Tuesday, March 29, 2011

நாடகக் கூட்டணி!!!!

          திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் என்ன சொல்லி ஒட்டு கேட்பதென்று தெரியவில்லை. கலைஞர் கடந்த 5 வருடங்களும் செய்த செயல்கள் காலத்தின் கட்டாயம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதையே சாதனைகளாக சொல்லி ஒட்டு கேட்பது மிகவும் நகைப்புக்குரியது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மேடையிலும் திமுக கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் இருப்பது போல ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டும் உள்ளதை மக்கள் நம்புகிறார்கள் என்றும் நினைக்கின்றனர். சிறிது தினங்களுக்கு முன்பு வரை இந்த பச்சோந்தி ராமதாஸ் என்னென்ன வசை பாடினார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இப்பொழுது அதை மறந்து ஒரே மேடையில் அமர்ந்து ஆறாவது முறையாக கருணாநிதியை முதல்வராக்குவோம் என்று முழங்குகிறார் இல்லை இல்லை தன் மகன் மேல் சபை MP பதவிக்காக நடிக்கிறார். ஆனால் எதிர் கட்சிகள் ஒன்றாக இல்லை என்று கிண்டல் செய்கின்றனர் ராமதாஸ் மற்றும் திருமாவும்.

          மேற்கண்ட கூட்டணிக்கட்சிகளைப் போல் ஜெயலலிதாவிற்கு நடிக்கத்தெரியாது, ஒரே மேடையில் நின்று ஒருவரின் கைகளைப்பிடித்துக்கொண்டு நாடகமாடத் தெரியாது, எப்பொழுதும் போல் எதார்த்தமாகவே அதிமுக கூட்டணி வாக்கு கேட்டுக்கொண்டுள்ளனர். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் எண்ணம் இவர்களுக்கில்லை. நாங்கள் இப்படிதான் என்று உண்மை முகத்துடன் தனித்தனியே ஒட்டுக்கேட்கின்றனர் இவற்றையும் மக்கள் நன்கு அறிவர். இது இந்தத் தேர்தல் முடிவுகளில் தெரியும்.

Saturday, March 26, 2011

மு.கருணாநிதி - அரசியல் ஆக்டோபஸ்

          கட்சித் தலைவராக கருணாநிதியை தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்! ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?

          திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன், அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

          கருணாநிதியின் தலைமையில் திமுக வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருது. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் மதிய புலனாய்வு துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம் என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது.


          42 ஆண்டுகளாக திமுகவின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. தலைமை நாற்காலியை பெரியாருக்காக காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி திமுகவில் இருக்கும் என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை. அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா? கருணாநிதியா என்ற சண்டை வந்தப்பொழுது, பொதுசெயலாளராக நெடுஞ்செழியனும், தலைவராக கருணாநிதியும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.

          1980ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்றப பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்தப் பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்திற்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால், அன்பகம் ஸ்டாலினுக்கு. இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாலர்களாகவே வளம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுசெயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

          கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலிமாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமண்ட்ராத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராகப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துகணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்து கணிப்பு குறைத்து மதிபிட்டிருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோரும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார். தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியை கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தப்பொழுது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
           இன்றைய நிலையில் திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்.

அதிகார மையங்கள் 

          குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தாழ் எடுத்து வளம் வருகிறார்கள். ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ .டி காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் பர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை. ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்தாக தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினேட்டுக்குள் நுழைந்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராசாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும். கனிமொழிக்கு தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்ல்வியை சினம் கொள்ள வைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார். கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியை கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மையாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, திமுகவின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கியமான அதிகார மையம்!

கோடம்பாக்கமே கோபாலபுரம் 

          இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை! திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிச்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டிவி கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்றப புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே கலைஞர் டிவி. என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன்-கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.

          அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயின்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துறை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும் தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் வெளியே சொல்ல முடியவில்லை.

          பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜயின் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக திமுககாரராக அறிமுகமான அவரது அப்பா ஜெயலலிதாவைப் போய் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

          தமிழரசுவின் மகன் அருள்நிதி, வம்சம் படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்காள் மகன் அமிர்தம் கலைஞர் டிவியைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.

          கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் முக முது, அவரது மகன் அறிவுநிதி, சினிமாவில் பாடுகிறார். சென்னையில் திடீர்ரென அவரது கட்டவுடுகள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உருப்பிரனரே கிழித்துவிட்டார், நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்கவேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று.

இன்னல்மிகு இல்லத்தரசிகள் 

          கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியதில்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் இவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை. உடல் நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டிவிக்கான பங்குகளில் 60% அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், SPECTRUM விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டிவி. 214 கோடிகளை வாய்ந்கியது என்பதை CBI தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். இதனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று CBI அடம்பிடிக்க தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதோடு CBI விடுகிறதா என்பது தெரியவில்லை. முழு கிளைமாக்ஸ் மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

          இவருக்கு நேர் மாறானவர் ராசாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது SPECTRUM தரகர் நீரா ராடியாவுடன் ராசாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்தினமும் பேசியதும், வோல்டாஸ் கட்டிடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராசாத்தியின் உதவியாளர் சரவணன் சம்மந்தப்பட்டதும் முற்றும்ப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

இனி இவர்கள் கையில்!

          அடுத்து புதிய வாரிசுகள் மெல்ல உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்ம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது. ஸ்டாலினின் மருமகள் கிர்த்திகா, ஒரு பத்திரிகையாளராக வளம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் விஷன் என்றப பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அடிக்கடி சர்ச்சைகளில் அடிப்படும். தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாகவேண்டும். சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

                                                              நன்றி ஆனந்த விகடன்        

Tuesday, March 22, 2011

ராமதாஸ், திருமா, வைகோ- ஒற்றுமைகள்!!!

          அதிமுக கூட்டணியில் 8 முதல் 12 தொகுதிகள் கொடுப்பதாக சொல்லியும் தேர்தலை புறக்கணிப்பதாகவும், ஜெயலலிதா பேய் பிசாசு, திமிர் பிடித்தவர் என்று தற்பொழுது குலைக்கும் வைகோ சிறிதேனும் யோசிக்கவேண்டும். அவரின் மதிமுகவிற்கு ஓட்டு வங்கி என்று ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த நிலையில் மேற்சொன்ன தொகுதிகளே அதிகம். நாஞ்சில் சம்பத் எமது தலைவர் வைகோ சிறந்த பேச்சாளர் அவர் இல்லாமல் எந்த கூட்டணியும் வெற்றிபெறாது என்று காமெடி செய்துள்ளது நடிகர் வடிவேல் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியதை விட காமெடி. 

          வைகோ, ராமதாஸ், திருமா இவர்கள் மூன்று கட்சிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு, எவருக்கும் தமிழகத்தில் ஓட்டு வங்கி என்பதே கிடையாது, மாறாக வாய்சவடால் வீரர்கள். ஒவ்வொரு முறையும் இதை வைத்தே கூட்டணி தொகுதிகளை பெற்றுவருகின்றனர் இவர்கள். இவர்களின் மிரட்டலுக்கு எப்பொழுதுமே பயப்படுபவர் கருணாநிதி மட்டுமே. அதை தெரிந்தே அங்கு சென்று ராமதாஸ் மற்றும் திருமா ஒட்டிக்கொண்டனர். வைகோ வழக்கம் போல் ஏமாந்துவிட்டார்.

