Thursday, June 23, 2011

மீண்டும் உயருது பெட்ரோல், டீசல் வாழ்க காங்கிரஸ் அரசாங்கம்!!!

          இப்பொழுது எந்த நாளேடை திருப்பினாலும் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருகிறது என்று எழுதுகிறார்கள். படிக்கும்பொழுதே தலை சுற்றுகிறது. நானும் இனி மோட்டார் சைக்கிள் தவிர்த்து சிறு வேலைகளுக்கு சைக்கிள் ஓட்டிப்பழக வேண்டும் என்று என் மனதில் கூறிக்கொண்டே இருந்தேன், நேற்று சைக்கிளை எடுத்துக்கொண்டு மார்கெட் வரையில் சென்று காய்கறிகள் வாங்கி வந்தேன். என் சட்டை முழுவதும் வேர்வையில் நனைத்து, நான் என்னவோ கொத்தனார் வேலையில் இருந்து வந்தது போல் காட்சியளித்தேன். என் கால்கள் இயங்க மறுத்தன, பிறகு மெத்தையில் விழுந்து ACயின் நனைந்ததும் தான் பழைய நிலைக்கு வந்தேன். இப்பொழுது தான் தெரிகிறது சைக்கிள் ஒட்டுவது எவ்வளவு கஷ்டம் மேலும் ஏன் இந்த மோட்டார் சைக்கிள்கள் இவ்வளவு அதிகமாக விற்பனை ஆகின்றன என்றும் தெரிந்தது.

          தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டிய மக்கள். மக்களின் நலனில் அக்கறையே இல்லாத மத்திய காங்கிரஸ் அரசிற்கும் முடிவு கட்டுவார்களா என்று எதிர்ப்பார்க்கிறேன். அதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் உள்ளது. அதுவரை விதியை நொந்தப்படி நான்.

No comments:

Post a Comment