Saturday, May 21, 2011

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் தேர் திருவிழா!!!

          இன்று காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் படத்தை நீங்களும் கண்டுகளியுங்கள்.



Friday, May 20, 2011

நிஜ ஹீரோக்கள் ஷைனி மற்றும் பூஷன்!!!

          எதிர்ப்பார்த்தது போலவே கவிஞர் கனிமொழி களி தின்பதற்கு திகார் சிறைக்கு சென்றுவிட்டார். இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டுள்ள நீதிபதிகளான ஷைனி மற்றும் பூஷன் இவர்களையே அனைத்து பெருமைகளும் சாரும், மேலும் இவர்களின் கடமை தொடரவும் என் வாழ்த்துக்கள். இனி ஊழல் மற்றும் முறைகேடு செய்பவர்கள் எவரையும் நீதியின் முன் நிறுத்தவும் மற்றும் நீதியை நிலைநாட்டவும் இந்த வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு முன்னுதாரணமாகவும் தவறு செய்பவர்கள் எவராயினும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கடுமையான தண்டனை கிடைக்க செய்யும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு அமையவேண்டும்.

          மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தங்களுக்கு SPECTRUM கிடைப்பதற்காக லாபி செய்த அனைவரும் கைதுசெய்வது மட்டுமின்றி அவ்வாறு கிடைக்கப்பெற்ற SPECTRUM LICENCE ரத்து செய்யப்படவேண்டும். இந்த நீதிபதிகள் தற்பொழுது பாதி கிணற்றை தாண்டிவிட்டனர் என்றே தெரிகிறது, இவர்கள் தொடர்ந்து இந்தவழக்கில் அக்கறை எடுத்து நல்ல முறையில் வழக்கை முடிக்கவேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

Saturday, May 14, 2011

மீண்டும் அம்மா ஆட்சி!!

          எதிர்பார்த்தது போலவே ஆதிமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் வீண் வாய்சவடால் செய்துகொண்டிருந்த திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைசிறுத்தை போன்றக் கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.


          இந்தத் தேர்தலில் ஜெயலலிதா மகிழ்ச்சி அடைகிறாரோ இல்லையோ, கேப்டன் விஜயகாந்த் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கருணாநிதி & சன்ஸ் மற்றும் கருணாநிதி & கோ போன்றவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருந்தாகவேண்டும்.