Saturday, March 13, 2010

பாரத் ரத்னா சச்சின்

      
சச்சினைப் போல் ஒரு பிள்ளை எனக்கு வேண்டும், என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாள் சச்சின் என் TEST CRICKET சாதனையான 400 ரன்களை கடப்பதுதான் இவ்வாறு பத்திரிகை சந்திப்பின் போது பிரைன்லாரா சொல்லியுள்ளார். உன் காலை தொட்டு வணங்க துடிக்கிறேன்- கவாஸ்கர், சச்சினுக்கு பாரத் ரத்னா பட்டத்தை வழங்க இதை விட சிறந்த தருணம் வேறு இல்லை- கபில்தேவ், என் சாதனையை என் நண்பர் சச்சின் முறியடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி- அன்வர், மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சச்சின். திறமையானவர்கள், பரந்தமனமுடையவர்களால் மட்டுமே பிறரை வாழ்த்தமுடியும். இதுவே சச்சினுக்கு பாரதரத்னா கொடுக்க சரியான தருணம். நம் அரசாங்கம் கொடுக்கிறதோ இல்லையோ நான் என் அன்புசச்சினுக்கு பாரத ரத்னா பட்டதை கொடுத்துவிட்டேன். 

Thursday, March 4, 2010

இது எப்படி இருக்கு?

 
          பாருங்கள் உங்கள் குரு நித்யானந்தாவை.  


         

Tuesday, March 2, 2010

கதவை திற ரஞ்சிதா வரட்டும்

          முன்னாள் நித்தியானந்த சுவாமிகள் காம லீலை VIDEOல் நமக்கு இரண்டு சந்தேகங்கள் வருகின்றன. ஒன்று SUNNEWSல் ஒளிபரப்பிய வீடியோவில் ரஞ்சிதாவின் முகம் ஏன் மறைக்கப்பட்டுள்ளது? அவளின் முகம் மறைக்கப்பட்டுள்ளதின் காரணம் என்ன? அவளே இந்த CDஐ ஒளிபரப்பும் நோக்குடன் SUNNEWS தொலைக்காட்சிக்கு அனுப்பினாளா? அல்லது  சுவாமியுடன் தொடர்பில் உள்ள வேறு பெண்கள் போட்டியின் காரணமாக அனுப்பினார்களா?
         
          எப்படி இருப்பினும் அவரின் மீது வழக்கு தொடுத்து அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. ஒரு மருத்துவர் தவறான சிகிச்சையளித்து நோயாளி இறந்தால் அந்த மருத்துவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறது இந்த சமூகம். ஆனால் போலிச்சாமியார்கள் பிடிபட்டால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. இந்த விசயத்தில் என்ன நடக்கிறது என்று போரிதிருந்து பார்போம். வாழ்க SUNNEWS. உங்களுக்காக இந்த வீடியோ DOWNLOAD செய்யும் LINKஐ கொடுத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=DLdn_1ip6PI

கதவை திற பெண்கள் வரட்டும்


            பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

          இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

          இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

          திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற நித்தியானந்த சாமியார், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் இவரது ஆசிரமத்துக்கு சென்று வரும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

          நான் மக்களுக்கு சொல்வது  கடவுளை நம்புங்கள் இதுபோல் சாமியார்களை ஒருபோதும் நம்பாதீர்கள். இன்று ஒரு நித்யானந்தம் நாளை வேறு ஒருவர் என்று வந்துக்கொண்டே தான் இருப்பர், நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.(நன்றி நக்கீரன் வாரஇதழ்)