Saturday, February 27, 2010

        
          24/02/2010 உலக ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த நாள். ஒருநாள் கிரிக்கெட் ஒரு INNINGSல் 200 ரன்களை அடித்த முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையை LITTLE MASTER சச்சின் டெண்டுல்கர் செய்தார். 1971 வருடம் முதல் ஒருதின கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன, பற்பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், பல ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையாகவே இந்த சாதனை இருந்துவந்துள்ளது. இந்த சாதனை செய்ய கிரிகெட்டின் மீது சச்சினுக்கு இருக்கும் அதீத ஆர்வம் (PASSION) முக்கிய காரணம். சிலர் அவரின் வயதை சுட்டிக்காட்டி பலவாறு விமர்சனம் செய்து வந்தனர். அதற்கும் இந்த இரட்டைசதம் மூலம் அவர்களின் வாயை மிகப்பெரிய பூட்டு கொண்டு பூட்டிவிட்டார் சச்சின். சச்சின் இதுவரை தன் மீது எழும் விமர்சனத்திற்கு தனது BAT மூலம் மட்டுமே பதில் அளித்துவந்துள்ளார். அவர் நல்ல உடல்நிலையுடன் இருந்து மேலும் பல சாதனைகள் செய்யவேண்டும் என்று கடவுளை வேண்டுவோம்.
Tamilish

No comments:

Post a Comment