நல்ல படங்களை மட்டுமே கொடுத்துவந்த கமல்ஹாசன் ஒரு மட்டமான படத்தை கொடுத்துள்ளார். மட்டமான கதை, மட்டமான திரைக்கதை, மட்டமான வசனம் இவை மூன்றும் சேர்ந்த கலவையாகவே மன்மதன் அம்பை பார்க்கமுடிகிறது. உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் மட்டுமே இதுபோன்ற மட்டமான படத்தை எடுப்பது சாத்தியம், அவர்களுக்கு எதோ ஒரு வழியில் வரும் பணத்தை இதுபோன்ற மட்டமான படத்தை எடுக்கின்றனர். இனி கமல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமாட்டார் என்று நம்புவோம். படத்தில் நடிகை சங்கீதாவின் நடிப்பு மட்டும் நன்று.
இந்த BLOGல் பொது, அரசியல், சினிமா, விளையாட்டு, மற்றும் அனைத்துவிதமான நிகழ்வுகளை பற்றி விமர்சனம் மற்றும் செய்திகளை காணலாம்.
Friday, December 24, 2010
Thursday, December 16, 2010
Saturday, December 11, 2010
Wednesday, December 8, 2010
AIRTEL CUSTOMER CARE COMEDY!!!
PLZ FRIENDS DONT MISS TO HEAR THESE COMEDIES
CLICK BELOW LINKS
http://www.youtube.com/watch?v=x_sbd1FUGZM
http://www.youtube.com/watch?v=nQ6tW8FRPpk&feature=related
http://www.youtube.com/watch?v=TZF1-2jiPQ8&feature=related
http://www.youtube.com/watch?v=vT9g5_gfcgs&feature=related
CLICK BELOW LINKS
http://www.youtube.com/watch?v=x_sbd1FUGZM
http://www.youtube.com/watch?v=nQ6tW8FRPpk&feature=related
http://www.youtube.com/watch?v=TZF1-2jiPQ8&feature=related
http://www.youtube.com/watch?v=vT9g5_gfcgs&feature=related
Saturday, November 27, 2010
Sunday, November 14, 2010
Saturday, October 9, 2010
Saturday, October 2, 2010
எந்திரன்-மந்திரன்
எந்திரன் எதிர்ப்பார்த்தது போலவே நன்றாகவே வந்துள்ளது. ஷங்கரின் உழைப்பு நன்றாக தெரிகின்றது. ரஜினியும் மிக மிக நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யாராய் மிகவும் அழகாக உள்ளார். எழுத்தாளர் சுஜாதாவின் கடைசி படம் மிகவும் நன்று.
Saturday, September 11, 2010
BEST SOFTWARE OF BILGATES!!!
மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் எத்தனையோ சிறந்த மென்பொருள் உருவாக்கியுள்ளார், அவற்றில் மிகச்சிறந்தது எது என்று கேட்டால் எதை சொல்வீர்கள்? அவரின் மகள் படத்தை பாருங்கள் :-))
Friday, September 10, 2010
BOSS A BASKARAN
பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மிகவும் நன்றாக உள்ளது. சிறந்த COMEDY படமாக உருவாக்கியுள்ளார்கள். சந்தானம் வரும் அனைத்துக்காட்சிகளிலும் மிகவும் சிரிப்பாக உள்ளது. ஆர்யாவும் நன்றாக நடித்துள்ளார். நயன்தாரா மிகவும் நன்றாக இருப்பார் ஆனால் இந்தப் படத்தில் சுமாராக உள்ளார். இந்தப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.
Sunday, September 5, 2010
Sunday, August 22, 2010
Wednesday, August 18, 2010
ENTHIRAN WALLPAPERS (ROBOT)
எந்திரன் படத்தின் WALLPAPERS சிலவற்றை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். SEP3 படம் வெளிவரலாம் என்று தெரிகிறது.
Saturday, August 14, 2010
Sunday, August 8, 2010
DR ரங்காசாரி (1882--1934) THE FLYING DOCTOR
கானாடுகாத்தான் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்படிருந்தார் அந்தப் பெண்மணி. வசதிஏதும் இல்லாதவர் குழந்தை பிறந்துவிட்டாலும் பரவாயில்லை. இயற்க்கை பிரசவம் நடைபெற வழியில்லாமல், வயிற்ரை கிழித்து குழந்தையை எடுக்கவேண்டும். அதற்கு சரியான மருத்துவர் வேண்டும். கானாடுகாத்தான் லேடி பேன்ட்லாண்ட் ஆஸ்பத்திரியிலிருந்து செய்தி அனுப்பப்படுகிறது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம், சில மணிநேரங்களில் பக்கத்தில் ஒரு வயலில் இறங்குகிறது. அடுத்த சில மணிநேரங்களில், தாயும் சேயும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, நலமாக மூச்சுவிடுகிறார்கள். தனக்கு எவ்வளவு FEES தருவார்கள் என்பதைப் பற்றிய நினைப்பே இல்லாமல், சென்னையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு என்ன சிகிச்சை கொடுக்கவேண்டும் என்பதைப் பற்றிய நினைப்போடு புறப்பட்டுப் போகிறார் அந்த டாக்டர். தொழில்நுட்பம் பெருகிவிட்ட 21ம் நூற்றாண்டோ, குறைந்த விலை விமான நிறுவனங்கள் படர்ந்துவிட்ட நவீன யுகமோ இல்லை. சென்னையிலிருந்து காரைக்குடி சுமார் 400 கி.மீ, அங்கிருந்து கானாடுகாத்தான் சுமார் 16 கி.மீ. அந்த ஊர் என்று மட்டுமில்லாமல், இன்னும் பற்பல ஊர்களுக்கும் இடங்களுக்கும், தன் சொந்தத விமானத்தில் பறந்து, தெரிந்தவர் தெரியாதவர், ஏழை பணக்காரர் என்று எந்தவித பேதமும் பார்க்காமல் மருத்துவம் செய்த மருத்துவப் பண்பாளர் DR ரங்காச்சாரி. 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தார். அந்தக்காலத்தில் ரங்காச்சாரி FLYING டாக்டர் என்றும் அழைக்கப்பட்டார்.
தன்னை நம்பி வந்த நோயாளிக்காக, எமதர்மனை எத்தனையோ முறை ரங்காச்சாரி எட்டி உதைத்தார் என்பது தமிழகத்தின் மருத்துவ வரலாறு. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், DR ரங்காசாரியால் மிகப்பெரிய புரட்சிகளே ஏற்பட்டன எனலாம். மகப்பேறு காலங்களிலும், தங்களுடைய நோயை வெளியே சொல்லமுடியாத நாணத்தாலும் பற்பல பெண்கள் உயிரிழந்தனர். தாயுன் சேயும் தனித்தனி உயிர்களாக முடியும் என்பதை, மக்களென்ன, இயற்கையே நம்பாத காலம். மருத்துவப் படிப்பு முடிந்து, பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றிய சில ஆண்டுகளில், எண்ணற்ற தாய்மார்களை எமனுடைய பிடியிலிருந்து கைப்பற்றினார் ரங்காச்சாரி.
தொடர்ந்து ஹைதராபாத்திலும் பணி. கோஷாவுக்குள் பெண்கள், மதம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு, பிற மனிதர்கள் கையால் மருந்தா என்று முகம் சுளித்த மக்கள். 1909ஆம் ஆண்டு -- கறுப்புக் காலனாக ப்ளேக் நோய், அந்தப் பிரதேசத்தையே உள்ளுக்கியப்பொழுது ரங்காச்சாரியின் சிகிச்சை, நோய் கொடுமையிலிருந்து மட்டுமில்லாமல், வேண்டாத மூடப் பழக்கவழக்கங்களில் இருந்தும் மக்களை மீட்டது.
மாயவரம் மருத்துவமனை, தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவப்பள்ளியின் தலைமை ஆசான், பின்னர் நாகப்பட்டினத்தில் சிவில் சர்ஜனாக உயர்வு, அடுத்து கும்பகோணம்... இப்படியாக ரங்காச்சாரியின் பணி தொடர, ஆரம்பகாலங்களில் சைக்கிள், அடுத்து குதிரைவண்டி, பின்பு மோட்டார் சைக்கிள் என்று ஓடி ஓடி, நோயாளிகளின் இடம் தேடித் தேடி, துன்பம் தீர்த்த டாக்டர், இப்போது கார் வாங்கிவிட்டார், சொகுசாகப் பயணம் செய்ய அல்ல! சோர்ந்து வாடித் தவித்த ஏழைக்கும் பாழைக்கும் பட்டிக்காட்டானுக்கும் பட்டினதானுக்கும் பெரியவர்க்கும் சிறியவர்க்கும் வைத்தியம் செய்வதற்கு அந்தக் கறுப்பு நிற ஸ்டாண்டர்ட் கார் சீறிப் பாயும்.
DR ரங்காச்சாரி எந்தத் துறையில் SPECIALIST? இந்த வினோத வினாவிற்கு சரியான விடை தர முடியாது. காரணம், அவர் பார்க்காத வைத்தியம் இல்லை, தீர்க்காத வியாதி இல்லை. மிகவும் கடினமான பிரசவம், அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் பிளவை கட்டி, கீழே விழுந்ததால் காயம், பட்டுப் புரையோடிப் போன எலும்பு ரணம், உள்ளுறுப்புகளில் தோன்றும் பெயர் தெரியாத பெரிய பெரிய நோய்கள்-- எதுவாக இருந்தாலும் ரங்காசாரியிடம் தீர்வு உண்டு. அப்படியானால், அவர் கொடுத்த மருந்துகளும் மிக உயர்ந்தவையாக இருக்குமோ? அதுதான் இல்லை. சாதாரணமானவை! அவ்வளவுகூட இல்லை-- மருந்து என்றே சொல்ல முடியாத இயற்கையான காற்று, சூர்ய வெளிச்சம், சின்னச்சின்ன உணவுப் பழக்கங்கள், காய்கறிகளும் கீரையும் பலன்களும் சாப்பிடுவதை பரிந்துரைத்தார் அந்த வித்தியாச டாக்டர். மருந்து சீட்டில் மிக நீளமான பட்டியல் இருக்காது. ஒற்றை வரியில் ஏதேனும் எளிமையான மருந்து, பல நேரங்களில், அந்த மருந்தையும் அவரே கலக்கிக் கொடுத்துவிடுவார். எல்லாத்தையும் விட அவருடைய பீஸ்? அவராக கேட்கமாட்டார், வசதியுள்ளவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்வார். எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று கணக்குபார்க்கமாட்டார். அப்படியே வாங்கி, கால்சட்டை பையில் திணித்துக்கொள்வார். அந்தப்பணமும் கூட இல்லாதவர்களுக்கு பயன்படவே செலவழியும். மாயவரத்தில் பணியாற்றியபோது, மருத்துவமனையில் பொருள்கள் தீர்ந்து போன நிலையில், புதிதாக தோன்றிய யுக்தி, இப்படிப்பயன்பட்டது-- டாக்டரின் மேசையில் உண்டியல், விருப்பமுள்ளவர்கள் அதில் காசு போடலாம், சேர்கின்ற காசைக் கொண்டு, மருத்துவமனைக்குச் கூடுதலாகத் தேவைப்பட்ட சிகிச்சைப் பொருள்களை வாங்கினார்கள். சிகிச்சை பெற்றவர்கள் கொடுப்பதை (அது சில்லறையோ, நாணயமோ, நோட்டோ) என்ன ஏதென்று கணக்குப் பார்க்காமலேயே, கால்சராய் பையில் திணித்துக்கொள்வார். வீடிற்கு வந்தவுடன், அதற்கென்று வைத்திருக்கும் பெட்டியில் அதை கொட்டுவார். ஒவ்வொரு நாள் வெளியில் கிளம்பும்போதும், தேவையானவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காக, அந்தப் பெட்டியிலிருந்து அள்ளியெடுத்து சராய் பையில் நிரப்பிக்கொள்வார்.
