Saturday, March 26, 2011

மு.கருணாநிதி - அரசியல் ஆக்டோபஸ்

          கட்சித் தலைவராக கருணாநிதியை தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்! ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?

          திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன், அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

          கருணாநிதியின் தலைமையில் திமுக வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருது. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் மதிய புலனாய்வு துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம் என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது.


          42 ஆண்டுகளாக திமுகவின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. தலைமை நாற்காலியை பெரியாருக்காக காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி திமுகவில் இருக்கும் என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை. அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா? கருணாநிதியா என்ற சண்டை வந்தப்பொழுது, பொதுசெயலாளராக நெடுஞ்செழியனும், தலைவராக கருணாநிதியும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.

          1980ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்றப பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்தப் பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்திற்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால், அன்பகம் ஸ்டாலினுக்கு. இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாலர்களாகவே வளம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுசெயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

          கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலிமாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமண்ட்ராத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராகப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துகணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்து கணிப்பு குறைத்து மதிபிட்டிருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோரும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார். தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியை கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தப்பொழுது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
           இன்றைய நிலையில் திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்.

அதிகார மையங்கள் 

          குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தாழ் எடுத்து வளம் வருகிறார்கள். ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ .டி காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் பர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை. ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்தாக தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினேட்டுக்குள் நுழைந்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராசாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும். கனிமொழிக்கு தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்ல்வியை சினம் கொள்ள வைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார். கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியை கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மையாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, திமுகவின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கியமான அதிகார மையம்!

கோடம்பாக்கமே கோபாலபுரம் 

          இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை! திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிச்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டிவி கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்றப புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே கலைஞர் டிவி. என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன்-கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.

          அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயின்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துறை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும் தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் வெளியே சொல்ல முடியவில்லை.

          பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜயின் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக திமுககாரராக அறிமுகமான அவரது அப்பா ஜெயலலிதாவைப் போய் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

          தமிழரசுவின் மகன் அருள்நிதி, வம்சம் படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்காள் மகன் அமிர்தம் கலைஞர் டிவியைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.

          கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் முக முது, அவரது மகன் அறிவுநிதி, சினிமாவில் பாடுகிறார். சென்னையில் திடீர்ரென அவரது கட்டவுடுகள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உருப்பிரனரே கிழித்துவிட்டார், நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்கவேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று.

இன்னல்மிகு இல்லத்தரசிகள் 

          கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியதில்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் இவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை. உடல் நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டிவிக்கான பங்குகளில் 60% அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், SPECTRUM விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டிவி. 214 கோடிகளை வாய்ந்கியது என்பதை CBI தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். இதனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று CBI அடம்பிடிக்க தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதோடு CBI விடுகிறதா என்பது தெரியவில்லை. முழு கிளைமாக்ஸ் மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

          இவருக்கு நேர் மாறானவர் ராசாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது SPECTRUM தரகர் நீரா ராடியாவுடன் ராசாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்தினமும் பேசியதும், வோல்டாஸ் கட்டிடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராசாத்தியின் உதவியாளர் சரவணன் சம்மந்தப்பட்டதும் முற்றும்ப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

இனி இவர்கள் கையில்!

          அடுத்து புதிய வாரிசுகள் மெல்ல உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்ம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது. ஸ்டாலினின் மருமகள் கிர்த்திகா, ஒரு பத்திரிகையாளராக வளம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் விஷன் என்றப பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அடிக்கடி சர்ச்சைகளில் அடிப்படும். தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாகவேண்டும். சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

                                                              நன்றி ஆனந்த விகடன்        

No comments:

Post a Comment