Friday, July 1, 2011

என் அருமை 25 பைசாவே!!!

          இன்று முதல் 25 பைசாக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பார்த்தவுடன் ஏனோ என் இளமை கால நினைவுகள் என் கண்முன்னே நிழலாடியது. 1985 வாக்கில் 25 பைசாவை கடைக்கு கொண்டுசென்றால் வத்தல், முறுக்கு, காரம், மாங்காய் போன்ற தின்பண்டங்களை கை நிறைய வாங்கி சாப்பிடலாம். நான் என் தம்பி மற்றும் என் தங்கை இவற்றை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தோம். என் தந்தை, பாட்டி, வாத்தியார் தாத்தா இவர்கள் எங்களுக்கு 25 பைசாவே கைசெலவிற்கு கொடுப்பார்கள் 
           மேலும் ஒரு இட்லி, ஒரு முட்டை, 5 வடைகள் 25 பைசாவிற்கே கிடைக்கும். தற்பொழுது என் தங்கை மகன், என் தங்கையிடம் அம்மா நான் பள்ளிக்கு செல்லவேண்டும் எனக்கு 10 ரூபாய் கைசெலவிற்கு கொடுக்கவும் என்று கேட்கிறான். இவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.


No comments:

Post a Comment