ரங்காச்சாரியின் தொழில் வல்லமை, பற்பல புதுமைகளையும் செய்தது. அந்த நாட்களில், யாரும் நினைத்துப்பார்க்க முடியாதவற்றைஎல்லாம் அவர் சாத்தியமாக்கினார். பெண்கள் இரண்டாம் தரமானவர்கள் என்னும் எண்ணம் ஓங்கிய அக்காலத்தில், இளம் பெண் டாக்டரை உதவியாளராக ஏற்பதற்கு ரங்காச்சாரி தயங்கியதில்லை, அதேப்போன்று, தம் உதவியாளர்கள், முறையான பயிற்சி பெற, அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதிலும் வல்லவர்.
பர்காம்பூரில் இருக்கும்போது நடைபெற்ற சம்பவம் இது. நிறைமாததை நெருங்குகிற கர்ப்பிணி ஒருத்தி, தெருவில் நடந்துகொண்டிருந்தாள். மாடுகளை ஓட்டிக்கொண்டு போனான் சிறுவன் ஒருவன். எப்படியோ அது நடந்துவிட்டது. சிறுவன் கையிலிருந்த குச்சி, கர்ப்பிணி தாயின் வயிற்றில் குத்திக் கிழித்து வயிற்றில் உள்ள பிள்ளையின் பிஞ்சு விரல், ஓட்டை வழியே எட்டிப்பார்த்தது. தவறான பழக்கவழக்கங்களை என்றைக்குமே ஒத்துக்கொள்ளாத ரங்காச்சாரி, சற்று தூரத்தில் உதவி டாக்டர், சிகரட் குடிப்பதை பார்த்துவிட்டார். கோபத்தை அடக்கிக்கொண்டு, அந்த சிகரெட்டை பிடுங்கிக்கொண்டு ஓடிவந்தார். சிகரெட்டின் சூடு பட்டவுடன், அந்த கருக்குழந்தை விரலை இழுத்துக்கொள்ள ஆபத்தான நிலையிலிருந்து அந்த ஏழைத் தாயையும் குழந்தையையும் காப்பாற்றினார். ஊட்டிக்கு விடுமுறைக்குச் சென்றிருந்த சிறுமி ஒருத்தி, காய்ச்சலால் துவள்வது குறித்து செய்தி வந்தது. சென்னையிலிருந்தபடியே, அந்தச் சிறுமி டிப்தீரியா நோய்க்கு ஆளாகியிருந்தாள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார். குறித்த சிகிச்சைக்கான தகவலைத் தந்தி வழியே அனுப்பிவிட்டு, மாலை நேரத்தில் தம் காரிலேயே புறப்பட்டார், மறுநாள் பொழுது புலரும்போது சிறுமியின் முன்னால் நின்றார். அவர் சொன்ன மருந்தை அப்போதுதான் கொடுத்திருந்தார்கள், ஆனாலும், அவளைக் காப்பாற்றமுடியவில்லை. இன்னும் வேகமாகச் செயல்பட்டிருந்தால்-- முதல் நாள் மாலையிலிருந்து இப்பொழுது வரை காலதாமதத்தைக் குறைக்கமுடிந்தால்-- எத்தனை உயிர்களை இவ்வாறு மீட்கலாம்... பணக்கணக்கு பார்க்காத அந்த உள்ளம், இப்படியொரு பாசக்கணக்கைப் போட்டது. விளைவு? விமானம் வாங்கினார், வேகமாகப் பறந்தார், பற்பல உயிர்களைப் பிழைக்கச் செய்தார்.
1917ஆம் ஆண்டு, பர்காம்பூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தார். எழும்பூர் பெண்கள் மருத்துவமனையின் உதவி சுபரின்டென்டெண்ட் பதவியேற்றார். அப்போது சர்ஜன் ஜெனரலாக இருந்த கர்னல் கிப்போர்ட், இந்தப் பதவி உயர்வுக்குக் காரணமானவர். முதலிலிருந்தே ரங்காச்சாரியை சரியாக அடையாளம் கண்டவர் அவர். 1919ல், ஜெனரல் ஆஸ்பத்திரியில் இரண்டாம் சர்ஜனாகவும் துறைமுக மருத்துவராகவும் பணி செய்யும் உயர்வு கிட்டியது. அப்பொழுது, மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியராகவும் பொறுப்பு வந்தது. ஆனாலும், பொறாமையும் பொசாப்பையும் அவர் சந்திக்காமல் இல்லை. இந்தியர் ஒருவர் இரண்டாம் சர்ஜனாக இருக்கலாமா? என்னும் முகச் சுளிப்புகளுக்கிடையே, மூன்றாம் சர்ஜனாக இறக்கப்பட்டார். ரங்காச்சாரிக்கு கூடிய புகழையும் பெருமையும் கண்ட பிற மருத்துவர்கள் (ஆங்கிலேயர்களும் ஒரு சில இந்தியர்களும் இதில் அடங்குவர்), அவரின் முறைகளை விமர்சித்தார்கள் அவதூறு கிளப்பினார்கள். அந்தக் கர்மயோகியிடத்தில், எதுவும் எடுபடவில்லை, தான் கடமையென்று எண்ணியதை தொடர்ந்து செய்தார். எதிரியாக நினைத்து விமர்சித்தவர்களுக்கு சிக்கல்கள் வந்தபோது உதவியும் செய்தார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில், தம்புச்செட்டி தெருவில், ரகசியமாக வைத்துக் காப்பாற்றப்பட்ட போராட்ட வீரர்களுக்கு சிகிச்சை செய்தார். வேண்டிய பொருட்களை வாங்கியும் கொடுத்தார். அரசு பதவியின் நடைமுறைகள் அவருக்கு ஒப்பாதபோது, அதிலிருந்து விலகிக்கொண்டு, சுயமாகச் செய்த சேவையை இன்னும் பெரியதாகத் தொடர்ந்தார்.
டைபாய்டு நோய் கண்டு, சுயநினைவு நழுவிக்கொண்டிருந்த வேளையில், மருத்துவரீதியாக மதுவை அவருக்குக் கொடுப்பதற்காக பிறர் எடுத்த முயற்சியை, அந்த நிலையிலும் வீசிப்போட்ட மன உறுதி. அந்த மாமனிதரின் ஆதாரம். அவரே ஓடிய ரோல்ஸ்ராய்ஸ் கார். அவருடைய வசதி என்று சொல்லமுடியாது. உணவைக்கூட காரிலேயே முடித்துக்கொண்டு, சந்து பொந்துகளுக்கும் பட்டிதொட்டிக்கும் சென்று பிணிதீர்க்கும் பணியில் உதவியது. ஊருக்கும் உலகுக்கும் நோய் தீர்க்கப் போராடிய ரங்காச்சாரியை, டைபாய்ட் என்னும் எமன், எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் அழிந்தான். 1934, ஏப்ரல் 24ஆம் தேதி அப்பொழுதைய மவுண்ட் சாலையில் தேனாம்பேட்டையில் அந்த மருத்துவப் போராளி மண்ணுலகை நீத்தப்போது, சென்னை என்ன, தமிழகம் என்ன, இந்திய திருநாடே அழுதது.
1939, நவம்பர் 6ம் நாள்-- நிறம், மொழி, குலம், சாதி, பணம் என்று எத்தகைய வேறுபாடும் காணாமல் சேவைபுரிந்த அந்தப் பெருமகனாரின் சிலையை, சென்னை பொது மருத்துவமனையின் வாயிலில், ஆங்கிலேய கவர்னர் எர்ஸ்கின் திறந்துவைத்தார். இன்றளவும், அங்கேயே, வருங்காலத்திற்கான வழிகாட்டியாக ரங்காச்சாரி நிற்கிறார்.
தன்னை நம்பி வந்த நோயாளிக்காக, எமதர்மனை எத்தனையோ முறை ரங்காச்சாரி எட்டி உதைத்தார் என்பது தமிழகத்தின் மருத்துவ வரலாறு. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், DR ரங்காசாரியால் மிகப்பெரிய புரட்சிகளே ஏற்பட்டன எனலாம். மகப்பேறு காலங்களிலும், தங்களுடைய நோயை வெளியே சொல்லமுடியாத நாணத்தாலும் பற்பல பெண்கள் உயிரிழந்தனர். தாயுன் சேயும் தனித்தனி உயிர்களாக முடியும் என்பதை, மக்களென்ன, இயற்கையே நம்பாத காலம். மருத்துவப் படிப்பு முடிந்து, பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றிய சில ஆண்டுகளில், எண்ணற்ற தாய்மார்களை எமனுடைய பிடியிலிருந்து கைப்பற்றினார் ரங்காச்சாரி.
தொடர்ந்து ஹைதராபாத்திலும் பணி. கோஷாவுக்குள் பெண்கள், மதம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு, பிற மனிதர்கள் கையால் மருந்தா என்று முகம் சுளித்த மக்கள். 1909ஆம் ஆண்டு -- கறுப்புக் காலனாக ப்ளேக் நோய், அந்தப் பிரதேசத்தையே உள்ளுக்கியப்பொழுது ரங்காச்சாரியின் சிகிச்சை, நோய் கொடுமையிலிருந்து மட்டுமில்லாமல், வேண்டாத மூடப் பழக்கவழக்கங்களில் இருந்தும் மக்களை மீட்டது.
