !!!

         தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
          மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.
இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம் வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது.தமிழக அரசின் மாநில திட்டக்குழு வகுத்துள்ள, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
          மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு, 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில்துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.
அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆச்சு?
        
          கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் துவக்கப்படவே இல்லை. பல திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளன.தமிழக அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மார்ச் 19ம் தேதி தாக்கல் செய்தது. இதில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ள முக்கிய திட்டங்கள் வருமாறு:
* நவீன முறையில் தூய்மையாகவும், துரிதமாகவும் பாலை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்யவும், கோவை ஆவின் நிறுவனம், 27 கோடி ரூபாயில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் உதவியோடு நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.
* தஞ்சை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில், கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டம், 376 கோடியிலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 164 கோடியிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 69 கோடி ரூபாயிலும் என, மொத்தம், 609 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே போன்ற அறிவிப்பு, இந்த ஆண்டு கவர்னர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. பணிகள் துவக்கப்படவில்லை.
* இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வீடுகள் கட்டிக் கொடுக்கவும், 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
* மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, "ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி', வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.
* மத்திய அரசின் நிதி உதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் துவக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன், ஏழு புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலிடெக்னிக் கூட புதிதாக துவக்கப்படவில்லை.
* திருவண்ணாமலையில், ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை இதற்கான கட்டுமானப் பணிகளை துவக்கவில்லை.
* வரும் நிதியாண்டில், தமிழக மின்வாரியம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலம், 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என வழக்கம் போல அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
* வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப் பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் திட்டம், 1,800 கோடி ரூபாயில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டியதோடு சரி. பணிகள் துவக்கப்படவில்லை.
* யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்றவற்றை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத உதவித் தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கும் பணி ஏதும் துவக்கப்படவில்லை.இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.
                                                                                              நன்றி தினமலர்

யுத்தம் செய்!!!

          மிஷ்கினின் யுத்தம் செய் படத்தை என் நண்பர்களுடன் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. நல்ல கதை, நல்ல திரைக்கதை கலந்த கலவையில் வெளிவந்துள்ளது. படத்தில் சேரனை தவிர அனைவரும் பொறுப்புணர்ந்து நடித்துள்ளார்கள். YG மகேந்திரன் மற்றும் அவரின் மனைவியாக வரும் நடிகையின் நடிப்பும் அற்புதம். படம் நன்று.

Monday, February 7, 2011

உலக பெட்ரோல் விலைகள்!!!

          துருக்கி 113.30, நார்வே 112, இங்கிலாந்து 95.50, ஹாங்காங் 84.10, பிரேசில் 66, கனடா 57, பாகிஸ்தான் 44.80, அமெரிக்கா 44.25, ரஷ்யா 42.275, சீனா 31.30, மலேசியா 25.40, யுனைடெட் அராப் எமிரடேஸ் 15.65, சவூதி அரேபியா 5, வெனிசுலா 2.12. நம் நாட்டு பெட்ரோல் விலையை நான் சொல்ல தேவையில்லை .