Thursday, August 18, 2011

எண்ணும் எழுத்தும் "கண்'ணெனத் தகும்!

          சென்னை: பல்லாவரம் அரசு பள்ளியில் கண் பார்வையற்ற ஆசிரியர் ஒருவர், தாம் எடுக்கும் பாடத்தில், மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சி அடைய வைத்து சாதனை செய்து வருகிறார். பல்லாவரம் மறைமலையடிகளார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த பத்தாண்டுகளாக சமூக அறிவியல் ஆசிரியராகப் பணி யாற்றி வருபவர் கோவில் பிள்ளை, 52. கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவரிடம் பயிலும் 9,10 ஆம் வகுப்பு மாணவர்கள், இதுவரை தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி அடைந்து வருகின்றனர். இவரிடம் அன்பாகவும் நடந்து கொள்கின்றனர். குறைபாடற்ற ஆசிரியர்களை யே கிண்டலடித்து, கீழ்படியாமல் போகும் மாணவர்கள் மத்தியில் இது எப்படி சாத்தியமானது? திருநெல்வேலி யாக்கோபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கோவில்பிள்ளை. பார்வையற்ற பிள்ளை என்பதால், அனைவரிடமும் செல்லம் அதிகம். எட்டாம் வகுப்பு வரை மற்ற பிள்ளைகளைப் போலவே பள்ளி சென்று, அங்கு "வாய்மொழி' கல்வி மட்டும் கற்றிருக்கிறார். "படித்து என்ன செய்யப் போகிறோம், வீட்டில் தான் நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்களே' என்கிற எண்ணம் வர படிப்புக்கு, "குட்பை' சொல்லிவிட்டு, பாய் முடையவும், பிளாஸ்டிக் ஒயர்களில் நாற்காலிகள் பின்னவும் கற்றுக்கொண்டிருக்கிறார். சில வருடங்கள் கழித்து படிப்பு தான் முக்கி
யம் எனப்பட, மார்த்தாண்டம் அருகில் ஐரேனிபுரத்திலுள்ள பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில், ஏழாம் வகுப்பு சேர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட பள்ளிப் படிப்பு முடிக்கவேண்டிய வயதில், கோவில்பிள்ளையின் கல்வி பயணம் மறுபடியும் தொடர்ந்தது. அதற்கடுத்து கல்வியின் ருசி பிடித்துப்போய் விட, ஒன்பதாம் வகுப்பை பூந்தமல்லியிலும், கல்லூரிப்படிப்பை மாநிலக் கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவரது தற்போதைய கல்வித்
தகுதி எம்.ஏ.,எம்.எட்., ராமேசுவரத்தில் தன் ஆசிரியப் பணியை துவக்கிய கோவில்பிள்ளை, அதன் பின் கல்பாக்கம் கூவத்தூரிலும் தற்போது பல்லாவரத்திலுமாக 17 வருடங்களாகப் பணியாற்றிவருகிறார். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு முன், தன் கதையை முதல் பாடமாக எடுத்து வைக்கிறார். "ஏழைக்குடும்பத்தில், பார்வையில்லாமல் பிறந்து, முறையற்ற வயதில் கல்வி கற்ற நானே ஆசிரியராக, உயர முடியுமென்றால், எந்த அங்கஹீனமும் இல்லாமல், தன் பிள்ளையை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணும் பெற்றோருக்கு குழந்தையாய்ப் பிறந்து, சரியான வயதில் கல்வி கற்கும் உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும்?' எனக் கேட்டவுடன், ஒவ்வொருமாணவ இதயமும் முறுக்கேறிக் கொள்கிறது. இத்தோடு, ஆதரவற்ற குழந்தைகளுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார் கோயில் பிள்ளை. இதற்கான தேவைகளை நன்கொடைகள் மூலமாக சமாளிக்கின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகளும், பெற்றோரை இழந்த குழந்தைகளுமாக 15 பேர் உள்ளனர். இதை நிர்வகித்து வருபவர் கோவில்பிள்ளையின் மனைவி
நவமணி. இவர் எம்.ஏ.,பி.எட்., பட்டதாரியும் கூட. கோயில்பிள்ளையின் மாணவியாயிருந்து, பின் அவர்பால் ஈர்க்க ப்பட்டு, குடும்பத்தை எதிர்த்து அவரது மனைவியானவர். இத்தம்பதிக்கு பிளஸிங், 10, பிளஸி ஜெபராணி, 7, என இரண்டு குழந்தைகள் உள்ளனர். "எல்லா மாணவர்களுக்கும் அரசு புத்தகம் கொடுக்கும் போது, கண் பார்வையற்ற மாணவர்களுக்கும் "பிரெய்லி' புத்தகங்களை வழங்கினால், அவர்களாகவே, படித்துக் கொள்வார்கள்தானே?' என்று எதார்த்தமாக கேட்ட கோயில்பிள்ளையின் வார்த்தைகளில் ஆதங்கம் எதிரொலித்தது.



