Thursday, January 6, 2011

குன்றின் மீதிட்ட விளக்கு (சரணம் ஐயப்பா)

          என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு ஆங்கில WEBSITE முகவரியை கொடுத்து அதை படிக்க சொல்லியிருந்தார் அதில் இருந்த சுவாரசியமான தகவலை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தை பொங்கலன்று சபரிமலையில் பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் மகரவிளக்கு எவ்வாறு சபரிமலை நம்பூதிரிகளால் போலியாக ஏற்றப்படுகிறது என்பதனை அந்த WEBSITEல் விளக்கமாக புகைப்படம் மற்றும் VIDEO போன்ற ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். இனி அதைப்பற்றி




           சபரிமலையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பொன்னம்பலமேடு. (மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்)இந்த இடத்தில் தான் மகரவிளக்கு ஏற்றப்படுகிறது இங்கே நிரந்தரமாக ஒரு CONCRETE பலகை உள்ளது. (கீழே உள்ள படத்தை பார்க்கவும்) இதன் மீது தேவஸ்தான நம்பூதிரிகளால் ஏற்றப்படுவதே மகரவிளக்கு.








          நான் படித்த அந்த வலைதளத்தில் இன்னும் விரிவாகவே உள்ளது. நான் அந்த வலைதள முகவரியையும் கொடுத்துள்ளேன். http://sinosh.wordpress.com/2008/08/26/makarajyothy/
இனி கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுவதையும், ஒருவருடத்தில் சபரிமலை செல்பவர்களில் குறைந்தபட்சம் 10 பேராவது விபத்தில் பலியாவதையும் தவிர்க்கவும். சுவாமியே சரணம் ஐயப்பா!!!

No comments:

Post a Comment