          திருமாவளவன் மேடைகளில் ஏறினால் அவர் மிகவும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு இலங்கை தமிழர்களைப் பற்றியும் அவர்கள் துயரத்தையும் பேசுவது வாடிக்கை. ஆனால் உண்மையில் இவரும் சக MPக்களும் இலங்கைக்கு சென்றிருந்தப்பொழுது இலங்கை அரசை எதிர்த்து பேச நல்ல வாய்ப்பிருந்தும் அதை வேண்டுமென்றே தவிர்த்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் வாய்ப்பேச்சை தொடங்கிவிட்டார். இவர் தலித்துகளும் ஒன்றும் செய்யவில்லை செய்யப்போவதும் இல்லை, இலங்கை தமிழர்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. தற்பொழுது ஒரு MLA SEAT இரண்டு கோடி முதல் ஐந்து கோடி வரை விற்றுக்கொண்டுள்ளார். இதை என்ன என்று சொல்வது??


          அடுத்து ராமதாஸ் இவரைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. மூளை என்று ஒன்றில்லாமல் முன்னுக்குப்பின் முரணாக பேசுவதே இவரின் கொள்கை. இவருக்கும் கடந்த பலவருடங்களாக ஓட்டு வங்கி தேய்ந்துக்கொண்டே வந்துள்ளது எனினும் இதை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் அவர்களை ஜெயாடிவியா? தினமலரா? என்றெல்லாம் வசைப்பாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். முக்கியமாக கடந்த சில வருடங்களாக இவர் உள்ள கூட்டணி தோல்வியையே கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் செயல்பாடுகளை இந்தத் தேர்தல்களில் பொறுத்திருந்து பார்போம்.

Sunday, March 20, 2011

நாய்க்கு எலும்புத்துண்டு மக்களுக்கு இலவசம்!!!

          வரும் தேர்தலில் எப்படியேனும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து, தனது குடும்பம் செழிக்கவேண்டும் என்று கருணாநிதி உறுதி பூண்டுவிட்டார். நாய்களுக்கு எலும்புத்துண்டுகளைப் போட்டால் அவைகள் நம்மைப்பார்த்து வாலாட்டும் நமக்கு உண்மையாக இருக்கும். அதேப்போல் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசங்களை அள்ளி கொடுத்தால் அவர்கள் நமக்கே ஓட்டளிப்பர் என்று நினைத்துக்கொண்டுள்ளார் கருணாநிதி. இந்தத் தேர்தலில் அது நடக்கப்போவதில்லை, மாறாக மக்கள் அவர் மற்றும் அவரின் அறிக்கையை தூக்கி எரியப்போவது உறுதி. 


          தமிழக மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் இலவசங்களின் மூலம் ஒரு நாட்டையோ அல்லது ஏழைகளையோ உயர்த்த முடியவே முடியாது, மாறாக அவர்களின் வாழ்க்கைத்தரம் மேலும் குறைந்துவிடும் என்பதே உண்மை. கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஓட்டளித்து இலவசங்களைப்பெற்றிருந்தாலும், உண்மையில் விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு, தமிழ்நாட்டின் கடன் சுமை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது இவையே தமிழ்நாட்டின் இன்றைய உண்மை நிலைமை. இதை ஒவ்வொரு தமிழககுடிமகனும் நன்கு உணர்ந்து வரும் தேர்தலில் வாக்களிக்கவேண்டும்.

           ஏற்கனவே தமிழக குடிமக்களாகிய நாம் காமராஜர் என்ற அற்புத தெய்வத்தை தோற்கடித்து இந்த கருணாநிதி என்றப்பேயை தமிழ்நாட்டில் உலவவிட்டுவிட்டோம். எம்ஜிஆர் இருந்த வரை இந்த பேய் வாலை சுருட்டிக்கொண்டிருந்தது. அதற்குப்பிறகு இந்தப்பேயின் கொட்டத்தை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. இந்தப் பேயின் கொட்டத்தை அடக்க நமக்கு தற்பொழுதுள்ள ஒரே வாய்ப்பு அதிமுக தான். எனவே இந்தத் தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பீர்!! நலம் பெறுவீர்!!!