எப்படி பாடம் நடத்துகிறார்? : கோயில் பிள்ளையின் மனைவி நவமணி அவருக்கு மனைவியாக மட்டும் சேவை செய்யவில்லை. ஒரு தாயாகவும், வழிகாட்டியாகவும், பாடங்களை படித்துக்காட்டும் ஆசிரியராகவும் விளங்குகின்றார். நவமணி ஒருமுறை பாடங்களைப் படித்துக் காட்ட அவற்றை மனனம் செய்து விட்டு, பின் மாணவர்களுக்கு நடத்துகிறார். தின, "டெஸ்டுகளை' நன்றாகப் படிக்கும் மாணவியர் திருத்திவிட, மற்ற தேர்வுத்தாள்களை திருத்துவது நவமணியே. சமச்சீர்க் கல்வி புத்தகத்தை படித்துக் காட்டிய போது, "நல்லா இருக்கில்ல... ஆனா, "கொஸ்டின் ஸ்டைல்' தான் மாறல' என்று அலுத்துக் கொண்டார் என்கிறார் நவமணி. 
                                                                                                  நன்றி தினமலர் 

Friday, July 1, 2011

என் அருமை 25 பைசாவே!!!

          இன்று முதல் 25 பைசாக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பார்த்தவுடன் ஏனோ என் இளமை கால நினைவுகள் என் கண்முன்னே நிழலாடியது. 1985 வாக்கில் 25 பைசாவை கடைக்கு கொண்டுசென்றால் வத்தல், முறுக்கு, காரம், மாங்காய் போன்ற தின்பண்டங்களை கை நிறைய வாங்கி சாப்பிடலாம். நான் என் தம்பி மற்றும் என் தங்கை இவற்றை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தோம். என் தந்தை, பாட்டி, வாத்தியார் தாத்தா இவர்கள் எங்களுக்கு 25 பைசாவே கைசெலவிற்கு கொடுப்பார்கள் 
           மேலும் ஒரு இட்லி, ஒரு முட்டை, 5 வடைகள் 25 பைசாவிற்கே கிடைக்கும். தற்பொழுது என் தங்கை மகன், என் தங்கையிடம் அம்மா நான் பள்ளிக்கு செல்லவேண்டும் எனக்கு 10 ரூபாய் கைசெலவிற்கு கொடுக்கவும் என்று கேட்கிறான். இவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.


Thursday, June 23, 2011

மீண்டும் உயருது பெட்ரோல், டீசல் வாழ்க காங்கிரஸ் அரசாங்கம்!!!

          இப்பொழுது எந்த நாளேடை திருப்பினாலும் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருகிறது என்று எழுதுகிறார்கள். படிக்கும்பொழுதே தலை சுற்றுகிறது. நானும் இனி மோட்டார் சைக்கிள் தவிர்த்து சிறு வேலைகளுக்கு சைக்கிள் ஓட்டிப்பழக வேண்டும் என்று என் மனதில் கூறிக்கொண்டே இருந்தேன், நேற்று சைக்கிளை எடுத்துக்கொண்டு மார்கெட் வரையில் சென்று காய்கறிகள் வாங்கி வந்தேன். என் சட்டை முழுவதும் வேர்வையில் நனைத்து, நான் என்னவோ கொத்தனார் வேலையில் இருந்து வந்தது போல் காட்சியளித்தேன். என் கால்கள் இயங்க மறுத்தன, பிறகு மெத்தையில் விழுந்து ACயின் நனைந்ததும் தான் பழைய நிலைக்கு வந்தேன். இப்பொழுது தான் தெரிகிறது சைக்கிள் ஒட்டுவது எவ்வளவு கஷ்டம் மேலும் ஏன் இந்த மோட்டார் சைக்கிள்கள் இவ்வளவு அதிகமாக விற்பனை ஆகின்றன என்றும் தெரிந்தது.

          தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டிய மக்கள். மக்களின் நலனில் அக்கறையே இல்லாத மத்திய காங்கிரஸ் அரசிற்கும் முடிவு கட்டுவார்களா என்று எதிர்ப்பார்க்கிறேன். அதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் உள்ளது. அதுவரை விதியை நொந்தப்படி நான்.

Saturday, June 4, 2011

தயாநிதிக்கும் களி தின்ன ஆசை!!!

          கனிமொழியை தொடர்ந்து தயாநிதிமாறனுக்கு திகார் ஜெயில் களி தின்பதற்கு ஆசை வந்துவிட்டது, விரைவில் அவரது ஆசை நிறைவேறும் என்று நம்புவோமாக. கருணாநிதி கூடா நட்பு கேடு என்று மீண்டும் தனது பழைய பஞ்சாங்க பேச்சை பேச தொடங்கிவிட்டார். ஊழல் செய்யும் தனது குடும்பத்தை தடுக்க யோகியதை இல்லாத முதுகெலும்பில்லாத கிழவர் என்பதை மீண்டும் நிருபித்துவிட்டார். தனது குடும்பத்திற்கு அளித்த முக்கியத்துவம் தான் கடந்த தேர்தலில் தான் பெற்ற படுதோல்விக்கு காரணம் என்று தெரிந்து வைத்துக்கொண்டே காங்கிரஸ் கட்சியை குறை சொல்லிக்கொண்டுள்ளார். அவரது மகன் அஞ்சாநெஞ்சன் அழகிரி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, ஆனால் தேர்தல் முடிவுக்கு முன் என்ன வாய்சவடால் பேச்சை பேசிக்கொண்டிருந்தார் இந்த மனிதர். அனைத்திற்கும் தமிழக மக்கள் பதில் சொல்லிவிட்டார்கள். இன்னும் எங்கள் கட்சியை சேர்ந்த எவரும் தவறு செய்யவில்லை என்று கூரிக்கொண்டுள்ளது மிகவும் நகைப்பிற்குரியது.

Saturday, May 21, 2011

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் தேர் திருவிழா!!!

          இன்று காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் படத்தை நீங்களும் கண்டுகளியுங்கள்.



Friday, May 20, 2011

நிஜ ஹீரோக்கள் ஷைனி மற்றும் பூஷன்!!!

          எதிர்ப்பார்த்தது போலவே கவிஞர் கனிமொழி களி தின்பதற்கு திகார் சிறைக்கு சென்றுவிட்டார். இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டுள்ள நீதிபதிகளான ஷைனி மற்றும் பூஷன் இவர்களையே அனைத்து பெருமைகளும் சாரும், மேலும் இவர்களின் கடமை தொடரவும் என் வாழ்த்துக்கள். இனி ஊழல் மற்றும் முறைகேடு செய்பவர்கள் எவரையும் நீதியின் முன் நிறுத்தவும் மற்றும் நீதியை நிலைநாட்டவும் இந்த வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு முன்னுதாரணமாகவும் தவறு செய்பவர்கள் எவராயினும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கடுமையான தண்டனை கிடைக்க செய்யும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு அமையவேண்டும்.

          மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தங்களுக்கு SPECTRUM கிடைப்பதற்காக லாபி செய்த அனைவரும் கைதுசெய்வது மட்டுமின்றி அவ்வாறு கிடைக்கப்பெற்ற SPECTRUM LICENCE ரத்து செய்யப்படவேண்டும். இந்த நீதிபதிகள் தற்பொழுது பாதி கிணற்றை தாண்டிவிட்டனர் என்றே தெரிகிறது, இவர்கள் தொடர்ந்து இந்தவழக்கில் அக்கறை எடுத்து நல்ல முறையில் வழக்கை முடிக்கவேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

Saturday, May 14, 2011

மீண்டும் அம்மா ஆட்சி!!

          எதிர்பார்த்தது போலவே ஆதிமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் வீண் வாய்சவடால் செய்துகொண்டிருந்த திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைசிறுத்தை போன்றக் கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.


          இந்தத் தேர்தலில் ஜெயலலிதா மகிழ்ச்சி அடைகிறாரோ இல்லையோ, கேப்டன் விஜயகாந்த் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கருணாநிதி & சன்ஸ் மற்றும் கருணாநிதி & கோ போன்றவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருந்தாகவேண்டும்.