மாயவரம் மருத்துவமனை, தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவப்பள்ளியின் தலைமை ஆசான், பின்னர் நாகப்பட்டினத்தில் சிவில் சர்ஜனாக உயர்வு, அடுத்து கும்பகோணம்... இப்படியாக ரங்காச்சாரியின் பணி தொடர, ஆரம்பகாலங்களில் சைக்கிள், அடுத்து குதிரைவண்டி, பின்பு மோட்டார் சைக்கிள் என்று ஓடி ஓடி, நோயாளிகளின் இடம் தேடித் தேடி, துன்பம் தீர்த்த டாக்டர், இப்போது கார் வாங்கிவிட்டார், சொகுசாகப் பயணம் செய்ய அல்ல! சோர்ந்து வாடித் தவித்த ஏழைக்கும் பாழைக்கும் பட்டிக்காட்டானுக்கும் பட்டினதானுக்கும் பெரியவர்க்கும் சிறியவர்க்கும் வைத்தியம் செய்வதற்கு அந்தக் கறுப்பு நிற ஸ்டாண்டர்ட் கார் சீறிப் பாயும்.
DR ரங்காச்சாரி எந்தத் துறையில் SPECIALIST? இந்த வினோத வினாவிற்கு சரியான விடை தர முடியாது. காரணம், அவர் பார்க்காத வைத்தியம் இல்லை, தீர்க்காத வியாதி இல்லை. மிகவும் கடினமான பிரசவம், அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் பிளவை கட்டி, கீழே விழுந்ததால் காயம், பட்டுப் புரையோடிப் போன எலும்பு ரணம், உள்ளுறுப்புகளில் தோன்றும் பெயர் தெரியாத பெரிய பெரிய நோய்கள்-- எதுவாக இருந்தாலும் ரங்காசாரியிடம் தீர்வு உண்டு. அப்படியானால், அவர் கொடுத்த மருந்துகளும் மிக உயர்ந்தவையாக இருக்குமோ? அதுதான் இல்லை. சாதாரணமானவை! அவ்வளவுகூட இல்லை-- மருந்து என்றே சொல்ல முடியாத இயற்கையான காற்று, சூர்ய வெளிச்சம், சின்னச்சின்ன உணவுப் பழக்கங்கள், காய்கறிகளும் கீரையும் பலன்களும் சாப்பிடுவதை பரிந்துரைத்தார் அந்த வித்தியாச டாக்டர். மருந்து சீட்டில் மிக நீளமான பட்டியல் இருக்காது. ஒற்றை வரியில் ஏதேனும் எளிமையான மருந்து, பல நேரங்களில், அந்த மருந்தையும் அவரே கலக்கிக் கொடுத்துவிடுவார். எல்லாத்தையும் விட அவருடைய பீஸ்? அவராக கேட்கமாட்டார், வசதியுள்ளவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்வார். எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று கணக்குபார்க்கமாட்டார். அப்படியே வாங்கி, கால்சட்டை பையில் திணித்துக்கொள்வார். அந்தப்பணமும் கூட இல்லாதவர்களுக்கு பயன்படவே செலவழியும். மாயவரத்தில் பணியாற்றியபோது, மருத்துவமனையில் பொருள்கள் தீர்ந்து போன நிலையில், புதிதாக தோன்றிய யுக்தி, இப்படிப்பயன்பட்டது-- டாக்டரின் மேசையில் உண்டியல், விருப்பமுள்ளவர்கள் அதில் காசு போடலாம், சேர்கின்ற காசைக் கொண்டு, மருத்துவமனைக்குச் கூடுதலாகத் தேவைப்பட்ட சிகிச்சைப் பொருள்களை வாங்கினார்கள். சிகிச்சை பெற்றவர்கள் கொடுப்பதை (அது சில்லறையோ, நாணயமோ, நோட்டோ) என்ன ஏதென்று கணக்குப் பார்க்காமலேயே, கால்சராய் பையில் திணித்துக்கொள்வார். வீடிற்கு வந்தவுடன், அதற்கென்று வைத்திருக்கும் பெட்டியில் அதை கொட்டுவார். ஒவ்வொரு நாள் வெளியில் கிளம்பும்போதும், தேவையானவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காக, அந்தப் பெட்டியிலிருந்து அள்ளியெடுத்து சராய் பையில் நிரப்பிக்கொள்வார்.
ரங்காச்சாரியின் தொழில் வல்லமை, பற்பல புதுமைகளையும் செய்தது. அந்த நாட்களில், யாரும் நினைத்துப்பார்க்க முடியாதவற்றைஎல்லாம் அவர் சாத்தியமாக்கினார். பெண்கள் இரண்டாம் தரமானவர்கள் என்னும் எண்ணம் ஓங்கிய அக்காலத்தில், இளம் பெண் டாக்டரை உதவியாளராக ஏற்பதற்கு ரங்காச்சாரி தயங்கியதில்லை, அதேப்போன்று, தம் உதவியாளர்கள், முறையான பயிற்சி பெற, அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதிலும் வல்லவர்.
பர்காம்பூரில் இருக்கும்போது நடைபெற்ற சம்பவம் இது. நிறைமாததை நெருங்குகிற கர்ப்பிணி ஒருத்தி, தெருவில் நடந்துகொண்டிருந்தாள். மாடுகளை ஓட்டிக்கொண்டு போனான் சிறுவன் ஒருவன். எப்படியோ அது நடந்துவிட்டது. சிறுவன் கையிலிருந்த குச்சி, கர்ப்பிணி தாயின் வயிற்றில் குத்திக் கிழித்து வயிற்றில் உள்ள பிள்ளையின் பிஞ்சு விரல், ஓட்டை வழியே எட்டிப்பார்த்தது. தவறான பழக்கவழக்கங்களை என்றைக்குமே ஒத்துக்கொள்ளாத ரங்காச்சாரி, சற்று தூரத்தில் உதவி டாக்டர், சிகரட் குடிப்பதை பார்த்துவிட்டார். கோபத்தை அடக்கிக்கொண்டு, அந்த சிகரெட்டை பிடுங்கிக்கொண்டு ஓடிவந்தார். சிகரெட்டின் சூடு பட்டவுடன், அந்த கருக்குழந்தை விரலை இழுத்துக்கொள்ள ஆபத்தான நிலையிலிருந்து அந்த ஏழைத் தாயையும் குழந்தையையும் காப்பாற்றினார். ஊட்டிக்கு விடுமுறைக்குச் சென்றிருந்த சிறுமி ஒருத்தி, காய்ச்சலால் துவள்வது குறித்து செய்தி வந்தது. சென்னையிலிருந்தபடியே, அந்தச் சிறுமி டிப்தீரியா நோய்க்கு ஆளாகியிருந்தாள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார். குறித்த சிகிச்சைக்கான தகவலைத் தந்தி வழியே அனுப்பிவிட்டு, மாலை நேரத்தில் தம் காரிலேயே புறப்பட்டார், மறுநாள் பொழுது புலரும்போது சிறுமியின் முன்னால் நின்றார். அவர் சொன்ன மருந்தை அப்போதுதான் கொடுத்திருந்தார்கள், ஆனாலும், அவளைக் காப்பாற்றமுடியவில்லை. இன்னும் வேகமாகச் செயல்பட்டிருந்தால்-- முதல் நாள் மாலையிலிருந்து இப்பொழுது வரை காலதாமதத்தைக் குறைக்கமுடிந்தால்-- எத்தனை உயிர்களை இவ்வாறு மீட்கலாம்... பணக்கணக்கு பார்க்காத அந்த உள்ளம், இப்படியொரு பாசக்கணக்கைப் போட்டது. விளைவு? விமானம் வாங்கினார், வேகமாகப் பறந்தார், பற்பல உயிர்களைப் பிழைக்கச் செய்தார்.
1917ஆம் ஆண்டு, பர்காம்பூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தார். எழும்பூர் பெண்கள் மருத்துவமனையின் உதவி சுபரின்டென்டெண்ட் பதவியேற்றார். அப்போது சர்ஜன் ஜெனரலாக இருந்த கர்னல் கிப்போர்ட், இந்தப் பதவி உயர்வுக்குக் காரணமானவர். முதலிலிருந்தே ரங்காச்சாரியை சரியாக அடையாளம் கண்டவர் அவர். 1919ல், ஜெனரல் ஆஸ்பத்திரியில் இரண்டாம் சர்ஜனாகவும் துறைமுக மருத்துவராகவும் பணி செய்யும் உயர்வு கிட்டியது. அப்பொழுது, மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியராகவும் பொறுப்பு வந்தது. ஆனாலும், பொறாமையும் பொசாப்பையும் அவர் சந்திக்காமல் இல்லை. இந்தியர் ஒருவர் இரண்டாம் சர்ஜனாக இருக்கலாமா? என்னும் முகச் சுளிப்புகளுக்கிடையே, மூன்றாம் சர்ஜனாக இறக்கப்பட்டார். ரங்காச்சாரிக்கு கூடிய புகழையும் பெருமையும் கண்ட பிற மருத்துவர்கள் (ஆங்கிலேயர்களும் ஒரு சில இந்தியர்களும் இதில் அடங்குவர்), அவரின் முறைகளை விமர்சித்தார்கள் அவதூறு கிளப்பினார்கள். அந்தக் கர்மயோகியிடத்தில், எதுவும் எடுபடவில்லை, தான் கடமையென்று எண்ணியதை தொடர்ந்து செய்தார். எதிரியாக நினைத்து விமர்சித்தவர்களுக்கு சிக்கல்கள் வந்தபோது உதவியும் செய்தார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில், தம்புச்செட்டி தெருவில், ரகசியமாக வைத்துக் காப்பாற்றப்பட்ட போராட்ட வீரர்களுக்கு சிகிச்சை செய்தார். வேண்டிய பொருட்களை வாங்கியும் கொடுத்தார். அரசு பதவியின் நடைமுறைகள் அவருக்கு ஒப்பாதபோது, அதிலிருந்து விலகிக்கொண்டு, சுயமாகச் செய்த சேவையை இன்னும் பெரியதாகத் தொடர்ந்தார்.