Saturday, March 19, 2011

கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் மனைவி மற்றும் நண்பிகளும்!!!

          கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் மனைவி மற்றும் நண்பிகள் படத்தை காண கீழே உள்ள LINKஐ CLICK செய்யவும்.

தேர்தல் கமிஷனின் அராஜகம்!!!

          கடந்த சில நாட்களாக என் ரத்தத்தை அரசியல் கட்சிகள் மட்டுமே  கொதிப்படைய செய்துவந்தன, தற்பொழுது அந்த வேலையை தேர்தல் கமிஷன் செய்கிறது. எவ்வளவுதான் அதிகாரம் இருந்தாலும் அப்பாவி பொதுமக்களின் அன்றாட வியாபார விஷயங்களில் தலையிட்டு அவர்களுக்கு தொல்லைக்கொடுப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும். சிறு வியாபாரிகள் கொண்டுசெல்லும் வியாபார பொருட்கள், பணம் போன்றவற்றை வேண்டுமென்றே சோதனை என்றப்பெயரில் அவர்களுக்கு இம்சை செய்தும், அரசியல்வாதிகள் கொண்டுசெல்லும் பணத்தை கோடைவிட்டு அவர்களுக்கு உதவுவதும் மிகவும் கண்டனத்திற்கு உரியது. இதை அவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும், தைரியம் இருந்தால் அண்ணா அறிவாலயம் மற்றும் அதிமுக தலைமைகழகம் போன்றவற்றில் சோதனை செய்துகொள்ளவும். திருடர்கள் அங்கிருக்க யாரை திருப்திபடுத்த இந்த சோதனை? 

          அனைத்து அரசியல் கட்சிகளின் தொலைக்காட்சிகளும் சாதாரண மக்களிடம் சோதனை செய்வதை மற்றும் பிடிபடுவதை தங்கள் எதிர்க்கட்சிகள் செய்த தவறைப்போல சித்தரிப்பது மிகவும் கொடுமை. அரசியல் கட்சிகள் பிணங்கள் கொண்டுசெல்லும் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணத்தை கடத்துகின்றனர் என்று தெரிகிறது. இதுவரை இது போன்ற எத்தனை வாகனங்களை சோதனை செய்துள்ளனர்? இதை யாரிடம் கேட்பது? கடவுளே பொதுமக்களை காப்பாற்று!!!!

Wednesday, March 16, 2011

வெற்றியிலிருந்து தோல்வியை நோக்கி ஜெயலலிதா!!!

          கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை எந்தக்கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றிபெறும் என்று கேட்டிருந்தால் அதிமுக என்று தாராளமாக சொல்லியிருக்கலாம். ஆனால் தற்பொழுது கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமலும் மதிமுகவை மதிக்காமலும் தனிச்சையாக ஜெயலலிதா அவர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அவர் தோல்வியை நோக்கி செல்வதை காட்டுகிறது. விஜயகாந்த் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக இவர்கள் இப்பொழுது மூன்றாம் அணியை அமைக்கவிருப்பது கருணாநிதிக்கு வெற்றியை எளிமையாகுகிறது. இதை ஜெயலலிதா அறியாமலா இருப்பார்? கருணாநிதியின் வெற்றிக்கு ஜெயலலிதாவே காரணம், அடுத்த 5 வருடமும் NO 81-போயஸ் கார்டன் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க முடிவு செய்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள்.

Friday, March 11, 2011

SPECTRUM FRIENDS!!!

          தற்பொழுது தமிழ்நாட்டில் SPECTRUM FRIENDS யார் என்று ஒரு சிறு குழந்தையை கேட்டாலும் திமுக, காங்கிரஸ் என்று நொடிப்பொழுதில் சொல்லிவிடும். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் இந்த ஈனப்பிறவிகள் அரசியலை தேர்ந்தெடுத்துள்ளன.

