Saturday, April 2, 2011

இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி!!!

          இன்று அனைவராலும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. சமபலம் கொண்ட இந்தியாவும் இலங்கையும் மோதஉள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றியடையும் அணி உலகக்கோப்பையையும் உலக சாம்பியன் பட்டதையும் வெல்லும். இந்தப்போட்டியை காண இலங்கையின் அதிபர் ராஜபக்சே மற்றும் இந்திய ஜனாதிபதி பிரதிபா படீல் போன்றோர் வருகை தர உள்ளனர். இதைமுன்னிட்டு 8 அடுக்கு பாதுகாப்பு தரப்படுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள்.
         மும்பை வாங்கடே மைதான PITCH முதல் ஆடுபவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் 280க்கு மேல் சேர்க்கும் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் TOSS ஒரு முக்கிய பங்குவகிக்கும்.

1 comment:

  1. துன்பக் கடலில் துவளும் இந்தியா!
    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
    http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

    ReplyDelete