Saturday, June 4, 2011

தயாநிதிக்கும் களி தின்ன ஆசை!!!

          கனிமொழியை தொடர்ந்து தயாநிதிமாறனுக்கு திகார் ஜெயில் களி தின்பதற்கு ஆசை வந்துவிட்டது, விரைவில் அவரது ஆசை நிறைவேறும் என்று நம்புவோமாக. கருணாநிதி கூடா நட்பு கேடு என்று மீண்டும் தனது பழைய பஞ்சாங்க பேச்சை பேச தொடங்கிவிட்டார். ஊழல் செய்யும் தனது குடும்பத்தை தடுக்க யோகியதை இல்லாத முதுகெலும்பில்லாத கிழவர் என்பதை மீண்டும் நிருபித்துவிட்டார். தனது குடும்பத்திற்கு அளித்த முக்கியத்துவம் தான் கடந்த தேர்தலில் தான் பெற்ற படுதோல்விக்கு காரணம் என்று தெரிந்து வைத்துக்கொண்டே காங்கிரஸ் கட்சியை குறை சொல்லிக்கொண்டுள்ளார். அவரது மகன் அஞ்சாநெஞ்சன் அழகிரி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, ஆனால் தேர்தல் முடிவுக்கு முன் என்ன வாய்சவடால் பேச்சை பேசிக்கொண்டிருந்தார் இந்த மனிதர். அனைத்திற்கும் தமிழக மக்கள் பதில் சொல்லிவிட்டார்கள். இன்னும் எங்கள் கட்சியை சேர்ந்த எவரும் தவறு செய்யவில்லை என்று கூரிக்கொண்டுள்ளது மிகவும் நகைப்பிற்குரியது.

No comments:

Post a Comment