          நம் தமிழ்நாடு மக்களும் சூடு சொரணை இல்லாதவர்களாகவே உள்ளனர், இல்லையென்றால் இந்த கேவலமான ஊழல் கூட்டணியை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடையவைத்திருக்கமாட்டார்கள். எனக்கு தற்பொழுதும் இதே போல் நடந்துவிடுமோ என்று மிகவும் வருந்துகிறேன். அவ்வாறு நடந்தால் தமிழகமக்களே உங்களை நிச்சயம் எவராலும் காப்பாற்ற இயலாது. இவர்களின் கொட்டம் மீண்டும் தொடங்கிவிடும்.

          அடிப்படை வசதி கூட செய்துதர இயலாத இந்த கூட்டணி அரசாங்கம் மீண்டும் தேவையா? தமிழ்நாட்டில் தற்பொழுது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒரு சட்டமோ அல்லது தீர்விற்கு ஒரு சிந்தனையோ இல்லாத இந்த அரசாங்கம் தேவையா? தமிழக அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் என்ற இந்த நிலைக்கு காரணமான இந்த நிர்வாகதிறமை இல்லாத கருணாநிதி தேவையா? தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு கொலை மற்றும் கொள்ளை நடைபெறுகிறது இதை தடுக்கமுடியாத கையாலாகாத அரசு தேவையா? மகன், மகள்,பேரன், பேத்தி, மனைவி, துணைவி என்று அனைவரின் வளங்கள் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் ஒரு குடும்பத்தலைவரின் ஆட்சி தேவையா? தண்ணீர் முதல் பெட்ரோல் வரை மக்களுக்கு தினம் ஒரு விலையில் கிடைக்க செய்த மோசமான தலைவரின் ஆட்சி தேவையா? தயவுசெய்து சிறிது சிந்தித்து ஓட்டளிக்கவும்

Thursday, March 10, 2011

கருணாநிதி இந்த தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு கேட்பார்?

          கருணாநிதி இந்த தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு கேட்பார்? அவருக்கு சில யோசனைகள்,

ஈழத்தில் அப்பாவித்தமிழர்களை படுகொலை செய்தது நான்தான் எனவே ஓட்டு போடுங்கள்.

அதிக பாராட்டு விழா நடந்தது இந்த ஆட்சியில் தான், ரஜினி, வைரமுத்து, ராமநாராயணன், கமலை வேண்டுமானால் கேட்டுக்கொள்ளுங்கள்.

இந்தியாவிலேயே மின்வெட்டை முறையாக இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரையறை செய்தது திமுக அரசுதான், அறிவிக்கப்படாத மின்வெட்டு என்றும் இருந்தது இல்லை.

இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே என் குடும்ப உறுப்பினர்களாலேயே மட்டும் நடத்தப்படும் ஒரே கட்சி திமுக தான்.

ஒரு ரூபாய் அரிசியின் மூலம் இந்தியாவிலேயே கால்நடை மற்றும் பறவை இனங்களுக்கு வாழ்வளிதுள்ள ஒரே கட்சி திமுக.

என் குடும்ப உறுப்பினர்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில்களிலும் கால்பதித்து REALESTATE முதல் சினிமா வரை தொழில் துறையினருக்கு பலத்த போட்டியை உருவாக்கியுள்ளேன்.

தொழில் துறையில் மிகப்பெரும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க செய்து முறையாக கமிஷன் பெற்று எனது குடும்பத்திற்கு ஒப்படைத்த ஒரே கட்சி திமுக.

பொதுமக்களை முக்கியமாக பெண்கள் நகையுடன் வெளியே செல்ல எப்பொழுதும் எங்கள் கட்சி அனுமதித்ததில்லை, அதே போல் ரவுடிகள் அனைவரும் எங்கள் கட்டுப்பாட்டில் மகிழ்ச்சியாக வைத்துள்ளதும் ஒரு சாதனையே.