டைபாய்டு நோய் கண்டு, சுயநினைவு நழுவிக்கொண்டிருந்த வேளையில், மருத்துவரீதியாக மதுவை அவருக்குக் கொடுப்பதற்காக பிறர் எடுத்த முயற்சியை, அந்த நிலையிலும் வீசிப்போட்ட மன உறுதி. அந்த மாமனிதரின் ஆதாரம். அவரே ஓடிய ரோல்ஸ்ராய்ஸ் கார். அவருடைய வசதி என்று சொல்லமுடியாது. உணவைக்கூட காரிலேயே முடித்துக்கொண்டு, சந்து பொந்துகளுக்கும் பட்டிதொட்டிக்கும் சென்று பிணிதீர்க்கும் பணியில் உதவியது. ஊருக்கும் உலகுக்கும் நோய் தீர்க்கப் போராடிய ரங்காச்சாரியை, டைபாய்ட் என்னும் எமன், எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் அழிந்தான். 1934, ஏப்ரல் 24ஆம் தேதி அப்பொழுதைய மவுண்ட் சாலையில் தேனாம்பேட்டையில் அந்த மருத்துவப் போராளி மண்ணுலகை நீத்தப்போது, சென்னை என்ன, தமிழகம் என்ன, இந்திய திருநாடே அழுதது.
1939, நவம்பர் 6ம் நாள்-- நிறம், மொழி, குலம், சாதி, பணம் என்று எத்தகைய வேறுபாடும் காணாமல் சேவைபுரிந்த அந்தப் பெருமகனாரின் சிலையை, சென்னை பொது மருத்துவமனையின் வாயிலில், ஆங்கிலேய கவர்னர் எர்ஸ்கின் திறந்துவைத்தார். இன்றளவும், அங்கேயே, வருங்காலத்திற்கான வழிகாட்டியாக ரங்காச்சாரி நிற்கிறார்.
Saturday, August 7, 2010
Saturday, July 31, 2010
பாரத்ரத்னா சச்சின்
சச்சினுக்கு பாரத்ரத்னா விருது கொடுக்கவேண்டும், அதற்கு அவர் மிகத்தகுதியானவர் தான் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்லியுள்ளார் ஆஷா போன்ஸ்லே.
Thursday, July 29, 2010
நன்றி நன்றி நன்றி!!!
பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் கொண்டுவருவது பற்றி யோசித்துக்கொண்டுள்ளேன், விரைவில் நல்லசெய்தி வரும் என்று தெரிவித்துள்ள முதல்வருக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் நல்ல முடிவு எடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Wednesday, July 28, 2010
சச்சின் 48!!!
சச்சின் தனது 48வது டெஸ்ட் சதத்தை ஸ்ரீலங்காவிற்கு எதிராக பூர்த்திசெய்தார். அணியையும் தோல்வியிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
Saturday, July 24, 2010
Monday, July 12, 2010
CHAMPION SPAIN
நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இரண்டு பாதியிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை, அளிக்கப்பட்ட முதல் எக்ஸ்ட்ரா நேரத்தில் கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது எக்ஸ்ட்ரா நேரத்தில் ANDRU INIESTA அற்புதமான கோலால் ஸ்பெயின் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். ஜெர்மனி அணியை சேர்ந்த தாமஸ் முல்லர் தங்கக் காலணி பரிசை பெற்றார்.
Sunday, July 11, 2010
Saturday, July 10, 2010
ஸ்பெயின் VS நெதர்லாந்து இரவு 12 மணிக்கு ESPN தொலைக்காட்சியில்
உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 12 மணிக்கு ESPN தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை காணலாம். முன்னதாக நேற்றிரவு நடந்த 3ம் இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி உருகுவே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
Friday, July 9, 2010
SPAIN VS NETHERLANDS
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அரையிறுதியில் நெதர்லாந்து அணி உருகுவே அணியையும், ஸ்பெயின் ஜெர்மனியையும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. வரும் ஞாயற்றுக்கிழமையன்று இரவு 12 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
Saturday, July 3, 2010
உலகக்கோப்பை கால்பந்து-2010
கடந்த சில வாரங்களாகவே உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. தற்பொழுது அது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட அணிகளான பிரேசில், அர்ஜென்டினா போன்ற அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன. முதல் காலிறுதியில் (02/07/2010) பிரேசிலும் நெதர்லாந்து அணிகள் மோதின விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வென்று அதிர்ச்சி அளித்தது நெதர்லாந்து. பிரேசிலின் முரட்டு ஆட்டம் நெதர்லாந்து அணியிடம் எடுபடவில்லை. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணி கானா அணிகள் மோதின இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன, எனவே வெற்றியை நிர்ணயிக்க டைபிரேகர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் உருகுவே 4-2 என்ற கோல் கணக்கில் வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. மூன்றாவது காலிறுதியில் அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி ஆகிய பலம் பொறுந்திய அணிகள் மோதின மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. கடைசி காலிறுதியில் பராகுவே மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின கோப்பையை வெல்லும் என்று பெரும்பான்மையினரால் கணிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் அணி எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஸ்பெயின் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டேவிட் வில்லா வெற்றிக்கான கோலை அற்புதமாக அடித்தார்.
06/07/2010 அன்று நடைபெறும் முதல் அரைஇறுதியில் நெதர்லாந்து அணி உருகுவே அணியையும், 07/07/2010 அன்று இரண்டாவது அரையிறுதியில் ஜெர்மனி அணி பலம்பொருந்திய ஸ்பெயின் அணியை சந்திக்கிறது.
06/07/2010 அன்று நடைபெறும் முதல் அரைஇறுதியில் நெதர்லாந்து அணி உருகுவே அணியையும், 07/07/2010 அன்று இரண்டாவது அரையிறுதியில் ஜெர்மனி அணி பலம்பொருந்திய ஸ்பெயின் அணியை சந்திக்கிறது.
Saturday, June 19, 2010
ராவணன்
இராவணன் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த மிகவும் மட்டமான படம் என்று தாராளமாக சொல்லலாம். கிழவி ஐஸ்வர்யா ராய், கிழவன் விக்ரம், மற்றும் நடிப்பே தெரியாத பிரித்திவிராஜ் போன்றோர் நடித்துள்ள படம். சுஹாசினியின் வசனம் மிக மிக மட்டம். இந்தப் படத்தை பற்றி விமர்சனம் எழுதி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, என் முதல் வரியை படித்துக்கொள்ளுங்கள். A.R.ரஹ்மான் இசை மிகவும் அற்புதமாக உள்ளது.பாட்டி ஐஸ்வர்யாராயின் சொந்த குரல் வசனங்கள் நன்றாக உள்ளது.
Friday, June 18, 2010
Wednesday, June 2, 2010
Saturday, May 29, 2010
அசிங்கம்
நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள படம் சிங்கம். நேர்மையான காவல்துறை அதிகாரியாக சூர்யா (துரைசிங்கம்), அநியாயம் மட்டுமே செய்யும் வில்லனாக பிரகாஷ்ராஜ். சூர்யாவின் காதலியாக அனுஷ்கா, தேவையே இல்லாத சிரிப்பு நடிகராக விவேக் ஆகியோர் அடங்கிய கூட்டணி சேர்ந்து இந்த படத்தை நாசம் செய்துள்ளனர். படம் முழுக்க தேவை இல்லாத அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் சிரிப்பு காட்சிகள் என படம் நகர்கிறது. அனுஷ்கா பார்ப்பதற்கு நன்றாக உள்ளார். நல்ல படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த சூர்யாவிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை கடந்த இரண்டு படங்களாக போறாத நேரம் என்று எண்ண தோன்றுகிறது. SUNPICTURES தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்துக்கொண்டுள்ள போதிலும் தொடர்ந்து படங்களை எப்படி வாங்கி வெளியிடுகின்றனர் என்பது MILLION DOLLER கேள்வியாக உள்ளது. சிங்கம் சூர்யாவிற்கு மட்டுமல்ல விவேக் SUNPICTURES போன்றோருக்கு மிகப்பெரிய அசிங்கம்.
Wednesday, May 12, 2010
விஸ்வநாதன் ஆனந்த
நேற்று பல்கேரியாவில் நடந்த உலக செஸ் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் நமது நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த பல்கேரியாவை சேர்ந்த தபலோவை வென்று மீண்டும் உலக சாம்பியன் பட்டதை வென்றார். இதே நமது கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் வென்றால் (ஆனால் ஜெயிக்காது) நாடே அதிரும் ஆனால் ஏனோ விஸ்வநாதன் ஆனந்த ஜெயித்ததை பத்திரிகைகள் ஒரு வரி கூட எழுத மறுக்கின்றன . அரசியல் தலைவர்கள் யாரும் கூட வாயை திறக்கவில்லை போகட்டும், நாம் பாராட்டுவோம் இந்த உண்மை இந்தியனை.
Saturday, May 8, 2010
நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையா இல்லையா?
நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா? தெரிந்து கொள்ள கீழ்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்:
1) உங்களது குடிப்பழக்கத்தால் உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிஇழந்து விட்டதா?
2) குடிப்பதால் உங்கள் பணி நேரம் குறைந்துவிட்டதா?
3) உங்களது குடிப்பழக்கம் உங்கள் பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தயுள்ளதா?
4) குடிப்பழக்கத்தால் பணகஷ்டங்கள் ஏற்பட்டுள்ளனவா?
5) மோசமான சுற்றுச் சூழலில் உங்களை விட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்குமளவிற்கு மாறி மாறிவிட்டீர்களா?
6) நீங்கள் குடிப்பதால் குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்கமுடியவில்லையா?
7) கவலைகள், பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?
8) தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்கவேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?
9) குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?
10) குடிப்பழக்கத்தால் உங்கள் திறமைகளும், இலட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?
மேற்கண்ட 10 கேள்விகளில் ஒரேவொரு கேள்விக்கு மட்டும் ஆம் என்று நீங்கள் பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள். இரண்டும் கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலளித்தால் நீங்கள் குடிப்பழக்க அடிமை.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ஆம் என்று பதிலளித்தால் எவ்வித சந்தேகமும் இன்றி நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான். இந்தப் பத்து கேள்விகளில் எந்த கேள்வியும் உங்களுக்கு பொருந்தவில்லை எனில் நீங்கள் குடிப்பழக்க அடிமையில்லை, ஆனால் அடிமையாகிவிடாமல் உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். நன்றி வாரமலர்.
1) உங்களது குடிப்பழக்கத்தால் உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிஇழந்து விட்டதா?
2) குடிப்பதால் உங்கள் பணி நேரம் குறைந்துவிட்டதா?
3) உங்களது குடிப்பழக்கம் உங்கள் பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தயுள்ளதா?
