Thursday, March 10, 2011

கருணாநிதி இந்த தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு கேட்பார்?

          கருணாநிதி இந்த தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு கேட்பார்? அவருக்கு சில யோசனைகள்,

ஈழத்தில் அப்பாவித்தமிழர்களை படுகொலை செய்தது நான்தான் எனவே ஓட்டு போடுங்கள்.

அதிக பாராட்டு விழா நடந்தது இந்த ஆட்சியில் தான், ரஜினி, வைரமுத்து, ராமநாராயணன், கமலை வேண்டுமானால் கேட்டுக்கொள்ளுங்கள்.

இந்தியாவிலேயே மின்வெட்டை முறையாக இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரையறை செய்தது திமுக அரசுதான், அறிவிக்கப்படாத மின்வெட்டு என்றும் இருந்தது இல்லை.

இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே என் குடும்ப உறுப்பினர்களாலேயே மட்டும் நடத்தப்படும் ஒரே கட்சி திமுக தான்.

ஒரு ரூபாய் அரிசியின் மூலம் இந்தியாவிலேயே கால்நடை மற்றும் பறவை இனங்களுக்கு வாழ்வளிதுள்ள ஒரே கட்சி திமுக.

என் குடும்ப உறுப்பினர்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில்களிலும் கால்பதித்து REALESTATE முதல் சினிமா வரை தொழில் துறையினருக்கு பலத்த போட்டியை உருவாக்கியுள்ளேன்.

தொழில் துறையில் மிகப்பெரும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க செய்து முறையாக கமிஷன் பெற்று எனது குடும்பத்திற்கு ஒப்படைத்த ஒரே கட்சி திமுக.

பொதுமக்களை முக்கியமாக பெண்கள் நகையுடன் வெளியே செல்ல எப்பொழுதும் எங்கள் கட்சி அனுமதித்ததில்லை, அதே போல் ரவுடிகள் அனைவரும் எங்கள் கட்டுப்பாட்டில் மகிழ்ச்சியாக வைத்துள்ளதும் ஒரு சாதனையே.

இந்த தள்ளாத வயதிலும் நிதானம் தவறாமல் குடும்பத்தை காப்பாற்றும் எந்த அரசியல் தலைவரையாவது இந்த தேசம் பார்த்துள்ளதா? இவற்றையெல்லாம் மனதில் வைத்து இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

1 comment:

  1. ஏழைகள் "இருக்கும்" வரை இலவசங்கள் தொடருமென்று வாய் கூசாமல் அறிவித்த ஒரே முதல்வர் நான் தான்!அதனால் மீண்டும்?!என்னையே முதல்வராக்க ஓட்டுப் போடுங்கள்!

    ReplyDelete