இந்த தள்ளாத வயதிலும் நிதானம் தவறாமல் குடும்பத்தை காப்பாற்றும் எந்த அரசியல் தலைவரையாவது இந்த தேசம் பார்த்துள்ளதா? இவற்றையெல்லாம் மனதில் வைத்து இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Tuesday, March 8, 2011

எல்லாம் மக்களுக்குத் தெரியும்!!!

          தமிழகத்தில் இல்லாத கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் கெஞ்சி அவர்களுக்கு 63 தொகுதிகளை கொடுத்துள்ளது திமுக. பாமகவிற்கு தேவையே இல்லாத 30. கேட்டால் கருணாநிதி ஒரு ராஜாதந்திரி என்கிறார்கள் இதை என்னவென்று சொல்வது? முட்டாள்களை எல்லாம் கூட்டணியில் வைத்துக்கொண்டிருக்கும் முட்டாள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

         மக்கள் வருந்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் அரசாங்கம் எடுத்த பொழுதெல்லாம் வாய் மூடியிருந்த கருணாநிதி, தொகுதிப்பங்கீட்டில் காங்கிரஸ் சிறிது அதிகமாக கேட்கவே உறவை முறிக்கும் நாடகம் நடத்தி அதில் தோல்வியும் அடைந்துவிட்டார்.

          கருணாநிதியின் ஜால்ராக்கள் (கி.வீரமணி, திருமாவளவன்) இப்பொழுது என்ன சொல்வார்கள்? காங்கிரஸ்ஐ கூட்டணியில் சேர்த்ததற்காக கருணாநிதியை புகழ்வர்களா? அனைத்தையும் பொறுமையுடன் கவனித்துக்கொண்டுள்ள மக்கள் இந்த தேர்தலில் இந்த மானங்கெட்ட கூட்டணிக்கு தக்க பதிலளிப்பார்கள்.

Sunday, March 6, 2011

காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒரு கடிதம்!!!

          இன்று (7/3/2011) ஒரு முக்கியமான நாளாகும், இன்று CRUDE OIL புதிய இரண்டுவருட உச்சத்தை தொட்டுள்ளது (4822) மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. தங்கம் அதன் புது உச்சத்தையும், வெள்ளி அதன் புது உச்சத்தையும் இன்று அடைந்துள்ளன. மேலும் இந்த விலை உயர்வுகள் தொடரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

          காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டு முதல் மூன்று ரூபாய் அதிகரிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் என்னைப் போல் நடுத்தர வர்கத்தினர் மற்றும் ஏழைகள் சைக்கிள் பயணத்தை தொடர்வதை தவிர வேறு வழி இல்லை. அதைப் பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. CRUDE ஆயில் 6000 என்ற விலையில் இருந்தபொழுதே பெட்ரோல் மற்றும் டீசல் தற்பொழுதை விட குறைவாகவே இருந்தன. அப்பொழுது அந்தந்த பெட்ரோலிய கம்பெனிகள் சம்பாதிக்காத நஷ்டத்தை தற்பொழுது சம்பாதிக்கின்றனவா? இவற்றை விளக்க எவரும் இல்லை. தற்பொழுது நஷ்டம் ஏற்படுகின்றதென்றால் CRUDE 6000 விற்றபொழுது எவ்வாறு குறைவாக விலையை நிர்ணயிக்க முடிந்தது?

          மக்கள் அனைவரும் இங்கு வருந்தும்பொழுது யாரை திருப்பதிப்படுத்த இந்த தொடர் விலையேற்றம்? இவ்வளவு நாள் நீங்கள் கொள்ளையடித்தது போதாதா? மக்களின் நலனில் தற்பொழுதாவது சிறிது அக்கறை எடுத்தால் என்ன? திமுகவிடம் தொகுதிகள் வாங்குவதில் காட்டிய கண்டிப்பை நாட்டின் மிகமுக்கிய பிரச்னையான இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வில் காட்ட தயங்குவதேன்?