4) குடிப்பழக்கத்தால் பணகஷ்டங்கள் ஏற்பட்டுள்ளனவா?
5) மோசமான சுற்றுச் சூழலில் உங்களை விட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்குமளவிற்கு மாறி மாறிவிட்டீர்களா?
6) நீங்கள் குடிப்பதால் குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்கமுடியவில்லையா?
7) கவலைகள், பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?
8) தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்கவேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?
9) குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?
10) குடிப்பழக்கத்தால் உங்கள் திறமைகளும், இலட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?
மேற்கண்ட 10 கேள்விகளில் ஒரேவொரு கேள்விக்கு மட்டும் ஆம் என்று நீங்கள் பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள். இரண்டும் கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலளித்தால் நீங்கள் குடிப்பழக்க அடிமை.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ஆம் என்று பதிலளித்தால் எவ்வித சந்தேகமும் இன்றி நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான். இந்தப் பத்து கேள்விகளில் எந்த கேள்வியும் உங்களுக்கு பொருந்தவில்லை எனில் நீங்கள் குடிப்பழக்க அடிமையில்லை, ஆனால் அடிமையாகிவிடாமல் உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். நன்றி வாரமலர்.
Friday, April 30, 2010
சுறா-விஜய்க்கு ஒரு கடிதம்
விஜய் நடித்து வெளிவந்துள்ள சுறா படத்தை பார்த்தேன், பெயரில் மட்டும் விஜய் என்று வைத்துக்கொண்டு மகா மட்டம்மான தோல்விப் படங்களையே கொடுத்துக்கொண்டுள்ளார் விஜய். தான் செல்லும் விழாக்களுக்கு அமைதியாகவும் தான் நடிக்கும் படங்களில் மிகவும் ஆக்ரோஷமாகவும் உள்ளது போல் காட்டிக்கொள்கிறார். இது அவரது 50வது படம், எனக்கு தெரிந்து அவர் நடித்து வெளிவந்துள்ள மட்டமான படம் சுறா தான் (51வது படம் வந்தால் சுறா நல்ல படமாகிவிடும் என்பது வேறு விஷயம்). விஜய்க்கு உண்மையிலேயே சூடு சொரணை இருந்தால் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், அமீர்கான், ஷாருக்கான் போன்றோரின் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கசொல்லுங்கள். இவர் ஒரு படத்திற்கு 5 கோடி 10 கோடி என்று சம்பளம் வாங்கிக்கொண்டு சத்திரம், பண்ணைவீடு போன்றவைகளை வாங்கிக் குவித்துக்கொண்டுள்ளார் மேலும் நான் அரசியலுக்கு வருவேன் அடுத்த முதல்வர் நான் தான் போன்ற நகைச்சுவைகளையும் அடிக்கடி வெளியிடுகிறார். பாவம் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் முதல் நாளே 100 முதல் 250 வரை ஒரு டிக்கெட் என்று கொடுத்து பார்க்கும் அவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. இந்த முறை நான் என் நண்பனிடம் (அவன் தீவிர விஜய் ரசிகன்) படம் எப்படி உள்ளது என்று கேட்டேன் ஒவ்வொரு முறையும் அற்புதம் என்று பொய் சொல்லும் அவன் இந்தமுறை மிக மிக மட்டம் தயவு செய்து படத்தை பார்க்காதே என்று எனக்கு அறிவுரை செய்தான். விஜய் உங்களுக்கு ஒரு அறிவுரை வழங்க விரும்புகிறேன், உங்களுக்கு கதையை தேர்வுசெய்து கொடுப்பவர் யார்? அவரை முதலில் நீக்குங்கள். உண்மையிலேயே நீங்கள் நல்ல நடிகனாக இருந்தால் அடுத்து ஒரு நல்ல படத்தை கொடுங்கள். உங்களுக்கு தேவையான பணத்திற்கு மேல் சேர்த்துவிட்டீர்கள் தயவுசெய்து படத்தில் நடிப்பதை சிறிது நாட்களுக்கு ஒத்திவையுங்கள். தயவுசெய்து உங்கள் ரசிகர்களுக்கு மொட்டை போடாதீர்கள்.
Saturday, April 24, 2010
நான் மும்பை சென்ற கதை
நான் இதற்கு முன்பு பல முறை மும்பை சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் மும்பை எனக்கு புது அனுபவத்தையே கொடுத்துள்ளது.
மும்பையும் E.K.சாமியும்
என் தாத்தா பாட்டி மும்பையில் வசிக்கிறார்கள். அவர்களை காணவே அங்கு நான் வருடத்திற்கு ஒருமுறை செல்வது வழக்கம். அவர்களும் அடிக்கடி போனில் தொடர்புகொண்டு மும்பைக்கு வா என்று அழைப்பு விடுவார்கள். நான் செய்யும் லொள்ளுகளையும் சேட்டைகளையும் பொறுத்துக்கொண்டு என்னை கனிவுடன் கவனிப்பார்கள் மற்றும் அவர்களது மகன் ராஜ் நான் எங்கு செல்லவேண்டுமென்றாலும் தனது வேலைகளை விடுத்து தனது காரிலேயே அழைத்துச்சென்று பொறுமையுடன் இருந்து கவனிப்பார். இந்த முறையும் அவ்வாறே கவனித்து எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது காரணம் நான் இந்த முறை மும்பை சென்றது என் தாத்தா E.K.சாமி மரணத்திற்காக! நான் அவரை எபோழுதும் OLD என்று தான் அழைப்பேன் என் தாத்தா E.K.சாமிக்கு 80 வயது முடிந்த மறுநாள் உயிர் இழந்ததாக எனக்கு தகவல் வந்தது, பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவர் பாபா அணுசக்தி நிறுவனத்தில் வேலை செய்து ஒய்வு பெற்றவர். கடுமையான உழைப்பாளி. அவரது நினைவு எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும், கடந்த வருடம் நான் அவரை கடைசியாக பார்க்கும்பொழுது நான் கேட்டேன் OLD HOW ARE YOU? என்று அதற்கு அவர் ONEDAY OLD GOING TO BOLD என்றார் இதை என் பாட்டியிடம் சொன்னேன் அவர் கண்ணீர் வடித்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது பின் 45 வருட திருமண வாழ்க்கை ஆயிற்றே!
என் மும்பை ரயில் பயணம்
நான் எபொழுது மும்பை சென்றாலும் ரயிலில் 3 TIER AC COACHல் முன்பதிவு செய்வது வழக்கம், ஆனால் இந்த முறை என் தாத்தா திடீரென்று இறந்ததால் என்னால் AC COACHல் பதிவு செய்ய முடியவில்லை 2ND CLASS SLEEPER தான் கிடைத்தது அதுவும் WAITING. கடைசியில் CONFIRM ஆகியது என் அதிர்ஷ்டம். இந்த ஏப்ரல் மாத வெயிலை தாங்கமுடியவில்லை இதை நினைக்கும் போது எனக்கு ஒரு VODAFONE விளம்பரத்தில் வரும் ZOO பொம்மைதான் ஞாபகம் வருகிறது. ஒரு ஜூ பொம்மையை மூன்று ஜூ பொம்மைகள் ஒரு அண்டாவில் வைத்து கீழே கொதியுட்டிவிடும், பிறகு அதற்கு ஒரு SMS வரும் அதை பார்த்ததும் அண்டாவில் உள்ள ஜூ பொம்மை கல கல என்று சிரிக்கும். அதே போல் தான் எங்கள் ரயிலும் கொதித்தது. இந்த முறை ரயிலில் பிச்சைகாரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் நான் பிச்சை போடவேண்டுமென்றால் சுமார் 5000 ரூபாயை நான் சிலரை மாற்றி வைத்திருந்தாலும் போதாது, அவளவு வசதி இல்லாததால் நான் அவர்களை தவிர்த்துவிட்டேன். என் ஒவ்வொரு பயணத்திலும் நான் நிறைய மனிதர்களை சந்தித்துள்ளேன் இந்த முறை ஒரு மாற்றுதிறனாளி (PYSICALLY CHALLENGED PERSON) ஒருவரை சந்தித்தேன். அவரும் அவரது மனைவியும் மும்பை TO சென்னை பயணசீட்டு பதிவு செய்திருந்தனர், ஆனால் இருவருக்கும் தனிதனி COMPARTMENTல் இடம் ஒதுக்கியிருந்தனர். அவர்களுக்கு தங்கள் இடங்களை பரிமாற்றம் செய்ய எவருமே முன்வராதது அவரது மனைவிக்கு மிகவும் வருத்தம் அளித்தது அவர் அழுதேவிட்டார். பிறகு நான் என் இடத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அடுத்த COMPARTMENTல் தனியாக பயணம் செய்தேன். அவர்கள் எனக்கு மிகுந்த நன்றி தெரிவித்தனர் அவர்களுடன் மிக நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தது எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்தது.
ரயிலில் திருநங்கைகள்
நான் எபோழுதும் திருநங்கைகளுக்கு ஆதரவான மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கருத்துடையவன். ஆனால் இந்த முறை மும்பை ரயிலில் செல்லும்போதும் சரி திரும்பும்போதும் சரி இவர்களின் அட்டகாசம் மிகவும் அதிகமாக இருந்தது. நானும் ஒரு திருநங்கையிடம் நன்றாக மாட்டிக்கொண்டேன். என்னை பணம் கேட்டு நான் இல்லை என்றவுடன் ஒரு திருநங்கை என் அருகில் வந்து அதன் மார்பகத்தை காண்பித்து இபொழுது 10 ருபாய் கொடுப்பாயா என்றும் மிகவும் மட்டமான முறையில் திட்டியும்விட்டது, நான் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தேன் பிறகு அந்த திருநங்கை கன்னத்தில் லேசாக அடித்துவிட்டு சென்றது. என் COMPARTMENTல் இருந்தவர்கள் அனைவரும் அந்த திருநங்கையை திட்டிதீர்த்தார்கள். திருநங்கையாக பிறந்தது அவர்களின் தவறா?, அவர்களை அம்போ என்று விட்டுவிட்ட இவர்களின் குடும்பத்தின் தவறா?, அல்லது அவர்களுக்காக எந்த துரும்பையும் கிள்ளி போடாத இந்த அரசாங்கத்தின் தவறா?
