Saturday, February 13, 2010

அசல்

         தமிழ் திரைப்பட உலகை மிகவும் பின் நோக்கி அழைத்து செல்வதில் VIJAY, AJIT முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதை மீண்டும் தன் அசல் மூலம் அழுத்தம் திருத்தமாக நிருபித்துள்ளார் AJIT.

 யார் முட்டாள்?

       சமிபத்தில் என் நண்பர்களுடன் அஜீத் நடித்து வெளிவந்துள்ள அசல் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். முதல் நாள் ஆதலால் கூட்டம் அலை மோதும் என்று நினைத்த எங்களுக்கு பெரும் அதிர்ச்சி காரணம் திரையரங்கில் கூட்டமே இல்லை. முதல் காரணம் ஒரு டிக்கெட் 100 என்று விற்கப்பட்டது, இரண்டாவது காரணம் நாங்கள் படத்தை பார்த்ததும் தான் தெரிந்தது, இதைபோல ஒரு மட்டமான திரைப்படத்தை இதுவரை பார்த்ததும் இல்லை இனிமேலும் பார்க்கப்போவதும் இல்லை. இதில் யாரை குறை சொல்வது? மட்டமான கதை மற்றும் திரைக்கதை அமைபிற்காக இயக்குநரையா? இந்த மட்டமான படத்தை தயாரித்த பிரபுவையா? அல்லது இந்தப்படத்தில் மிக மிக மட்டமாகவும், நடிபபுதிறமையே இல்லாமலும் ஆனால் வாய் கொழுப்பு அதிகமாகவும் உள்ள அஜீத் குமாரையா? அல்லது இந்த மட்டமான படத்தை 100 ரூபாய் கொடுத்து பார்த்த நாமா? யார் முட்டாள் ? தயவு செய்து சொல்லுங்கள்

No comments:

Post a Comment