          இந்த விலை உயர்வால் மீண்டும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் அதிகமாக உயருமே? விவசாய உற்பத்தியும் மிகவும் குறைந்துள்ள தற்போதய நிலையில் மக்கள் எவ்வாறு இந்த உயர்வை தாங்குவர்? இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?
                                                                                                                 வருத்ததுடன் நான்    

பயம் என்றால் என்ன? கருணாநிதியை கேளுங்கள்

          தமிழ்நாட்டில் ஒட்டு வங்கியே இல்லாத காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்டதற்கே கருணாநிதிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. நேற்று அவரை சந்தித்த திருமாவளவன் இந்தக்கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று அறிவித்துள்ளார், மேலும் கோழை பாமாக கட்சி இன்று இந்தக்கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று அறிவித்துள்ளது, மேலும் கருணாநிதியின் ஜால்ரா கீ.வீரமணி மானமுள்ள தமிழன் காங்கிரஸ் கட்சி வெளியேறியதை வரவேற்பான் என்றெல்லாம் சொல்லி கருணாநிதிக்கு பயத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளனர், கருணாநிதி 2001ல் உதிரிக்கட்சிகளை கொண்டு அமைத்த கூட்டணிபோலவே இந்த முறையும் அமைத்துள்ளார். கருணாநிதி குடும்பம் கடந்த ஐந்து ஆண்டுகள் செய்த அட்டுழியங்களை மக்கள் நிச்சயம் இந்தத்தேர்தலில் மறக்கமாட்டார்கள்.

                கீழே உள்ளது அனைத்தும் உண்மையே கற்பனை அல்ல 

அழகிரி(சாதனை) - இரண்டு அல்லது மூன்று கொலைகள், ETC

கனிமொழி(சாதனை) -உலக மகா SPECTRUM ஊழல், ETC 

உதயநிதி ஸ்டாலின் (சாதனை) - பலக்கோடி கருப்புப்பணத்தை FLAP படங்கள் மூலம் வெள்ளையாக் மாற்றிக்கொண்டது.

தயாநிதி அழகிரி (சாதனை) - மேர்கண்டவரைப்பார்த்து அதைக்கூட சரியாக காப்பியடிக்கத் தெரியாதவர்.(அப்பாவைப் போலவே வெத்துவேட்டு)

ஸ்டாலின் (சாதனை) - இவர்கள் அனைவரும் செய்யும் சேஷ்டைகளை முதல்வர் பதவிக்காக பொருத்துக்கொண்டது.

கருணாநிதி(சாதனை) - ஜால்ராக்களை வைத்துக்கொண்டு காமெடி ஆட்சி நடத்தியது.

Saturday, March 5, 2011

கூட்டணி முறிவு அடுத்து கனிமொழி கைது!!!

          திமுக மற்றும் காங்கிரஸ் உறவு முறிந்ததற்கு கலைஞர் தனது அறிக்கையில் 57 தொகுதிகள் கேட்டார்கள் பிறகு 60 கேட்டார்கள் நாங்கள் அதற்கும் ஒத்துக்கொண்டோம் பிறகு இப்பொழுது 63 தொகுதிகள் வேண்டும் அதையும் நாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்வோம் என்று கூறினார்கள் என்று கூறுகிறார், இது சுத்தப் பொய்.
           உண்மை -- SPECTRUM ஊழலில் கனிமொழி கைதாவதை முடிந்தவரையில் தடுக்கப்பார்த்து முடியவில்லை என்றவுடன் கூட்டணியை கருணாநிதி முரித்துக்கொண்டுள்ளார் என்பதே உண்மை. விரைவில் கனிமொழி கைதாவதை நாம் காணலாம். இன்னும் இரு மாதங்களில் அழகிரி, தயாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி போன்ற கருணாநிதி & COயின் அக்கிரமங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று தாராளமாக நம்பலாம்.