மும்பையும் புதுமையும்
ஒவ்வொரு முறை மும்பை செல்லும்போதும் நான் உன்னிப்பாக அதன் வளர்ச்சியை ஆராய்வேன் இந்த முறையும் அதை கவனித்தேன் உண்மையில் மும்பை உள்கட்டமைப்பு (INFRASTRUCTURE) துறையில் மிகவும் வேகமாக முன்னேரிகொண்டுவருகிறது. புதுமைகளை புகுத்துவதில் மிகவும் முனைப்புடன் இருப்பது நன்றாக தெரிகிறது. அதற்கு உதாரணமாக அங்கு வேலை நடைபெற்றுக்கொண்டுள்ள MONO மற்றும் METRO ரயில் திட்டங்கள், அதிவேக LOCAL ரயில்கள், அகன்ற 8 LANE கொண்ட அகன்ற சாலைகள் என்று இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். மும்பையுடன் ஒப்பிடும் போது சென்னை மெதுவான வளர்ச்சியே கொண்டுள்ளது என்பது என் கருத்து.
மும்பையில் என் PURCHASE
எப்பொழுது மும்பை சென்றாலும் நான் என் குடும்பத்திற்காக PURCHASE செய்வது வழக்கம். இந்த முறையும் நான் PURCHASE செய்த அனுபவம் மிகவும் வேடிக்கையாக அமைந்தது. முதலில் நான் ஷூ வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதற்கு மும்பையில் நல்ல வாய்ப்புகிடைத்தது நிறைய ஷூகளை PLATFORMல் வைத்து விற்றுக்கொண்டிருந்தனர் நான் அங்கு சென்று ஒரு ஜோடி ஷூவை அடுத்து விலையை கேட்டேன் கடைகாரர் 850 என்று பதிலளித்தார் நான் மிகவும் கெட்டிகாரத்தனமாக கேட்பதாக நினைத்து 250க்கு கேட்டேன் உடனே கடைக்காரர் அதை PACK செய்து என்னிடம் கொடுத்துவிட்டார் நானும் அதை அசடுவழிய வாங்கிக்கொண்டு நடையை கட்டினேன், இதே போல சேலை CAR பொம்மைகளை நான் விரும்பிய விலைக்கு PURCHASE செய்து நடைகட்டினேன். எனக்கு ஒரு சந்தேகம் இவற்றின் உண்மையான விலைதான் என்ன? ஏமாந்தது கடைகாரர்களா அல்லது நானா?
மும்பையும் E.K.சாமியும்
என் தாத்தா பாட்டி மும்பையில் வசிக்கிறார்கள். அவர்களை காணவே அங்கு நான் வருடத்திற்கு ஒருமுறை செல்வது வழக்கம். அவர்களும் அடிக்கடி போனில் தொடர்புகொண்டு மும்பைக்கு வா என்று அழைப்பு விடுவார்கள். நான் செய்யும் லொள்ளுகளையும் சேட்டைகளையும் பொறுத்துக்கொண்டு என்னை கனிவுடன் கவனிப்பார்கள் மற்றும் அவர்களது மகன் ராஜ் நான் எங்கு செல்லவேண்டுமென்றாலும் தனது வேலைகளை விடுத்து தனது காரிலேயே அழைத்துச்சென்று பொறுமையுடன் இருந்து கவனிப்பார். இந்த முறையும் அவ்வாறே கவனித்து எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது காரணம் நான் இந்த முறை மும்பை சென்றது என் தாத்தா E.K.சாமி மரணத்திற்காக! நான் அவரை எபோழுதும் OLD என்று தான் அழைப்பேன் என் தாத்தா E.K.சாமிக்கு 80 வயது முடிந்த மறுநாள் உயிர் இழந்ததாக எனக்கு தகவல் வந்தது, பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவர் பாபா அணுசக்தி நிறுவனத்தில் வேலை செய்து ஒய்வு பெற்றவர். கடுமையான உழைப்பாளி. அவரது நினைவு எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும், கடந்த வருடம் நான் அவரை கடைசியாக பார்க்கும்பொழுது நான் கேட்டேன் OLD HOW ARE YOU? என்று அதற்கு அவர் ONEDAY OLD GOING TO BOLD என்றார் இதை என் பாட்டியிடம் சொன்னேன் அவர் கண்ணீர் வடித்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது பின் 45 வருட திருமண வாழ்க்கை ஆயிற்றே!
என் மும்பை ரயில் பயணம்
நான் எபொழுது மும்பை சென்றாலும் ரயிலில் 3 TIER AC COACHல் முன்பதிவு செய்வது வழக்கம், ஆனால் இந்த முறை என் தாத்தா திடீரென்று இறந்ததால் என்னால் AC COACHல் பதிவு செய்ய முடியவில்லை 2ND CLASS SLEEPER தான் கிடைத்தது அதுவும் WAITING. கடைசியில் CONFIRM ஆகியது என் அதிர்ஷ்டம். இந்த ஏப்ரல் மாத வெயிலை தாங்கமுடியவில்லை இதை நினைக்கும் போது எனக்கு ஒரு VODAFONE விளம்பரத்தில் வரும் ZOO பொம்மைதான் ஞாபகம் வருகிறது. ஒரு ஜூ பொம்மையை மூன்று ஜூ பொம்மைகள் ஒரு அண்டாவில் வைத்து கீழே கொதியுட்டிவிடும், பிறகு அதற்கு ஒரு SMS வரும் அதை பார்த்ததும் அண்டாவில் உள்ள ஜூ பொம்மை கல கல என்று சிரிக்கும். அதே போல் தான் எங்கள் ரயிலும் கொதித்தது. இந்த முறை ரயிலில் பிச்சைகாரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் நான் பிச்சை போடவேண்டுமென்றால் சுமார் 5000 ரூபாயை நான் சிலரை மாற்றி வைத்திருந்தாலும் போதாது, அவளவு வசதி இல்லாததால் நான் அவர்களை தவிர்த்துவிட்டேன். என் ஒவ்வொரு பயணத்திலும் நான் நிறைய மனிதர்களை சந்தித்துள்ளேன் இந்த முறை ஒரு மாற்றுதிறனாளி (PYSICALLY CHALLENGED PERSON) ஒருவரை சந்தித்தேன். அவரும் அவரது மனைவியும் மும்பை TO சென்னை பயணசீட்டு பதிவு செய்திருந்தனர், ஆனால் இருவருக்கும் தனிதனி COMPARTMENTல் இடம் ஒதுக்கியிருந்தனர். அவர்களுக்கு தங்கள் இடங்களை பரிமாற்றம் செய்ய எவருமே முன்வராதது அவரது மனைவிக்கு மிகவும் வருத்தம் அளித்தது அவர் அழுதேவிட்டார். பிறகு நான் என் இடத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அடுத்த COMPARTMENTல் தனியாக பயணம் செய்தேன். அவர்கள் எனக்கு மிகுந்த நன்றி தெரிவித்தனர் அவர்களுடன் மிக நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தது எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்தது.
ரயிலில் திருநங்கைகள்
நான் எபோழுதும் திருநங்கைகளுக்கு ஆதரவான மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கருத்துடையவன். ஆனால் இந்த முறை மும்பை ரயிலில் செல்லும்போதும் சரி திரும்பும்போதும் சரி இவர்களின் அட்டகாசம் மிகவும் அதிகமாக இருந்தது. நானும் ஒரு திருநங்கையிடம் நன்றாக மாட்டிக்கொண்டேன். என்னை பணம் கேட்டு நான் இல்லை என்றவுடன் ஒரு திருநங்கை என் அருகில் வந்து அதன் மார்பகத்தை காண்பித்து இபொழுது 10 ருபாய் கொடுப்பாயா என்றும் மிகவும் மட்டமான முறையில் திட்டியும்விட்டது, நான் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தேன் பிறகு அந்த திருநங்கை கன்னத்தில் லேசாக அடித்துவிட்டு சென்றது. என் COMPARTMENTல் இருந்தவர்கள் அனைவரும் அந்த திருநங்கையை திட்டிதீர்த்தார்கள். திருநங்கையாக பிறந்தது அவர்களின் தவறா?, அவர்களை அம்போ என்று விட்டுவிட்ட இவர்களின் குடும்பத்தின் தவறா?, அல்லது அவர்களுக்காக எந்த துரும்பையும் கிள்ளி போடாத இந்த அரசாங்கத்தின் தவறா?
மும்பையும் புதுமையும்
ஒவ்வொரு முறை மும்பை செல்லும்போதும் நான் உன்னிப்பாக அதன் வளர்ச்சியை ஆராய்வேன் இந்த முறையும் அதை கவனித்தேன் உண்மையில் மும்பை உள்கட்டமைப்பு (INFRASTRUCTURE) துறையில் மிகவும் வேகமாக முன்னேரிகொண்டுவருகிறது. புதுமைகளை புகுத்துவதில் மிகவும் முனைப்புடன் இருப்பது நன்றாக தெரிகிறது. அதற்கு உதாரணமாக அங்கு வேலை நடைபெற்றுக்கொண்டுள்ள MONO மற்றும் METRO ரயில் திட்டங்கள், அதிவேக LOCAL ரயில்கள், அகன்ற 8 LANE கொண்ட அகன்ற சாலைகள் என்று இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். மும்பையுடன் ஒப்பிடும் போது சென்னை மெதுவான வளர்ச்சியே கொண்டுள்ளது என்பது என் கருத்து.
மும்பையில் என் PURCHASE
எப்பொழுது மும்பை சென்றாலும் நான் என் குடும்பத்திற்காக PURCHASE செய்வது வழக்கம். இந்த முறையும் நான் PURCHASE செய்த அனுபவம் மிகவும் வேடிக்கையாக அமைந்தது. முதலில் நான் ஷூ வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதற்கு மும்பையில் நல்ல வாய்ப்புகிடைத்தது நிறைய ஷூகளை PLATFORMல் வைத்து விற்றுக்கொண்டிருந்தனர் நான் அங்கு சென்று ஒரு ஜோடி ஷூவை அடுத்து விலையை கேட்டேன் கடைகாரர் 850 என்று பதிலளித்தார் நான் மிகவும் கெட்டிகாரத்தனமாக கேட்பதாக நினைத்து 250க்கு கேட்டேன் உடனே கடைக்காரர் அதை PACK செய்து என்னிடம் கொடுத்துவிட்டார் நானும் அதை அசடுவழிய வாங்கிக்கொண்டு நடையை கட்டினேன், இதே போல சேலை CAR பொம்மைகளை நான் விரும்பிய விலைக்கு PURCHASE செய்து நடைகட்டினேன். எனக்கு ஒரு சந்தேகம் இவற்றின் உண்மையான விலைதான் என்ன? ஏமாந்தது கடைகாரர்களா அல்லது நானா?
