Friday, March 11, 2011

SPECTRUM FRIENDS!!!

          தற்பொழுது தமிழ்நாட்டில் SPECTRUM FRIENDS யார் என்று ஒரு சிறு குழந்தையை கேட்டாலும் திமுக, காங்கிரஸ் என்று நொடிப்பொழுதில் சொல்லிவிடும். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் இந்த ஈனப்பிறவிகள் அரசியலை தேர்ந்தெடுத்துள்ளன.

          நம் தமிழ்நாடு மக்களும் சூடு சொரணை இல்லாதவர்களாகவே உள்ளனர், இல்லையென்றால் இந்த கேவலமான ஊழல் கூட்டணியை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடையவைத்திருக்கமாட்டார்கள். எனக்கு தற்பொழுதும் இதே போல் நடந்துவிடுமோ என்று மிகவும் வருந்துகிறேன். அவ்வாறு நடந்தால் தமிழகமக்களே உங்களை நிச்சயம் எவராலும் காப்பாற்ற இயலாது. இவர்களின் கொட்டம் மீண்டும் தொடங்கிவிடும்.

          அடிப்படை வசதி கூட செய்துதர இயலாத இந்த கூட்டணி அரசாங்கம் மீண்டும் தேவையா? தமிழ்நாட்டில் தற்பொழுது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒரு சட்டமோ அல்லது தீர்விற்கு ஒரு சிந்தனையோ இல்லாத இந்த அரசாங்கம் தேவையா? தமிழக அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் என்ற இந்த நிலைக்கு காரணமான இந்த நிர்வாகதிறமை இல்லாத கருணாநிதி தேவையா? தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு கொலை மற்றும் கொள்ளை நடைபெறுகிறது இதை தடுக்கமுடியாத கையாலாகாத அரசு தேவையா? மகன், மகள்,பேரன், பேத்தி, மனைவி, துணைவி என்று அனைவரின் வளங்கள் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் ஒரு குடும்பத்தலைவரின் ஆட்சி தேவையா? தண்ணீர் முதல் பெட்ரோல் வரை மக்களுக்கு தினம் ஒரு விலையில் கிடைக்க செய்த மோசமான தலைவரின் ஆட்சி தேவையா? தயவுசெய்து சிறிது சிந்தித்து ஓட்டளிக்கவும்

1 comment:

  1. A.D.M.K friend you receive money for your ward and spectrum friend u vote

    ReplyDelete