நான் தவறாமல் வருடம்தோறும் புத்தக கண்காட்சிக்கு செல்பவன், இந்த வருடமும் 34வது சென்னை புத்தகக்கண்காட்சிக்கு சென்றேன். இந்தமுறையும் நல்ல கூட்டம் இருந்தது. ஆனால் நாள் பார்த்ததில் சமையல் புத்தககங்கள், சுயமுன்னேற்றப்புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் இவைகள் மட்டுமே நிறைய விற்பதாக தெரிகிறது. ஒரு ஆராய்ச்சியை பற்றிய புத்தகங்களோ, வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பொருளாதாரம் போன்ற புத்தகங்களை சீண்டுவாரில்லை. ஆனால் ஒவ்வொரு கண்காட்சி முடிவிலும் 1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை என்று அனைத்துப் பத்திரிகைகளிலும் வருவதை பார்க்கலாம். நம் பிள்ளைகளுக்கு அவர்களின் ஆர்வம் மற்றும் நாட்டு நலன் போன்றவற்றை வளர்க்கும் நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்கள், அசிரியர்கள் உதவவேண்டும்.
No comments:
Post a Comment