Saturday, April 17, 2010
உங்கள் குழந்தைகள் பார்க்கவேண்டிய 25 முக்கிய உலக சுற்றுலா இடங்கள்
TRAVEL PLUS மாத இதழ் உங்கள் குழந்தைகள் வளர்வதற்குள் பார்க்கவேண்டிய உலகின் முக்கிய குழந்தைகள் சுற்றுலா தளங்களை கண்டறிந்து வெளியிட்டுள்ளது. அவற்றை நான் உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன்.
1) முதலாவதாக தென்னாப்ரிக்காவில் SIMEN`S TOWN என்ற இடத்தில உள்ள PENGUIN சரணாலயம். உலகில் 20 இடங்களில் மட்டுமே PENGUINகள் காணப்படுகின்றன அவற்றில் மனிதர்கள் எளிதில் சென்று வரக்கூடிய இடமாக இந்த இடம் உள்ளது.
2) ஜெருசலேம் நகரிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக சென்று வரக்கூடிய இடமாக உள்ளது இந்த DEAD SEA என்றழைக்கப்படும் கடல். இந்தத் கடல் நீரில் உப்பு போன்ற கனிமங்கள் அதிகம், எனவே இந்தத் கடல் நீரின் அடர்த்தி அதிகம். எனவே இந்த கடல் நீரில் நாம் ஒருபோதும் முழுகமாட்டோம். மீன்களும் இந்த கடலில் வாழ்வதில்லை.
3) எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள், பழங்காலத்தில் அங்கு வாழ்ந்த மன்னர்களின் உடல்களை பாதுகாக்ககட்டப்பட்டது. இன்றும் அவர்களது உடல்களை நாம் எகிப்து MUSUEMகளில் காணலாம். அவற்றை MUMMYS என்று அழைக்கின்றனர்.
4) இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காம் நகரத்தில் உள்ள CADBURY WORLD என்றழைக்கப்படும் சாக்லேட் உலகம், இங்கு நீங்கள் சாக்லேட் ல் சிலைகள், வாகனங்கள் போன்றவற்றை இங்கே காணலாம் வேண்டிய அளவு சாக்லேட்களை சாப்பிடலாம்.
5) சாண்டியாகோ நகரில் உள்ள BALBOA PARK, மற்றும் குழந்தைகள் வனவிலங்கு சரனாளையம் இவை இரண்டையும் காணத் தவறாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த இடமாக இந்த இடம் அமையும்.
6) கென்யா நாட்டில் உள்ள மிகப் பெரிய மிருககாட்சி சாலை மற்றும் நகுறு தேசிய பூங்கா.
7) HOLLYWOODல் உள்ள UNIVERSAL STUDIO மற்றும் அங்குள்ள 4D JURASSIC PARK.
8) அமெரிக்காவில் உள்ள DISNEYLAND
9) ANNE FRANK HOUSE - AMSTERDAM இங்கு குழந்தைகள் MUSEUM உள்ளது.
10) NATIONAL AIR AND SPACE MUSEUM - வாஷிங்டன் DC
11) அமேசான் காட்டில் உள்ள RAIN FOREST
12) ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால்
13) IGLOO VILLAGE HOTEL - KAKSLAUTTANEN, FINLAND
14) GIANT`S CAUSEWAY, ANTRIM, IRELAND
15) HARRY POTTER TOUR - ENGLAND இங்கே HARRYPOTTER படத்தில் வந்த இடங்களை குழந்தைகளுக்கு சுற்றிக்காட்டலாம்.
16) MADAME TUSSAUD`S WAXWORK MUSEUM, LONDON இங்கே உள்ள பிரபலங்களின் மெழுகு சிலையை காணலாம்.
17) GREAT BARRIER REEF - QUEENSLAND இங்கே QUENNSLAND கடலில் குளித்து மகிழலாம்.
18) ஸ்ரீலங்காவில் உள்ள BENTOTA MANGROVES காடுகள்.
19) நெதர்லாந்தில் உள்ள MADURODAM, THE HAGUE
20) மவுண்ட் எவரெஸ்ட் - காத்மாண்டுவில் இருந்து வருடத்தில் (FEB-APRIL) மற்றும் (OCT-NOV) மாதங்களில் பிரத்தியேக விமானங்களில் கண்டு வரலாம்.
21) சபர்மதி ஆசிரமம் - AHMADABAD- INDIA மகாத்மா காந்தி வாழ்ந்த புனிய இடம்.
22) THE TERRACOTTA ARMY, X1`AN - சீனா. சீனாவை ஆண்ட முதல் மன்னன் QIN SHI HUANG சுமார் 2000 வருடங்களுக்கு முன் கடிய 8000 செராமிக் படைவீரர்களின் சிலைகளை இங்கே காணலாம்.
23) CORBETT NATIONAL PARK - மற்றும் ZOO இந்தியா
24) ZORB, ROTORUA - இந்தியா
25) NEK CHAND`S ROCK GARDEN, CHANDIGARH - இந்தியா
மேல் சொன்ன இடங்களை உங்கள் குழந்தைகளுக்கு சுற்றிக் காட்டுங்கள் நண்பர்களே வாழ்த்துக்கள்.
1) முதலாவதாக தென்னாப்ரிக்காவில் SIMEN`S TOWN என்ற இடத்தில உள்ள PENGUIN சரணாலயம். உலகில் 20 இடங்களில் மட்டுமே PENGUINகள் காணப்படுகின்றன அவற்றில் மனிதர்கள் எளிதில் சென்று வரக்கூடிய இடமாக இந்த இடம் உள்ளது.
2) ஜெருசலேம் நகரிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக சென்று வரக்கூடிய இடமாக உள்ளது இந்த DEAD SEA என்றழைக்கப்படும் கடல். இந்தத் கடல் நீரில் உப்பு போன்ற கனிமங்கள் அதிகம், எனவே இந்தத் கடல் நீரின் அடர்த்தி அதிகம். எனவே இந்த கடல் நீரில் நாம் ஒருபோதும் முழுகமாட்டோம். மீன்களும் இந்த கடலில் வாழ்வதில்லை.
3) எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள், பழங்காலத்தில் அங்கு வாழ்ந்த மன்னர்களின் உடல்களை பாதுகாக்ககட்டப்பட்டது. இன்றும் அவர்களது உடல்களை நாம் எகிப்து MUSUEMகளில் காணலாம். அவற்றை MUMMYS என்று அழைக்கின்றனர்.
4) இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காம் நகரத்தில் உள்ள CADBURY WORLD என்றழைக்கப்படும் சாக்லேட் உலகம், இங்கு நீங்கள் சாக்லேட் ல் சிலைகள், வாகனங்கள் போன்றவற்றை இங்கே காணலாம் வேண்டிய அளவு சாக்லேட்களை சாப்பிடலாம்.
5) சாண்டியாகோ நகரில் உள்ள BALBOA PARK, மற்றும் குழந்தைகள் வனவிலங்கு சரனாளையம் இவை இரண்டையும் காணத் தவறாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த இடமாக இந்த இடம் அமையும்.
6) கென்யா நாட்டில் உள்ள மிகப் பெரிய மிருககாட்சி சாலை மற்றும் நகுறு தேசிய பூங்கா.
7) HOLLYWOODல் உள்ள UNIVERSAL STUDIO மற்றும் அங்குள்ள 4D JURASSIC PARK.
8) அமெரிக்காவில் உள்ள DISNEYLAND
9) ANNE FRANK HOUSE - AMSTERDAM இங்கு குழந்தைகள் MUSEUM உள்ளது.
10) NATIONAL AIR AND SPACE MUSEUM - வாஷிங்டன் DC
11) அமேசான் காட்டில் உள்ள RAIN FOREST
12) ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால்
13) IGLOO VILLAGE HOTEL - KAKSLAUTTANEN, FINLAND
14) GIANT`S CAUSEWAY, ANTRIM, IRELAND
15) HARRY POTTER TOUR - ENGLAND இங்கே HARRYPOTTER படத்தில் வந்த இடங்களை குழந்தைகளுக்கு சுற்றிக்காட்டலாம்.
16) MADAME TUSSAUD`S WAXWORK MUSEUM, LONDON இங்கே உள்ள பிரபலங்களின் மெழுகு சிலையை காணலாம்.
17) GREAT BARRIER REEF - QUEENSLAND இங்கே QUENNSLAND கடலில் குளித்து மகிழலாம்.
18) ஸ்ரீலங்காவில் உள்ள BENTOTA MANGROVES காடுகள்.
19) நெதர்லாந்தில் உள்ள MADURODAM, THE HAGUE
20) மவுண்ட் எவரெஸ்ட் - காத்மாண்டுவில் இருந்து வருடத்தில் (FEB-APRIL) மற்றும் (OCT-NOV) மாதங்களில் பிரத்தியேக விமானங்களில் கண்டு வரலாம்.
21) சபர்மதி ஆசிரமம் - AHMADABAD- INDIA மகாத்மா காந்தி வாழ்ந்த புனிய இடம்.
22) THE TERRACOTTA ARMY, X1`AN - சீனா. சீனாவை ஆண்ட முதல் மன்னன் QIN SHI HUANG சுமார் 2000 வருடங்களுக்கு முன் கடிய 8000 செராமிக் படைவீரர்களின் சிலைகளை இங்கே காணலாம்.
23) CORBETT NATIONAL PARK - மற்றும் ZOO இந்தியா
24) ZORB, ROTORUA - இந்தியா
25) NEK CHAND`S ROCK GARDEN, CHANDIGARH - இந்தியா
மேல் சொன்ன இடங்களை உங்கள் குழந்தைகளுக்கு சுற்றிக் காட்டுங்கள் நண்பர்களே வாழ்த்துக்கள்.
Saturday, April 10, 2010
இந்தியா VS பாகிஸ்தான்
உலக கோப்பை கபடிப் போட்டி இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதன் அரை இறுதியில் இந்தியா கனடாவை வென்றும், பாகிஸ்தான் இத்தாலியை வென்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இறுதிப் போட்டி நாளை (12-4-2010) அன்று லூதியானாவில் உள்ள குருநானக் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
Friday, April 9, 2010
தேசதுரோகி- சானியா
இந்திய மக்கள் மிகவும் தாராளமனம் கொண்டவர்கள், விளையாட்டில் சிறிய சாதனைகள் செய்தாலே மிகவும் பெரியதாக நினைத்து கொண்டாடுவார்கள். சானியா இந்திய டென்னிசில் இளம் புயல் என்று வர்ணிக்கப்படுபவர். உண்மையில் அவர் எந்த சாதனைகளையும் இதுவரை டென்னிசில் செய்ததில்லை செய்யப்போவதும் இல்லை. ஆனால் தினமும் நாளிதழ் அல்லது வாரஇதழ் போன்றவற்றில் இவரது பேட்டி அல்லது படம் இடம்பிடிப்பது நிச்சயம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களையே கண்டுக்கொள்வதில்லை. ஆனால் இங்கு சானியா ஒரு வெற்றிமங்கை, இளம் சாதனையாளர், மற்றும் ஒரு மிக சிறந்த BRAND. இவர் செய்த சாதனையாக நான் நினைப்பது குட்டை பாவாடை அணிந்து ஆபாசமாக ஆடி பரபரப்பை ஏற்படுத்தியது, பாம்பு தோல் உரிப்பது போல் புதுப் புது நபர்களுடன் கிசுகிசுக்கப்பட்டது போன்றவைகளே ஆகும். இதன் உச்சகட்டமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப்மாலிக்குடன் திருமணம். இதில் மிகவும் கொடுமை சில நாட்களுக்கு முன்பு தான் நமது இளம் புயலுக்கு வேறு ஒரு நபருடன் திருமணமென்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தனர் பிறகு அந்த நபருடன் என கருத்துவேறுபாடோ அல்லது புதுமாப்பிள்ளை சோயப் மாலிக் வந்த நேரமோ பழைய நபரை அப்படியே கழற்றி விட்டுவிட்டார். நான் மற்றும் நாட்டு மக்கள் விரும்புவது திருமணத்திற்கு பிறகு தயவுசெய்து பாகிஸ்தானுக்காகவே டென்னிஸ் விளையாடுங்கள், நீங்கள் செய்த இந்த சாதனைகளே எங்கள் நாட்டிற்க்கு போதும். முஸ்லிம்கள் தலாக் என்று சொல்லுவார்கள் என்று கேள்விபட்டுள்ளேன் விரைவில் அதை எதிர்பார்க்கிறேன்.
Thursday, April 1, 2010
அங்காடி தெரு
வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படமான அங்காடிதெரு படத்தைப் பார்த்தேன், சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணாஸ்டோர்ஸ் கடையை மையமாகக் கொண்டு நகரும் கதையாகவே இது இருக்கிறது. சரவணாஸ்டோர்ஸ் கடையில் நடப்பதாக காட்டியுள்ள மனித உரிமை மீறல்களை அளவுக்கு அதிகமாக படமாக்கியுள்ளனர். சரவணாஸ்டோர்ஸ் கடையானது 10000க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலையை கொடுத்துள்ள ஒரு நேர்மையான நிறுவனம். பொது மக்களுக்கு மற்ற கடைகளை விட குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ஒரு உன்னத நிறுவனமும் கூட, இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தும் அதை விடுத்தது அங்கு வேலை பார்பவர்களை கொத்தடிமை போல் நடத்துவதாக காட்டியுள்ளார் வசந்தபாலன், அதாவது இந்தப் படத்தில் வில்லனாக சரவணாஸ்டோர்ஸ் அதிபரையே காட்டியுள்ளது மிகவும் கொடுமை. வசனகர்த்தா ஜெயாமோகன் பிச்சைகாரர்கள் மற்றும் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதியே நல்ல பணம் பார்க்கத் தெரிந்த ஒரு திறமையான எழுத்தாளர். படத்தில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது. லிங்கமாக புது முகம் (மகேஷ்), கனியாக (அஞ்சலி) பாத்திரதிற்கு ஏற்றார் போல் நடித்துள்ளனர். மற்றபடி இந்தப் படம் நன்றாக இல்லை.
Saturday, March 13, 2010
பாரத் ரத்னா சச்சின்
சச்சினைப் போல் ஒரு பிள்ளை எனக்கு வேண்டும், என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாள் சச்சின் என் TEST CRICKET சாதனையான 400 ரன்களை கடப்பதுதான் இவ்வாறு பத்திரிகை சந்திப்பின் போது பிரைன்லாரா சொல்லியுள்ளார். உன் காலை தொட்டு வணங்க துடிக்கிறேன்- கவாஸ்கர், சச்சினுக்கு பாரத் ரத்னா பட்டத்தை வழங்க இதை விட சிறந்த தருணம் வேறு இல்லை- கபில்தேவ், என் சாதனையை என் நண்பர் சச்சின் முறியடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி- அன்வர், மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சச்சின். திறமையானவர்கள், பரந்தமனமுடையவர்களால் மட்டுமே பிறரை வாழ்த்தமுடியும். இதுவே சச்சினுக்கு பாரதரத்னா கொடுக்க சரியான தருணம். நம் அரசாங்கம் கொடுக்கிறதோ இல்லையோ நான் என் அன்புசச்சினுக்கு பாரத ரத்னா பட்டதை கொடுத்துவிட்டேன்.
Thursday, March 4, 2010
Tuesday, March 2, 2010
கதவை திற ரஞ்சிதா வரட்டும்
முன்னாள் நித்தியானந்த சுவாமிகள் காம லீலை VIDEOல் நமக்கு இரண்டு சந்தேகங்கள் வருகின்றன. ஒன்று SUNNEWSல் ஒளிபரப்பிய வீடியோவில் ரஞ்சிதாவின் முகம் ஏன் மறைக்கப்பட்டுள்ளது? அவளின் முகம் மறைக்கப்பட்டுள்ளதின் காரணம் என்ன? அவளே இந்த CDஐ ஒளிபரப்பும் நோக்குடன் SUNNEWS தொலைக்காட்சிக்கு அனுப்பினாளா? அல்லது சுவாமியுடன் தொடர்பில் உள்ள வேறு பெண்கள் போட்டியின் காரணமாக அனுப்பினார்களா?
எப்படி இருப்பினும் அவரின் மீது வழக்கு தொடுத்து அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. ஒரு மருத்துவர் தவறான சிகிச்சையளித்து நோயாளி இறந்தால் அந்த மருத்துவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறது இந்த சமூகம். ஆனால் போலிச்சாமியார்கள் பிடிபட்டால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. இந்த விசயத்தில் என்ன நடக்கிறது என்று போரிதிருந்து பார்போம். வாழ்க SUNNEWS. உங்களுக்காக இந்த வீடியோ DOWNLOAD செய்யும் LINKஐ கொடுத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=DLdn_1ip6PI
எப்படி இருப்பினும் அவரின் மீது வழக்கு தொடுத்து அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. ஒரு மருத்துவர் தவறான சிகிச்சையளித்து நோயாளி இறந்தால் அந்த மருத்துவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறது இந்த சமூகம். ஆனால் போலிச்சாமியார்கள் பிடிபட்டால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. இந்த விசயத்தில் என்ன நடக்கிறது என்று போரிதிருந்து பார்போம். வாழ்க SUNNEWS. உங்களுக்காக இந்த வீடியோ DOWNLOAD செய்யும் LINKஐ கொடுத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=DLdn_1ip6PI
கதவை திற பெண்கள் வரட்டும்
பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.
திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற நித்தியானந்த சாமியார், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் இவரது ஆசிரமத்துக்கு சென்று வரும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் மக்களுக்கு சொல்வது கடவுளை நம்புங்கள் இதுபோல் சாமியார்களை ஒருபோதும் நம்பாதீர்கள். இன்று ஒரு நித்யானந்தம் நாளை வேறு ஒருவர் என்று வந்துக்கொண்டே தான் இருப்பர், நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.(நன்றி நக்கீரன் வாரஇதழ்)
Sunday, February 28, 2010
சாதனை நாயகன் சச்சின்
சச்சினின் சாதனைகளை கம்ப்யூட்டரில் அடக்குவது கடினம். அவரது ஒருதின சாதனைகளில் முக்கிய சாதனைகளை இங்கே காண்போம். ஒருதின போட்டிகளில் அதிக ரன்கள் (17558), அதிக சதங்கள் (46), அதிக அரைசதங்கள் (93), ஒருபோட்டியில் அதிக ரன்கள் (200*), அதிக ஆட்டநாயகன் விருது (61), அதிக தொடர் நாயகன் விருது (15), உலககோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் (1796), உலக கோப்பை போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்றவர், ஒரு உலக கோப்பை போட்டியில் அதிக ரன்கள் (523), ஒரு ஆண்டில் அதிக சதங்களை 1998ம் ஆண்டு (9 சதங்கள்), ஒருநாள் போட்டியில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்தவர் (5), ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர், ஒரு தினப்போட்டியில் ஒரு வருடத்தில் 1000 ரன்களை அதிக முறை எடுத்தவர் (7), அதிக 4S அடித்துள்ளவர் (1927), தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடியவர் (185 போட்டிகள் 1990 முதல் 1998 வரை) நான் இங்கே கொடுத்துள்ளது சச்சினின் ஒருதின சாதனைகளில் சில இன்னும் டெஸ்ட் போட்டிகளில் சாதனைகளான அதிக டெஸ்ட் ரன்கள் (13447), அதிக டெஸ்ட் சதங்கள் (47) இன்னும் பல சாதனைகளின் சொந்தக்காரராக உள்ளார் LITTLE MASTER சச்சின். அவர் மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டும் அதற்கு அவரில் உடல் நிலையும் ஒத்துழைக்கவேண்டும் என்று இறைவனை வணங்குவோமாக.
Saturday, February 27, 2010
24/02/2010 உலக ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த நாள். ஒருநாள் கிரிக்கெட் ஒரு INNINGSல் 200 ரன்களை அடித்த முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையை LITTLE MASTER சச்சின் டெண்டுல்கர் செய்தார். 1971 வருடம் முதல் ஒருதின கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன, பற்பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், பல ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையாகவே இந்த சாதனை இருந்துவந்துள்ளது. இந்த சாதனை செய்ய கிரிகெட்டின் மீது சச்சினுக்கு இருக்கும் அதீத ஆர்வம் (PASSION) முக்கிய காரணம். சிலர் அவரின் வயதை சுட்டிக்காட்டி பலவாறு விமர்சனம் செய்து வந்தனர். அதற்கும் இந்த இரட்டைசதம் மூலம் அவர்களின் வாயை மிகப்பெரிய பூட்டு கொண்டு பூட்டிவிட்டார் சச்சின். சச்சின் இதுவரை தன் மீது எழும் விமர்சனத்திற்கு தனது BAT மூலம் மட்டுமே பதில் அளித்துவந்துள்ளார். அவர் நல்ல உடல்நிலையுடன் இருந்து மேலும் பல சாதனைகள் செய்யவேண்டும் என்று கடவுளை வேண்டுவோம்.
Subscribe to:
Posts (Atom)